ஒரு சிலருக்கு இருமல் மற்றும் ஜலதோஷம் பிடித்தால் ஓரிரு நாட்கள் இருந்து விட்டு சென்றுவிடும். ஆனால் ஒரு சிலருக்கு என்ன தான் வைத்தியம் செய்தாலும் அவர்களை விட்டு செல்லாமல் பாடாய் படுத்தும். இதற்காக மருந்து, மாத்திரை, சிரப் என சாப்பிட வேண்டி இருக்கும். தற்போது இதற்கு ஒரு இயற்கையான தீர்வு ஒன்று தெரிய வந்துள்ளது. சுவையான ஒரு பழச்சாறு மூலமாக இருமலை போக்குவது எப்படி என்பது பற்றி தெரிந்து கொள்ளலாம்.
இருமலை போக்க அன்னாசி பழச்சாறு செய்வதற்கான 3 வழிகள்:-
◆முறை 1: அன்னாசி பழச்சாறு மற்றும் தேன்
ஒரு பாத்திரத்தில் அரை கப் வெதுவெதுப்பான அன்னாசி பழச்சாறு மற்றும் ஒரு தேக்கரண்டி தேன் எடுத்துக் கொள்ளவும். இரண்டையும் நன்றாகக் கலந்து சிறிது சூடு ஆறியதும் குடிக்கவும். தேன் மற்றும் அன்னாசி இரண்டும் உங்கள் தொண்டையை ஆற்றும் மற்றும் இருமலில் இருந்து நிவாரணம் அளிக்கும்.
◆முறை 2: அன்னாசி பழச்சாறு, தேன், உப்பு மற்றும் மிளகு
ஒரு கப் அன்னாசி பழச்சாறு எடுத்து அதில் அரை டேபிள் ஸ்பூன் தேன், ஒரு சிட்டிகை உப்பு மற்றும் ஒரு சிட்டிகை மிளகுத்தூள் சேர்க்கவும். இந்த அனைத்து பொருட்களையும் நன்றாக கலந்து, இந்த கலவையை ஒரு நாளைக்கு மூன்று முறை குடிக்கவும்.
◆முறை 3: அன்னாசி பழச்சாறு, தேன், இஞ்சி, மிளகு மற்றும் உப்பு
இருமல் மற்றும் சளியிலிருந்து நிவாரணம் பெற இது ஒரு பாரம்பரிய மருந்து. ஒரு கப் அன்னாசி பழச்சாறு, 1 டேபிள் ஸ்பூன் தேன், 1 டேபிள் ஸ்பூன் நறுக்கிய இஞ்சி, 1 சிட்டிகை உப்பு, சிறிதளவு மிளகு ஆகியவற்றை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைக்கவும். தொண்டை வலியிலிருந்து விடுபட இதனை 1/4 அளவில் ஒரு நாளைக்கு மூன்று முறை குடிக்கவும்.
நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…
பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…
STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…
நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…
தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…
This website uses cookies.