பொதுவாக லட்டு செய்ய வேண்டும் என்றால் அதற்கு பூந்தியை எண்ணெயில் போட்டு பொரித்து தயார் செய்வது வழக்கம். ஆனால் இன்று நாம் செய்யப்போகும் பாசிப்பருப்பு லட்டுவிற்கு எண்ணெய் எதுவும் தேவையில்லை. இதனை மிக எளிமையாக செய்துவிடலாம். இது கிட்டத்தட்ட பார்ப்பதற்கு மோட்டிச்சூர் லட்டு போலவே இருக்கும். இப்போது மிகவும் சாஃப்டான பாசிப்பருப்பு லட்டு எப்படி தயார் செய்யலாம் என்பதை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
பாசிப்பருப்பு – ஒரு கப்
சர்க்கரை – ஒரு கப்
நெய் – 5 டீஸ்பூன்
முந்திரி பருப்பு – 10
பாதாம் பருப்பு – 10
பிஸ்தா பருப்பு – 10
ஏலக்காய் பொடி – சிறிதளவு
செய்முறை
*பாசிப்பருப்பு லட்டு செய்வதற்கு முதலில் பாசிப்பருப்பை வறுத்துக் கொள்ள வேண்டும்.
*அதற்கு ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் ஒரு டீஸ்பூன் நெய் சேர்த்து நெய் உருகியதும் ஒரு கப் பாசிப்பருப்பு சேர்த்துக் கொள்ளலாம்.
*இதனை மிதமான தீயில் வைத்து பாசிப்பருப்பு வாசனை வரும் வரை வறுத்துக் கொள்ளுங்கள்.
*இது நன்றாக ஆறியதும் மிக்சி ஜாரில் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளலாம்.
*அடுத்து இந்த பாசிப்பருப்பை வேக வைப்பதற்கு ஒரு பாத்திரத்தில் 3 கப் அளவு தண்ணீர் ஊற்றி, தண்ணீர் சூடானதும் அரைத்து வைத்த பாசிப்பருப்பை சேர்த்து மூடி போட்டு வேகவைக்கவும்.
*பாசிப்பருப்பு வெந்து தண்ணீர் முழுவதுமாக வற்றி கெட்டியானவுடன் அதில் ஒரு கப் சர்க்கரை சேர்த்து கிளறவும். சர்க்கரைக்கு பதிலாக வெல்லமும் பயன்படுத்தலாம்.
*கைவையை தொடர்ந்து கிளறிக் கொண்டே இருங்கள்.
*தண்ணீர் எதுவும் இல்லாமல் ஓரளவு கெட்டியானவுடன் வாசனைக்காக சிறிதளவு ஏலக்காய் பொடி சேர்த்து அடுப்பை அணைத்து விடலாம்.
*இப்பொழுது மற்றொரு கடாயில் 4 டேபிள் ஸ்பூன் நெய் சேர்த்து அதில் 10 உடைத்த முந்திரி, 10 உடைத்த பிஸ்தா பருப்பு, 10 பாதாம் சேர்த்து அதனை நாம் தயார் செய்து வைத்துள்ள பாசிப்பருப்பு கலவையில் சேர்த்து கிளறவும்.
*கையில் எண்ணெய் அல்லது நெய் தடவி தயார் செய்து வைத்துள்ள பாசிப்பருப்பு கலவையிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து உருண்டை பிடிக்கவும்.
*அவ்வளவுதான் சாஃப்டான வாயில் உருகி போகும் பாசிப்பருப்பு லட்டு தயார்.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.