ஆரோக்கியம்

மாலை நேரத்தில் சிட்ரஸ் பழங்களை சாப்பிடக்கூடாதுன்னு சொல்றது உண்மையா இல்ல கட்டுக்கதையா???

பொதுவாக அன்றாட உணவில் பழங்களை சேர்த்துக் கொள்வது ஆரோக்கியமானதாக கருதப்படுகிறது. நம்மில் பலர் காலை, மதியம் மற்றும் மாலை என்று வெவ்வேறு நேரங்களில் பழங்கள் சாப்பிட விரும்புகிறோம். ஆனால் பொதுவாக அன்னாசிப்பழம், சாத்துக்குடி, ஆரஞ்சு போன்ற சிட்ரஸ் பழங்களை சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு சாப்பிடுவது செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்ற பொதுவான கருத்து உள்ளது. இது உண்மையா அல்லது வெறும் கட்டு கதையா என்பது பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். 

சிட்ரஸ் பழங்களை சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு சாப்பிடலாமா?

சிட்ரஸ் பழங்களில் வைட்டமின் C, நார்ச்சத்து மற்றும் ஆன்டி-ஆக்சிடன்ட்கள் அதிகம் காணப்படுகிறது. இது நம்முடைய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு ஒரு அற்புதமான உணவாக அமைகிறது. சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு சிட்ரஸ் பழங்களை சாப்பிடுவது நல்ல யோசனையாக இருக்காது. ஏனெனில் இந்த பழங்களில் உள்ள அதிக அமில அளவு காரணமாக இது நமக்கு நெஞ்செரிச்சல், அஜீரணம் போன்ற செரிமான அசௌகரியங்களை ஏற்படுத்தலாம்.

இதனால் இரவு நேரத்தில் நம்முடைய உடலில் செரிமானம் மெதுவாகும். எனினும் இந்த கருத்தை உறுதிப்படுத்துவதற்கு போதுமான அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் எதுவும் இல்லை. ஒரு சிலர் இரவு நேரத்தில் சிட்ரஸ் பழங்களை சாப்பிட்ட பிறகு லேசான அசிடிட்டி அல்லது வயிற்று உப்புசத்தை அனுபவித்துள்ளனர். எனினும் இது நபருக்கு நபர் மாறுபடலாம். ஆகவே இதனை ஒரு பொதுவான கருத்தாக நம்மால் கூற இயலாது. 

இதையும் படிக்கலாமே: 

கிரிஸ்பி, ஹெல்தி சிறுதானிய தோசை ரெசிபி!!!

ஏற்கனவே நெஞ்செரிச்சல் அல்லது அஜீரணம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் இருப்பவர்கள் இரவு நேரத்தில் சிட்ரஸ் பழங்களை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். சொல்லப்போனால் இந்த பழங்களை மாலை நேரத்திற்கு பிறகு சாப்பிடுவது நமக்கு இன்னும் பலனுடையதாக அமையும். உதாரணமாக சிட்ரஸ் பழங்களில் அதிக நீர்ச்சத்து இருப்பதன் காரணமாக இது உடலுக்கு தேவையான நீர்ச்சத்தை அளிக்கிறது. மேலும் இதில் உள்ள நார்ச்சத்து செரிமானத்திற்கு உதவுகிறது. அதனால் காலையில் ஏற்படும் மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து தப்பிக்கலாம். மேலும் வைட்டமின் C சத்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து தொற்றுகளிடமிருந்து நம்மை பாதுகாக்கிறது. 

எனினும் எந்த ஒரு உணவையும் மிதமான அளவு சாப்பிடும் பொழுது செரிமான பிரச்சனைகள் ஏற்படுவதை தவிர்க்கலாம். தொடர்ச்சியாக இரவு நேரத்தில் சிட்ரஸ் பழங்களை சாப்பிடுவதால் உங்களுக்கு அஜீரணம் அல்லது நெஞ்செரிச்சல் ஏற்பட்டால் அதனை பகல் நேரத்தில் சாப்பிடுவது நல்லது. நம்முடைய உடலின் தேவைகளை பொறுத்து நம்முடைய பழக்க வழக்கங்களை நாம் தீர்மானிக்க வேண்டும். அந்த வகையில் உங்கள் உடல் இந்த பழங்களுக்கு என்ன மாதிரியான விளைவுகளை தருகிறதோ அதற்கேற்றவாறு முடிவு செய்வது நல்லது. 

Hema

Hi, I am hema, I am working as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சுயமரியாதை இருந்தால் ஆளுநர் மாளிகையைவிட்டு வெளியே போங்க : ஆர்எஸ் பாரதி காட்டம்!

தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போட்டு வந்தார். இதனால் தமிழக அரசு - ஆளுநருக்கும் மோதல்…

17 minutes ago

அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் முதல் காட்சி வெளிவராது- விநியோகஸ்தர்கள் திட்டவட்டம்

தயாராகி வரும் கொண்டாட்டங்கள் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…

1 hour ago

அமைச்சரின் சகோதரர் கொலை வழக்கில் போலி என்கவுண்டர் நடத்த பிளான் : சீமான் பகீர் குற்றச்சாட்டு!

திருச்சி நீதிமன்றத்தில் வருண் குமார் தொடுத்த வழக்கில் இன்று ஆஜராக வந்த நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.…

2 hours ago

மகன் தீ விபத்தில் சிக்கியதை அறிந்தும் மக்களை சந்தித்த துணை முதல்வர்.. நெகிழ வைத்த பவன் கல்யாண்!

ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் இரண்டாவது மகன் மார்க் ஷங்கர் (வயது 8) சிங்கப்பூரில் உள்ள பள்ளி ஒன்றில்…

3 hours ago

வாரணம் ஆயிரம் படத்தில் அசின்? இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே!

90ஸ் கிட்ஸின் ஃபேவரைட் திரைப்படம் கௌதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடித்த “வாரணம் ஆயிரம்” திரைப்படத்தை 90களில் பிறந்தவர்களால் மறக்கவே…

3 hours ago

This website uses cookies.