ஆரோக்கியம்

தயிரோடு இந்த ஒரு பொருளை கலந்து சாப்பிட்டு பாருங்க… செரிமான பிரச்சனை என்ற பேச்சுக்கே இடம் இருக்காது!!!

தயிர் என்பது இந்திய சமையலறையில் ஒரு பிரதான உணவு பொருளாக அமைகிறது. புளிக்க வைக்கப்பட்ட இந்த பாலில் இருந்து எடுக்கப்படும் உணவுப் பொருளில் புரோட்டின், கால்சியம் மற்றும் ப்ரோ-பயோடிக்கள் நிறைந்து இருப்பதால் ஆரோக்கியமான டயட்டுக்கு இது ஒரு சிறந்த உணவாக அமைகிறது. செரிமானம், நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் ரத்த அழுத்தத்தை குறைப்பது போன்ற தயிரின் பயன்கள் ஏராளம். உடலை குளுமைப்படுத்தும் பண்புகள் நிறைந்த தயிர் வயிற்றை ஆற்றி மனதையும் அமைதிப்படுத்துகிறது.

வயிற்று உப்புசம், வயிற்று வலி மற்றும் மலச்சிக்கல் போன்ற செரிமான பிரச்சனைகளால் பலர் அவதிப்படுகின்றனர். எனினும் இவர்கள் தங்களுடைய அன்றாட டயட்டில் தயிரை சேர்த்து வர செரிமான ஆரோக்கியம் மேம்படும். அந்த வகையில் செரிமான பிரச்சனைகளை தவிர்த்து ஆரோக்கியமான குடலை பெறுவதற்கு தயிரோடு நீங்கள் கலந்து சாப்பிட வேண்டிய எளிமையான சில பொருட்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

சீரகம் 

தயிரோடு சீரகப் பொடி கலந்து சாப்பிடுவது செரிமானத்தை மேம்படுத்தும். சீரகத்தில் இயற்கையான செரிமான பண்புகள் இருப்பதால் இது வயிற்று உப்புசம் மற்றும் வாயுவை போக்குகிறது. அதே நேரத்தில் தயிரில் உள்ள ப்ரோ-பயோடிக்கள் ஆரோக்கியமான குடலை பராமரிக்கிறது. இந்த இரண்டும் இணைந்து செரிமான அமைப்பை அமைதிப்படுத்தி, வீக்கத்தை குறைக்கிறது.

புதினா இலைகள் 

தயிருடன் ஒரு சில புதினா இலைகளை சேர்த்து சாப்பிடுவது செரிமான அமைப்புக்கு புத்துயிர் கொடுக்கும். புதினாவில் உள்ள இயற்கை எண்ணெய்கள் அஜீரணத்தை போக்கி, குமட்டல் மற்றும் இரிட்டபுள் பவல் சிண்ட்ரோம் பிரச்சனைக்கு தீர்வாக அமைகிறது. தயிர் குடலில் உள்ள நன்மை தரும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியை அதிகரிக்கிறது. குளிர்ச்சி தரும் இந்த 2 பொருட்களுமே வயிற்றை அமைதிப்படுத்தி, வீக்கத்தை குறைத்து, செரிமானத்தை சுமுகமானதாக மாற்றுகிறது.

இதையும் படிக்கலாமே:  பெருசா செலவு எதுவும் பண்ண மாட்டேன்… ஆனா நேச்சுரல் குலோ வேணும்னு கேட்கறவங்களுக்கு இந்த பொருள் கரெக்ட்டா இருக்கும்!!!

கருப்பு மிளகு 

செரிமானத்தை மேம்படுத்துவதற்கு நீங்கள் தயிரோடு கருப்பு மிளகு சேர்த்து சாப்பிடலாம். கருப்பு மிளகில் உள்ள பைப்பரின் என்ற பொருள் செரிமான நொதிகளை தூண்டி, ஊட்டச்சத்து உறிஞ்சுதலை அதிகப்படுத்துகிறது. அதே நேரத்தில் தயிரில் உள்ள ப்ரோ-பயோடிக்கள் ஆரோக்கியமான குடல் அமைப்பை பராமரிக்கிறது. இந்த காம்பினேஷன் வயிற்று உப்புசம், வயிற்று வலி மற்றும் அஜீரணத்தை போக்கி, செரிமான செயல்முறையை சீராக்குகிறது.

கல் உப்பு 

தயிரோடு கல் உப்பு சேர்த்து சாப்பிடுவது செரிமான பிரச்சனைகளுக்கு ஒரு இயற்கையான மற்றும் பயனுள்ள தீர்வாக அமையும். கல் உப்பில் காணப்படும் மினரல்கள் செரிமான நொதிகளை தூண்டுகிறது. இந்த இரண்டும் இணைந்து ஆரோக்கியமான செரிமானத்தை தருகிறது.

பெருங்காயம்

பெருங்காயத்தில் உள்ள ஆக்டிவ் காம்பவுண்டுகள் வயிற்று உப்புசம், வாயு தொல்லை மற்றும் அஜீரணத்திலிருந்து நிவாரணம் தருகிறது. இதனை தயிரோடு சேர்த்து சாப்பிடும் பொழுது செரிமான நொதிகள் தூண்டப்பட்டு, வீக்கம் குறைந்து, செரிமான செயல்முறை சிறப்பாக நடைபெறும்.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

Hema

Hi, I am hema, I am working as a Sub Editor at Updatenews360.

Recent Posts

இலங்கை தமிழர்களை கொச்சைப்படுத்தும் சூர்யா? திடீரென சர்ச்சையை கிளப்பிய பிரபலம்!

சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…

10 hours ago

7 மணி நேர வேலை… 2 நாள் விடுமுறை : சாம்சங் ஊழியர்கள் மீண்டும் போராட்டம்!

சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…

11 hours ago

ஆளுநருக்கு திடீர் மாரடைப்பு… மருத்துவமனைக்கு நேரில் சென்ற முதலமைச்சர்..!!

ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…

11 hours ago

ஆ ஊனா அமெரிக்கா கிளம்பிடுறாரே இந்த மனுஷன்? கமல்ஹாசன் திடீர் பயணத்துக்கு இதுதான் காரணமா?

எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…

11 hours ago

அரசு நிகழ்ச்சிக்கு ஹெலிகாப்டரில் வந்த அமைச்சர்கள்.. அடுத்த நிமிடமே விபத்து : அதிர்ச்சி வீடியோ!

தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…

11 hours ago

பொன்முடி பேசுனது தப்புதான்.. ஆனா . பெரியாரை விட மோசம் இல்ல.. காங்., மூத்த தலைவர் வக்காளத்து!

பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…

11 hours ago

This website uses cookies.