ஆரோக்கியம்

இந்த ஒரு பொருள் இருந்தா வீட்டிலயே நரைமுடிக்கு நேச்சுரல் ஹேர் டை ரெடி பண்ணிடலாம்!!!

நமக்கு வயதாகும் பொழுது இயற்கையான செயல்முறையின் ஒரு பகுதியாக நரைமுடி ஏற்படுவது என்பது ஒரு பொதுவான விஷயம் தான். ஆனால் இளநரை என்பது நாம் பின்பற்றும் மோசமான வாழ்க்கை முறைகளின் காரணமாக ஏற்படுகிறது. எனினும் அதிர்ஷ்டவசமாக மருதாணி பல நூற்றாண்டுகளாக இயற்கையான ஹேர் டை ஆக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இயற்கை பண்புகள் நிறைந்த மருதாணி செயற்கை சாயங்களுக்கு சிறந்த மாற்றாக அமைகிறது.

இது தலைமுடிக்கு நிறத்தை சேர்ப்பது மட்டுமல்லாமல் அதனை வலுவாக மாற்றி தலைமுடிக்கு இயற்கை பளபளப்பை சேர்க்கிறது. மருதாணியில் உள்ள ஊட்டச்சத்துக்கள் தலைமுடிக்கு தேவையான ஆழமான போஷாக்கை வழங்கி, தலைமுடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. உங்களுடைய இளநரை பிரச்சனைக்கு தீர்வு பெறுவதற்கு மருதாணியை எப்படி பயன்படுத்துவது என்பதற்கான 4 எளிய வழிகளை இந்த பதிவில் பார்க்கலாம்.

மருதாணி, எலுமிச்சை மற்றும் காபி 

ஒரு இயற்கை ஹேர் மாஸ்க்கை தயாரித்து உங்களுடைய நரைமுடியை போக்குவதற்கு மருதாணியுடன் எலுமிச்சை சாறு மற்றும் காபியை கலந்து பயன்படுத்தலாம். இதற்கு நீங்கள் ஒரு கப் மருதாணி பொடியில் 1/2 கப் எலுமிச்சை சாறு மற்றும் 1/4 கப் காபி டிகாஷன் சேர்க்க வேண்டும். இதனை உங்களுடைய தலைமுடியில் தடவி தடவுங்கள். குறிப்பாக உங்களுடைய மயிர்கால்களில் தடவுவதற்கு மறந்து விட வேண்டாம். தடவிய பிறகு 2 மணி நேரம் ஊறவைத்த பின்பு வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவுங்கள்.

மருதாணி மற்றும் கற்றாழை 

மருதாணி மற்றும் கற்றாழை நரைமுடியில் இருந்து விடுபடுவதற்கு ஒரு சிறந்த இயற்கை தீர்வாக அமைகிறது. இந்த ஹேர் மாஸ்கை தயாரிப்பதற்கு ஒரு கப் மருதாணி பொடியுடன் 1/2 கப் கற்றாழை ஜெல்லை கலந்து பயன்படுத்துங்கள். நரைமுடி மீது தடவி 2 முதல் 4 மணி நேரம் ஊற வைத்த பின்பு வெதுவெதுப்பான தண்ணீரால் தலைமுடியை அலசுங்கள். இது நரைமுடி பிரச்சனைக்கு தீர்வு தருவது மட்டுமல்லாமல் ஆரோக்கியமான தலைமுடி வளர்ச்சியையும் ஊக்குவிக்கும்.

இதையும் படிக்கலாமே:  கால்சியம் கம்மியா இருந்தா வாழ்க்கை முழுவதும் ரொம்ப கஷ்டப்படணும்… அதனால இந்த குறைபாட்டை கண்டுபிடிப்பது எப்படின்னு தெரிஞ்சுக்கோங்க!!!

மருதாணி, நெல்லிக்காய் மற்றும் தயிர்

நெல்லிக்காயில் உள்ள அதிக அளவு ஆன்டி-ஆக்சிடன்ட்கள் மற்றும் வைட்டமின் C தலைமுடி வளர்ச்சியை ஊக்குவித்து மயிர்க்கால்களை வலிமையாக்கி அதன் நிறத்தை மேம்படுத்துகிறது. இதனால் இது நரைமுடிக்கு இயற்கையான ஒரு தீர்வாக அமைகிறது. இந்த ஹேர் மாஸ்கை தயார் செய்வதற்கு ஒரு கப் மருதாணி பொடியுடன் 2 டீஸ்பூன் நெல்லிக்காய் தூள் மற்றும் சிறிதளவு தயிர் சேர்த்து பேஸ்டாக கலந்து தலைமுடியில் தடவ வேண்டும். ஒரு சில மணி நேரங்கள் காத்திருந்த பிறகு தலைமுடியை அலசுங்கள்.

மருதாணி மற்றும் தேங்காய் எண்ணெய் 

தேங்காய் எண்ணெயில் ஆன்டி-ஆக்சிடன்ட்கள் மற்றும் கொழுப்பு அமிலங்கள் அதிகமாக இருப்பதன் காரணமாக இது தலைமுடிக்கு ஈரப்பதத்தை வழங்கி, ஒரு கண்டிஷனர் போல செயல்பட்டு அதனை பாதுகாக்கிறது. அது மட்டும் அல்லாமல் ஆரோக்கியமான தலைமுடி வளர்ச்சிக்கும் உதவுகிறது. இந்த ஹேர் மாஸ்கை தயார் செய்வதற்கு நீங்கள் மருதாணி பொடியுடன் தேங்காய் எண்ணெயை கலந்து உங்களுடைய தலைமுடி மற்றும் மயிர் கால்களில் தடவ வேண்டும். 2 மணி நேரங்கள் கழித்து கழுவி விட உங்களுக்கு கருமையான மற்றும் பளபளப்பான கூந்தல் கிடைக்கும்.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

Hema

Hi, I am hema, I am working as a Sub Editor at Updatenews360.

Recent Posts

வீட்டை காலி செய்யும் சிறுத்தை சிவா? கங்குவா படத்தால இப்படி ஒரு நிலைமையா வரணும்?

கங்குவா தோல்வி சிவா இயக்கத்தில் சூர்யா நடித்த “கங்குவா” திரைப்படம் கிட்டத்தட்ட ரூ.350 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்டது. ஆனால் இத்திரைப்படம்…

7 minutes ago

ஜாமீன் வேணுமா? அமைச்சர் பதவி வேணுமா? செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் கெடு!

கடந்த வருடம் செப்டம்பர் மாதம் ஜாமீனில் வெளியே வந்த செந்தில் பாலாஜி உடனே அமைச்சராக பதவியேற்றார். மின்துறை மற்றும் மதுவிலக்கு…

44 minutes ago

கதவை சாத்திக்கொண்ட அமிதாப் பச்சன்! விடாமுயற்சியால் வந்த வினை! இவருக்கா இப்படி ஆகணும்?

படுதோல்வி மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “விடாமுயற்சி” திரைப்படம் பாக்ஸ் ஆஃபிஸில் படுதோல்வியடைந்தது.…

1 hour ago

பகல்காமில் நடந்த லியோ படப்பிடிப்பு… தாக்குதல் நடந்த இடத்தில்தான் : ஒளிப்பதிவாளரின் உருக்கம்!

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான படம் லியோ. திரிஷா, மிஷ்கின் சஞ்சய் தத், அர்ஜூன் உட்பட பலர்…

2 hours ago

கோவையில் இருந்து திருப்பதி செல்லும் பேருந்தில் 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை ; ஆந்திர சுற்றுலாத்துறை அதிர்ச்சி!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்வதற்காக ஆந்திர மாநில சுற்றுலாத்துறை சார்பில் சுற்றுலா மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தேவஸ்தானம்…

2 hours ago

நான் ஆடையில்லாம வந்தேன்னு? என்னென்னமோ பேசுறீங்க?- கொதித்தெழுந்த வடிவேலு…

ராஜ்கிரண் அழைத்து வந்த வடிவேலு தனது ரசிகர் ஒருவரின் திருமணத்திற்காக மதுரைக்குச் சென்றிருந்தபோதுதான் வடிவேலுவை முதன்முதலில் சந்தித்தார் ராஜ்கிரண். மீண்டும்…

3 hours ago

This website uses cookies.