ஆரோக்கியம்

கத்திரிக்காய் ஊறுகாய் ரெசிபி: 15 நாள் ஆனாலும் கெடாது… எல்லா வித காம்பினேஷனுக்கும் பொருந்தும்!!!

இப்பொழுதெல்லாம் ஒரு வீட்டில் கணவன் மனைவி ஆகிய இருவருமே வேலைக்கு செல்லும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இருவரும் வேலைக்கு சென்றால் தான் செலவுகளை சமாளிக்க முடியும் என்பதால் இருவருமே வேலைக்கு செல்கிறார்கள். இதுபோன்ற சமயத்தில் சமையல் என்பது சற்று கடினமான ஒரு விஷயமாக தான் இருக்கும். இது போன்ற நபர்களுக்காகவே இருக்கிறது சில ரெசிபிகள். இன்று நாம் பார்க்க இருக்கும் இந்த கத்திரிக்காய் ஊறுகாய் 15 நாட்கள் வரை கெட்டுப்போகாமல் இருக்கும். இது இட்லி, தோசை, சப்பாத்தி போன்ற டிபன் வகைகளுக்கு அருமையான தொட்டுக்கையாகவும், அதே நேரத்தில் பருப்பு சாதம், ரசம் சாதம், கீரை சாதம், சாம்பார் சாதம், தயிர் சாதம் போன்றவற்றிற்கு சைடிஷாகவும் சாப்பிடலாம். அப்படியும் இல்லாவிட்டால் வெறும் வெள்ளை சாதத்தில் பிரட்டி கூட சாப்பிடலாம். அவ்வளவு சுவையாக இருக்கும் இந்த கத்திரிக்காய் ஊறுகாய் ரெசிபியை இப்போது பார்க்கலாம்.

ஒரு கடாயில் 2 டேபிள் ஸ்பூன் தனியா, 1/2 டீஸ்பூன் வெந்தயம், ஒரு டீஸ்பூன் கடுகு, ஒரு சிறிய துண்டு கட்டி பெருங்காயம், 10 வர மிளகாய் சேர்த்து வறுத்துக் கொள்ளுங்கள். இந்த பொருட்களை எண்ணெய் ஊற்றி வறுக்க வேண்டாம், ட்ரை ரோஸ்ட் செய்தால் போதுமானது. வறுத்தபிறகு பொருட்கள் அனைத்தும் நன்றாக ஆறியதும் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடியாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.

இப்போது அதே கடாயில் ஒரு குழி கரண்டி அளவு நல்லெண்ணெய் சேர்க்கவும். நல்லெண்ணெய் சூடானதும் 10 முதல் 12 கத்திரிக்காயை காம்பை நீக்கிவிட்டு நடுவில் இரண்டு கோடு போட்டு சேர்த்துக் கொள்ளலாம். கத்திரிக்காயின் தோல் நிறம் மாறியதும் அதனை தனியாக ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ளலாம்.

இப்போது அதே கடாயில் ஏற்கனவே இருக்கும் எண்ணெயோடு மீண்டும் ஒரு கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி 1/2 டீஸ்பூன் கடுகு, 1/2 டீஸ்பூன் வெந்தயம், 10 பூண்டு பற்கள் ஒரு கொத்து கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். அடுத்ததாக நாம் வதக்கி வைத்திருந்த கத்திரிக்காய்களை சேர்த்துக் கொள்ளவும்.

இதனோடு நறுக்கிய ஒரு பெரிய வெங்காயத்தையும் சேர்த்து தேவையான அளவு உப்பு போட்டு கிளறவும். அடுத்து 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் நாம் அரைத்து வைத்துள்ள ஊறுகாய் பொடியை சேர்த்து நன்றாக கிளறவும். ஒரு சிறிய எலுமிச்சம் அளவு புளியை 1/2 கப் தண்ணீரில் கரைத்து அந்த புளிக்கரைசலை சேர்த்துக் கொள்ளவும்.

தண்ணீர் நன்றாக வற்றி எண்ணெய் பிரிந்து ஊறுகாய் பதத்திற்கு வரும் வரை காத்திருக்கவும். அவ்வளவுதான் சுவையான நாவூரும் கத்திரிக்காய் ஊறுகாய் தயார்.

Hema

Hi, I am hema, I am working as a Sub Editor at Updatenews360.

Recent Posts

ரொம்ப கஷ்டம், அவர் இஷ்டத்துக்குதான் நடிப்பாரு- எல்லை மீறிப்போன முருகதாஸ் பட ஹீரோ?

அட்டர் பிளாப் பாலிவுட்டில் ஏ.ஆர்.முருகதாஸ் சல்மான் கானை வைத்து இயக்கிய திரைப்படம் “சிகந்தர்”. இதில் சல்மான் கானுக்கு ஜோடியாக ராஷ்மிகா…

8 hours ago

இசைஞானியே! இது தர்மமா? போஸ்டர் வெளியிட்டு புலம்பும் அஜித் ரசிகர்கள்! அடப்பாவமே…

5 கோடி இழப்பீடு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…

9 hours ago

திமுகவும், கைக்கூலிகளும் வக்பு சொத்தை அபகரித்துள்ளனர் : பாஜக பரபரப்பு குற்றச்சாட்டு!

பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மை அணி தேசிய செயலாளர் வேலூர் இப்ராகிம் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் நடைபெறும் வக்பு திருத்தச்…

9 hours ago

காவல்துறை அனுமதி மறுத்தால் நீதிமன்றம் சென்று மீண்டும் அதே இடத்தில் நடத்துவோம் : பாஜக பிரமுகர் எச்சரிக்கை!

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் காந்தி கலையரங்கத்தில் சட்ட மாமேதை அம்பேத்கரின் பிறந்த நாள் விழா, வக்ஃபு வாரிய சட்ட திருத்தம்…

10 hours ago

வடிவேலு கூட அப்படி ஆகிடுச்சு? மத்தவங்க இருந்ததுனால தப்பிச்சேன்- கவர்ச்சி நடிகை ஓபன் டாக்

வைகைப்புயல் மீது பிராது வைகைப்புயல் என்று அழைக்கப்படும் காமெடி நடிகர் வடிவேலு கோலிவுட்டின் டாப் காமெடி நடிகராக வலம் வந்த…

11 hours ago

This website uses cookies.