ஆரோக்கியம்

பருப்பு மட்டும் வைத்து சிம்பிளா ரெஸ்டாரன்ட் ஸ்டைல்ல சூப்!!!

சூப் என்பது செய்வதற்கு எளிமையான ஒன்றாக இருந்தாலும் அது நம்முடைய உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் அதிக பயன்களை கொண்டுள்ளது. இன்று நாம் பாசிப்பருப்பு, காய்கறிகள் மற்றும் கருப்பு மிளகு வைத்து அற்புதமான சூப் எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம். வயிற்றுக்கு பசி எடுக்காத சமயத்தில் இந்த சூப் வைத்து சாப்பிட்டால் நன்றாக பசி எடுக்கும்.

தேவையான பொருட்கள்

பாசிப்பருப்பு – 1/2 கப்

எண்ணெய் – 1 டீஸ்பூன் 

சீரகம் – 1 டீஸ்பூன் 

வெங்காயம் – 1 

கேரட் – 1 

பீன்ஸ் – 5 

பச்சை பட்டாணி – 1/2 கப்

தக்காளி – 1 

மஞ்சள் பொடி – 1 டீஸ்பூன் 

உப்பு – சுவைக்கு ஏற்ப 

கருப்பு மிளகு பொடி 

தண்ணீர் – 3 கப்

செய்முறை 

*ஒரு பிரஷர் குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெயை சூடாக்கவும். அதில் சீரகத்தை சேர்த்து அது பொரிந்த உடன் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து ஒரு நிமிடத்திற்கு வதக்கி கொள்ளவும். 

*பிறகு பொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸ் மற்றும் பட்டாணி சேர்த்து 2 முதல் 3 நிமிடங்களுக்கு வதக்குங்கள். 

*இந்த சமயத்தில் கழுவி சுத்தம் செய்த பாசிப்பருப்பு மற்றும் தக்காளி சேர்த்து வதக்கி தண்ணீர் ஊற்றவும். 

*குக்கர் மூடியை போட்டு அடுப்பை மிதமான தீயில் வைத்து 3 விசில் வரும் வரை காத்திருக்கும். 

இதையும் படிக்கலாமே: தம்மாத்துண்டு புல்லு கேன்சர் வராமல் தடுக்கணும்னு சொல்றாங்க!!!

*விசில் வந்து பிரஷர் அடங்கியவுடன் இன்னும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி உப்பு மற்றும் கருப்பு மிளகு பொடி சேர்த்து சூடாக பரிமாறவும்.

Hema

Hi, I am hema, I am working as a Sub Editor at Updatenews360.

Recent Posts

முரட்டு கம்பேக்கா அமைந்ததா ‘வீர தீர சூரன்’..சூர ஆட்டம் காட்டினாரா விக்ரம்..படத்தின் விமர்சனம்.!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சியான் விக்ரம் நடித்துள்ள "வீர தீர சூரன் பாகம் 2" திரைப்படம் நீண்ட எதிர்பார்ப்புக்கு…

15 minutes ago

மோசடியில் செல்வப்பெருந்தகை அண்ணன் மகன்? திமுகவுக்கு தெரியாமலா? அண்ணாமலை பரபரப்பு குற்றச்சாட்டு!

தூய்மைப் பணியாளர்களைத் தொழில் முனைவோர் ஆக்குகிறோம் என்ற பெயரில் மாபெரும் ஊழலை செல்வப்பெருந்தகை அரங்கேற்றியிருப்பதாக அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். சென்னை:…

28 minutes ago

நழுவிய செந்தில் பாலாஜி.. காத்திருக்கும் ED.. பாஜக செக்!

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்குகளை சேர்த்து விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.…

1 hour ago

யாரும் இத மட்டும் பண்ணிராதீங்க..மனோஜ் இறந்ததற்கு காரணம் வேற..தம்பி ராமையா உருக்கம்.!

தம்பி ராமையாவின் உருக்கமான கருத்து தமிழ் திரைப்பட உலகில் தனித்துவமான பணியைச் செய்து வந்த நடிகரும்,இயக்குநருமான மனோஜ் பாரதிராஜா,திடீர் மரணமடைந்த…

1 hour ago

கலங்கி நின்ற விவசாயி.. கூண்டோடு வந்த வனத்துறை.. கோவையில் தொடரும் சிறுத்தை அச்சம்!

கோவையின் மதுக்கரை அடுத்த பகுதியில் ஆட்டைக் கொன்ற சிறுத்தையைப் பிடிக்க வனத்துறையினர் கூண்டு வைத்து கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். கோயம்புத்தூர்: கோவை…

2 hours ago

வருங்கால CM புஸ்ஸி ஆனந்த்.. கைவிரித்த ECR சரவணன்.. நடந்தது என்ன?

’வருங்கால CM’ என தவெக பொதுச் செயலாளர் பெயரைக் குறிப்பிட்டு ஒட்டப்பட்டுள்ள போஸ்டருக்கு புஸ்ஸி ஆனந்த், ECR சரவணன் விளக்கம்…

3 hours ago

This website uses cookies.