முதல் நாள் சமைத்த அரிசி சாதத்தில் இரவு தண்ணீர் ஊற்றி ஊற வைக்கும் போது அடுத்த நாள் கிடைக்கும் அந்த சாதம் பழைய சாதம் எனப்படுகிறது. மேலும் இது நீச்ச தண்ணி, நீராகாரம் எனவும் அழைக்கப்படுகிறது. இந்த பழைய சாதம் லேசான புளிப்பான சுவையை கொண்டுள்ளது. இதற்கு காரணம் இதில் உருவாகக்கூடிய லேக்டிக் அமில பாக்டீரியா ஆகும்.
இந்த பழைய சாதத்தில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் வைட்டமின்கள் அடங்கியுள்ளன. வேறு எந்த உணவுப் பொருட்களுடன் ஒப்பிடும் போது பழைய சாதத்தில் மிக அதிகப்படியான சத்துக்கள் அடங்கியுள்ளதாக ஒரு ஆய்வு அறிக்கை கூறுகிறது. அதோடு, மிக அதிக அளவில் புரதச்சத்து, இரும்புச்சத்து, பொட்டாசியம் ஆகியவை இதில் அடங்கியுள்ளன.
புதிதாக சமைக்கப்பட்ட சாதத்தை விட பழைய சாதத்தில் 20 மடங்கு இரும்புச்சத்து அதிகமாக உள்ளது. எடுத்துக்காட்டாக புதியதாக சமைக்கப்பட்ட சாதத்தில் 5 கிராம் இரும்புச்சத்து இருக்கிறது எனில், பழைய சாதத்தில் 100 கிராம் அளவிற்கு இரும்பு சத்து அடங்கியுள்ளது.
நமது உடலில் ஏற்படும் பெரும்பாலான நோய்களுக்கு மூல காரணம் நமது உடலில் உள்ள அதிகப்படியான வெப்பம் ஆகும். பழைய சாதத்துடன் சிறிது தயிர் மற்றும் சிறிய வெங்காயத்தை சேர்த்து தினமும் காலையில் உண்பதால் நம் உடலில் உள்ள உஷ்ணம் குறைக்கப்பட்டு நம் உடலுக்கு அதிகப்படியான நன்மைகள் ஏற்படுகிறது.
உடலில் உள்ள அதிக வெப்பம் காரணமாக ஏற்படும் கண் எரிச்சல், நீர் சுருக்கு, உடல் சோர்வு, சிறுநீர் வெளியாகும் போது எரிச்சல் போன்ற உடல் உபாதைகள் மிக விரைவில் குணமடைகிறது. குடல் புண்ணை விரைந்து குணப்படுத்துவதில் பழைய சாதம் மிகச்சிறந்தது. பழைய சாதத்தை தினமும் காலை உணவாக உண்டு வந்தால் அல்சர் எனப்படும் குடல் புண் விரைந்து குணமாகிறது.
பழைய சாதத்தில் மிக அதிக அளவு நார்ச்சத்துக்கள் அடங்கியுள்ளன. நார்ச்சத்துக்கள் அதிகமாக உள்ள உணவுகள் எளிதில் செரிமானம் ஆகிறது மற்றும் செரிமான உறுப்புகளை பலப்படுத்துகிறது. மேலும் உடலில் மலச்சிக்கல் ஏற்படாமல் பார்த்துக் கொள்கிறது.
பழைய சாதத்தில் B6 மற்றும் B12 ஆகிய சத்துக்கள் அதிகளவில் உள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. எனவே பழைய சாதம் உண்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து எந்த வித நோயும் நம்மை எளிதில் தாக்காதவாறு பார்த்துக் கொள்கிறது.
பழைய சாதத்தில் உடலுக்கு நன்மையை விளைவிக்கக் கூடிய பாக்டீரியாக்கள் மற்றும் நுண்ணுயிரிகள் அதிக அளவில் காணப்படுகின்றன. இந்த நுண்ணுயிரிகள் வயிறு தொடர்பான சிக்கல்களை சரி செய்கின்றன. மேலும் ஒவ்வாமை பிரச்சினையை எளிதில் தீர்க்கிறது.
கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.
கடந்த 21ஆம் தேதி பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான டிராகன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.…
கோவை மாவட்டம் சூலூர் அடுத்த நீலாம்பூர் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தமிழ் மாநில முஸ்லிம் லீக் அமைப்பின்…
ஈஷாவில் நடைபெறும் மஹாசிவராத்திரியை முன்னிட்டு தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து ஆதியோகி மற்றும் அறுபத்து மூவர் தேர்களுடன்…
திண்டுக்கல், செம்பட்டி சேடப்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி சக்திவேல் இவரது மனைவி கவுசல்யா, 2001ல் இவர்களது பக்கத்து விட்டில் நகை திருடுபோனது,…
இயக்குநர் வினாயக் சந்திரசேகரன் 'குட் நைட்' படத்தின் மூலம் தனது சினிமா பயணத்தை வலுவாகத் தொடங்கினார். குட் நைட் திரைப்படம்…
கடலூரில் மாயமான இரண்டு இளைஞர்களை சக நண்பர்களே அடித்துக் கொன்று புதைத்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. கடலூர்: கடலூர் மாவட்டம்,…
This website uses cookies.