ஆரோக்கியம்

இந்த ஒரு பொருள் இருந்தா வீட்டிலயே நரைமுடிக்கு நேச்சுரல் ஹேர் டை ரெடி பண்ணிடலாம்!!!

நமக்கு வயதாகும் பொழுது இயற்கையான செயல்முறையின் ஒரு பகுதியாக நரைமுடி ஏற்படுவது என்பது ஒரு பொதுவான விஷயம் தான். ஆனால் இளநரை என்பது நாம் பின்பற்றும் மோசமான வாழ்க்கை முறைகளின் காரணமாக ஏற்படுகிறது. எனினும் அதிர்ஷ்டவசமாக மருதாணி பல நூற்றாண்டுகளாக இயற்கையான ஹேர் டை ஆக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இயற்கை பண்புகள் நிறைந்த மருதாணி செயற்கை சாயங்களுக்கு சிறந்த மாற்றாக அமைகிறது.

இது தலைமுடிக்கு நிறத்தை சேர்ப்பது மட்டுமல்லாமல் அதனை வலுவாக மாற்றி தலைமுடிக்கு இயற்கை பளபளப்பை சேர்க்கிறது. மருதாணியில் உள்ள ஊட்டச்சத்துக்கள் தலைமுடிக்கு தேவையான ஆழமான போஷாக்கை வழங்கி, தலைமுடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. உங்களுடைய இளநரை பிரச்சனைக்கு தீர்வு பெறுவதற்கு மருதாணியை எப்படி பயன்படுத்துவது என்பதற்கான 4 எளிய வழிகளை இந்த பதிவில் பார்க்கலாம்.

மருதாணி, எலுமிச்சை மற்றும் காபி 

ஒரு இயற்கை ஹேர் மாஸ்க்கை தயாரித்து உங்களுடைய நரைமுடியை போக்குவதற்கு மருதாணியுடன் எலுமிச்சை சாறு மற்றும் காபியை கலந்து பயன்படுத்தலாம். இதற்கு நீங்கள் ஒரு கப் மருதாணி பொடியில் 1/2 கப் எலுமிச்சை சாறு மற்றும் 1/4 கப் காபி டிகாஷன் சேர்க்க வேண்டும். இதனை உங்களுடைய தலைமுடியில் தடவி தடவுங்கள். குறிப்பாக உங்களுடைய மயிர்கால்களில் தடவுவதற்கு மறந்து விட வேண்டாம். தடவிய பிறகு 2 மணி நேரம் ஊறவைத்த பின்பு வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவுங்கள்.

மருதாணி மற்றும் கற்றாழை 

மருதாணி மற்றும் கற்றாழை நரைமுடியில் இருந்து விடுபடுவதற்கு ஒரு சிறந்த இயற்கை தீர்வாக அமைகிறது. இந்த ஹேர் மாஸ்கை தயாரிப்பதற்கு ஒரு கப் மருதாணி பொடியுடன் 1/2 கப் கற்றாழை ஜெல்லை கலந்து பயன்படுத்துங்கள். நரைமுடி மீது தடவி 2 முதல் 4 மணி நேரம் ஊற வைத்த பின்பு வெதுவெதுப்பான தண்ணீரால் தலைமுடியை அலசுங்கள். இது நரைமுடி பிரச்சனைக்கு தீர்வு தருவது மட்டுமல்லாமல் ஆரோக்கியமான தலைமுடி வளர்ச்சியையும் ஊக்குவிக்கும்.

இதையும் படிக்கலாமே:  கால்சியம் கம்மியா இருந்தா வாழ்க்கை முழுவதும் ரொம்ப கஷ்டப்படணும்… அதனால இந்த குறைபாட்டை கண்டுபிடிப்பது எப்படின்னு தெரிஞ்சுக்கோங்க!!!

மருதாணி, நெல்லிக்காய் மற்றும் தயிர்

நெல்லிக்காயில் உள்ள அதிக அளவு ஆன்டி-ஆக்சிடன்ட்கள் மற்றும் வைட்டமின் C தலைமுடி வளர்ச்சியை ஊக்குவித்து மயிர்க்கால்களை வலிமையாக்கி அதன் நிறத்தை மேம்படுத்துகிறது. இதனால் இது நரைமுடிக்கு இயற்கையான ஒரு தீர்வாக அமைகிறது. இந்த ஹேர் மாஸ்கை தயார் செய்வதற்கு ஒரு கப் மருதாணி பொடியுடன் 2 டீஸ்பூன் நெல்லிக்காய் தூள் மற்றும் சிறிதளவு தயிர் சேர்த்து பேஸ்டாக கலந்து தலைமுடியில் தடவ வேண்டும். ஒரு சில மணி நேரங்கள் காத்திருந்த பிறகு தலைமுடியை அலசுங்கள்.

மருதாணி மற்றும் தேங்காய் எண்ணெய் 

தேங்காய் எண்ணெயில் ஆன்டி-ஆக்சிடன்ட்கள் மற்றும் கொழுப்பு அமிலங்கள் அதிகமாக இருப்பதன் காரணமாக இது தலைமுடிக்கு ஈரப்பதத்தை வழங்கி, ஒரு கண்டிஷனர் போல செயல்பட்டு அதனை பாதுகாக்கிறது. அது மட்டும் அல்லாமல் ஆரோக்கியமான தலைமுடி வளர்ச்சிக்கும் உதவுகிறது. இந்த ஹேர் மாஸ்கை தயார் செய்வதற்கு நீங்கள் மருதாணி பொடியுடன் தேங்காய் எண்ணெயை கலந்து உங்களுடைய தலைமுடி மற்றும் மயிர் கால்களில் தடவ வேண்டும். 2 மணி நேரங்கள் கழித்து கழுவி விட உங்களுக்கு கருமையான மற்றும் பளபளப்பான கூந்தல் கிடைக்கும்.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

Hema

Hi, I am hema, I am working as a Sub Editor at Updatenews360.

Recent Posts

என் வாழ்க்கை முடிந்தது…எல்லாமே போச்சு..பிரபல பாலிவுட் நடிகர் உருக்கம்.!

மனம் உடைஞ்ச சல்மான்கான் பாலிவுட் நடிகர் சல்மான் கான் கடந்த 35 ஆண்டுகளாக இந்திய சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கிறார்.…

9 hours ago

அட செம.!கோவையில் சர்வேதச கிரிக்கெட் மைதானம்…ரசிகர்கள் குஷி.!

மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின் போது முதல்வர் மு.க. ஸ்டாலின்,கோவையில் உலகத் தரம் வாய்ந்த சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்கப்படும் என்று…

9 hours ago

ஜெயிலுக்கு போக ரெடியா இருங்க…ஆபாச வீடியோ லீக்..நடிகை அட்டாக்.!

வீடீயோவை தேடி பார்ப்பவர்களுக்கு எச்சரிக்கை சமீபத்தில் சமூக வலைதளங்களில் நடிகை ஸ்ருதி நாராயணனைப் பற்றிய ஆபாச வீடியோ ஒன்று வெளியானது.…

10 hours ago

3 நாளில் விவாகரத்து.. 19 வயது மகன் செய்த காரியம்.. ஆடு மேய்த்தபோது திடுக்கிடும் சம்பவம்!

விருதுநகர், மல்லாங்கிணறு பகுதியில் தாயுடன் தகாத உறவில் இருந்த நபரைக் குத்திக்கொலை செய்த மகன் உள்பட இருவரை போலீசார் கைது…

11 hours ago

தீராத நோய்…வெளியே சொல்ல பயம்..பிரபல நடிகை வருத்தம்.!

காசநோயால் அவதி தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகையாக 1980 மற்றும் 90-களில் விளங்கிய சுஹாசினி,தமிழ் மட்டுமின்றி தெலுங்கு,மலையாளம்,கன்னடம் ஆகிய மொழிப்படங்களிலும்…

11 hours ago

தண்ணீர் யாருக்கு காட்ட வேண்டும்? விஜய்க்கு அண்ணாமலை பதிலடி!

காங்கிரஸ், திமுகவுக்கு விஜய் தண்ணீர் காட்ட வேண்டும், பாஜகவுக்கு அல்ல என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். டெல்லி:…

12 hours ago

This website uses cookies.