நம்முடைய பிள்ளைகளுக்கு நாம் தரக்கூடிய மிகப்பெரிய பரிசுகளில் ஒன்று அவர்கள் வளர்ந்தவுடன் தன்னம்பிக்கையாகவும், சுதந்திரமாகவும் வாழ்க்கையை வாழ்வதற்கான திறனை கொடுப்பது ஆகும். உணர்வுகளை கட்டுப்படுத்துதல், தெளிவாக பேசுதல், திடமான முடிவு எடுக்கும் திறன் போன்றவை நீண்டகால வெற்றி மற்றும் மகிழ்ச்சிக்கு மிகவும் அவசியம். இந்த அத்தியாவசிய திறன்கள் கொண்ட பிள்ளைகள் சவால்களை எளிதாக கையாளுவதோடு மட்டுமல்லாமல், உறவுகளை எப்படி அமைப்பது மற்றும் நிலையில்லாத இந்த உலகத்தில் எவ்வாறு மகிழ்ச்சியாக வாழ்வது என்பதை பெற்றுத் தர உதவும். எனவே உங்களுடைய பிள்ளைகளின் எதிர்காலம் வளமாக இருப்பதற்கு அவர்களுக்கு நீங்கள் கற்றுத் தர வேண்டிய சில வாழ்க்கை திறன்கள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
தெளிவாக பேசும் திறன்
குழந்தைகள் ஒரு கூட்டத்தில் இருக்கும் பொழுது எப்படி பேசுகிறார்கள் என்பதை ஊக்குவிப்பதற்கு வீட்டில் நடக்கும் விவாதங்களில் அவர்களை நீங்கள் சேர்த்துக் கொள்ளலாம். அவர்கள் நினைக்கக்கூடிய விஷயங்களை எந்த ஒரு தயக்கமும் இல்லாமல் தெளிவாக வெளிப்படுத்துவதற்கான அனுமதியை நீங்கள் வழங்க வேண்டும். மேலும் அது மட்டுமல்லாமல் பிறர் பேசும் பொழுது அதனை கவனமாக கேட்கவும், அவர்களுடைய இடத்திலிருந்து அவர்கள் சொல்லும் விஷயத்திற்கு மதிப்பு கொடுக்கவும் கற்றுத் தருவது அவசியம்.
உணர்வு கட்டுப்பாடு
ஒரு குழந்தையின் உணர்வு மற்றும் சமூக மேம்பாட்டின் அடித்தளம் என்பது உணர்வுகளை அவர்கள் எவ்வாறு கையாளுகிறார்கள் என்பதை பொறுத்து அமைகிறது. குழந்தைகள் பொதுவாக மகிழ்ச்சி, எரிச்சல் போன்ற வலிமையான உணர்வுகளை அனுபவிப்பார்கள். ஆனால் இதனை எப்படி கையாள வேண்டும் என்பதை அவர்களுக்கு சொல்லிக் கொடுப்பது பெற்றோர்களின் கடமை.
இதையும் படிச்சு பாருங்க: காலை உணவுக்கு வேக வைத்த முட்டையா… ஆம்லெட்டா… இரண்டுல எது பெஸ்ட்???
பொருளாதார அறிவு
பணத்தை நோக்கிய ஒரு குழந்தையின் எண்ணத்தை பட்ஜெட், சேமிப்பு மற்றும் அத்தியாவசியம் மற்றும் தேவைகளுக்கு இடையே உள்ள வேறுபாடுகள் போன்ற எளிமையான யோசனைகள் மூலமாக உருவாக்கலாம்.
நேரக் கட்டுப்பாடு
நேரத்தை சிறப்பாக கையாள தெரியும் வித்தை தெரிந்த குழந்தைகள் நல்ல கவனிப்பு திறனை கொண்டிருப்பார்கள். வேலைகளை குறித்த நேரத்திற்குள் செய்து முடித்து, அவர்களுடைய வேலைகளை சிறப்பாக நிறைவேற்றுவார்கள். மேலும் ஒரு வழக்கத்தை உருவாக்கி, திட்டங்களை அமைத்து, கடுமையான வேலைகளை கூட சின்ன சின்ன வேலைகளாக பிரித்து செய்யக்கூடிய திறன்களை கற்றுக் கொள்வார்கள்.
கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.
பிக்பாஸ் ஜோடி தெலுங்கு தொலைக்காட்சித் தொடர்களின் மூலம் தனது ஆக்டிங் கெரியரை தொடங்கியவர் பாவனி. அதனை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில்…
ஆந்திர மாநிலம் விஜயநகரம் நகரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் ஒரு மாணவி செல்போன் பேசிக் கொண்டிருந்ததால் ஆத்திரமடைந்த ஆசிரியை…
பட்டத்தை திறந்த கமல் பல ஆண்டுகளாகவே கமல்ஹாசனை நாம் உலக நாயகன் என்றே அழைத்து வந்தோம். ஆனால் திடீரென சென்ற…
அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் சமீபத்தில் வெளியாக கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. குறிப்பாக அஜித் ரசிகர்களுக்கு இந்த…
பேருந்தில் பயணம் செய்த போது கண்டக்டருடன் ஏற்பட்ட கள்ளக்காதல் சம்பவத்தில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் இருகே…
புதுமையான ஆக்சன் படம் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம்…
This website uses cookies.