கர்ப்பம் என்பது பல அற்புதமான அனுபவங்கள் மற்றும் கடினமான நாட்களுடன் வருகிறது. தங்கள் குழந்தையின் ஆரோக்கியத்தை மனதில் கொண்டு, தாய்மார்கள் தாங்கள் உண்ணும் உணவு பாதுகாப்பானதா என்பதை எப்போதும் உறுதி செய்ய வேண்டும். மது பானங்கள், சிகரெட் மற்றும் வேறு சில பிரபலமான பொருட்கள் கர்ப்ப காலத்தில் தவிர்க்கப்பட வேண்டும் என்று அனைவருக்கும் தெரியும். ஆனால் தேநீர் மற்றும் காபி என்று வரும்போது, விஷயங்கள் இன்னும் கொஞ்சம் சிக்கலானவை. அந்த வகையில் செம்பருத்தி தேநீர் கர்ப்பிணிப் பெண்களுக்கு நல்லதா அல்லது அதில் அதிக தீமைகள் உள்ளதா என்பதை இப்போது தெரிந்து கொள்வோம்.
செம்பருத்தி பெரும்பாலும் வெப்பமண்டல காலநிலையில் காணப்படுகிறது மற்றும் தேயிலைக்கு அப்பால் பரந்த அளவிலான பயன்பாடுகளைக் கொண்டுள்ளது. பூவின் பல்வேறு பாகங்கள் கயிறு, காகிதம் மற்றும் மருந்துகள் தயாரிக்க பயன்படுத்தப்படுகின்றன. செம்பருத்தி டீயில் இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், எடையைக் குறைக்கவும், பாக்டீரியாவை எதிர்த்துப் போராடவும் உதவும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன.
செம்பருத்தி மலர்களால் ஆன தேநீர் பொதுவாக மக்களுக்கு சிறந்தது என்றாலும், கர்ப்பம் மற்றும் பாலூட்டும் போது மூலிகை தேநீரைத் தவிர்க்க பரிந்துரைக்கப்படுகிறது. 2016 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வில், கருவுற்ற எலிகளுக்கு செம்பருத்தி தேநீர் கொடுக்கப்பட்டது. அதில் குழந்தை பருவமடைவது தாமதமாவதும் மற்றும் உடல் பருமன் மற்றும் உயர்ந்த உடல் நிறை குறியீட்டெண் (பிஎம்ஐ) அபாயத்தையும் அதிகரிப்பது தெரிய வந்துள்ளது. எலிகள் மீது ஆய்வு நடத்தப்பட்டாலும், கர்ப்பிணிப் பெண்ணுக்கு செம்பருத்தி மலர்கள் கொண்டு செய்யப்பட்ட தேநீரின் விளைவுகளைச் சோதிக்க பாதுகாப்பான வழி இல்லை.
2019 ஆராய்ச்சியின் படி, செம்பருத்தி தேநீர் மாதவிடாய் தொடங்குவதை ஊக்குவிக்கிறது. இது எம்மெனாகோக் விளைவு என்று அழைக்கப்படும். இது மாதவிடாய் தூண்டுவதற்கு கருப்பையில் இரத்த ஓட்டத்தை ஊக்குவிக்கிறது. இதனால் தசைப்பிடிப்பு, இரத்தப்போக்கு, ஆரம்பகால பிரசவம் மற்றும் கருச்சிதைவு போன்ற சாத்தியமான பக்க விளைவுகள் இருக்கலாம். எவ்வாறாயினும், இன்னும் உறுதியான எதுவும் கூறப்படவில்லை மற்றும் இப்பகுதியில் மேலும் ஆராய்ச்சி தேவைப்படுகிறது. இந்த துறையில் இன்னும் நிறைய ஆராய்ச்சிகள் தேவைப்பட்டாலும், கர்ப்பிணிப் பெண்கள் தங்கள் உணவில் செம்பருத்தி தேநீரைத் தவிர்ப்பது நல்லது. ஏனெனில் அதனால் விளையும் ஆபத்துகள் புறக்கணிக்க முடியாத அளவுக்கு பெரியதாக இருக்கும்.
தாயுடன் உல்லாசமாக இருந்த நபரை கண்டம் துண்டமாக தாக்கி கொலை செய்த சம்பவம் தமிழகத்தையே அதிர வைத்துள்ளது. விருதுநகரில் உள்ள…
சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் நடிகையின் அந்தரங்க வீடியோ இணையத்தில் லீக்காகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.…
மோகன்லால் - எம்புரான் பட சர்ச்சை மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான மோகன்லால்,பிரித்விராஜ் இயக்கத்தில் நடித்துள்ள "எம்புரான்" திரைப்படம் சமீபத்தில்…
பிரம்மாண்ட விருந்து! தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா,தனது மனைவி ஜோதிகாவுடன் இணைந்து கோலிவுட்டின் நெருங்கிய பிரபலங்களுக்கு…
CSK அணிக்கு முன்னாள் வீரர் ஸ்ரீகாந்தின் ஆலோசனை ஐபிஎல் 2025 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ்…
த்ரிஷாவுக்கு நிச்சயதார்த்தம் நடந்துவிட்டதா? தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழும் த்ரிஷா,தனது சமீபத்திய புகைப்படம் மற்றும் கேப்ஷன் மூலம் சமூக…
This website uses cookies.