பலருக்கு நெய் என்றால் ஃபேவரெட். ஆனால் ஒரு சிலர் எடை அதிகரிப்புக்கு பயந்து நெய் சாப்பிடுவதைத் தவிர்க்கிறார்கள். இருப்பினும், நெய்யானது ஒருவரின் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்குமா என்பது அதன் அளவை பொறுத்தே அமையும். ஒருவர் உணவில் எவ்வளவு நெய் இருக்க வேண்டும் என்பதை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
நாம் என்ன சாப்பிடுகிறோம் என்பதன் அடிப்படையில், விகிதாசார அளவில் நெய்யை உணவில் சேர்க்க வேண்டும். ராகி போன்ற ஒரு தினைக்கு, நீங்கள் பருப்பு மற்றும் சாதத்திற்கு சேர்ப்பதை விட இன்னும் கொஞ்சம் கூடுதலாக நெய் சேர்க்க வேண்டும்.
சுவையை அதிகரிக்க நெய் போதுமானதாக இருக்க வேண்டுமே தவிர, அது உணவின் சுவையை மறைக்கும் அளவுக்கு இருக்கக் கூடாது.
ஒரு நாளைக்கு நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள் என்பதைப் பொறுத்து தான் நெய்யின் அளவு இருக்க வேண்டும். எந்தெந்த உணவுகளுக்கு கூடுதலாக நெய் சேர்க்க வேண்டும், எந்தெந்த உணவுகளுக்கு குறைவான நெய் தேவைப்படும் என்பதை அறிந்து அதற்கேற்ப நெய் சேர்க்கலாம்.
நோயெதிர்ப்பு மண்டலத்திற்கு அவசியமான பல வைட்டமின்கள் நிறைந்த நெய், ஒவ்வொரு நாளும் உங்கள் உணவில் ஒரு முறையாவது சேர்க்கப்பட வேண்டும். ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு 3-6 தேக்கரண்டி நெய் கிடைப்பது போதுமானது. முன்பு கூறியது போல முக்கியமான விஷயம் என்னவென்றால், நெய் உணவின் சுவையை அதிகரிக்க வேண்டுமே தவிர அதை மறைக்கக்கூடாது. காலை உணவு, மதிய உணவு மற்றும் இரவு உணவிற்கு தளா ஒரு தேக்கரண்டி நெய் நல்லது.
கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.
நடக்குமா? நடக்காதா? தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பதாக இருக்கும் திரைப்படத்தை முதலில் கமல்ஹாசன் தயாரிப்பதாக இருந்தது. ஆனால் ஒரு…
கறாரான இயக்குனர் இயக்குனர் பாலா மிகவும் கறாரான இயக்குனர் எனவும் அவர் நடிகர்களை அடித்து வேலை வாங்குவார் எனவும் ஒரு…
தமிழ்நாட்டில் அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. ஒரு வருடம் இருக்கும் நிலையில், எதிர்க்கட்சிகள் தேர்தலை சந்திக்க இப்போதே…
கியூட் நடிகை நஸ்ரியா 90ஸ் கிட்களின் கியூட் நடிகையாக வலம் வந்தவர்.“நேரம்” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே இவர்…
உலக நாயகன் உலக நாயகனாக வலம் வந்த கமல்ஹாசன் இந்திய சினிமாவிற்கே ஒரு நடிப்பு பல்கலைக்கழகமாக திகழ்ந்தவர். 1980களில் சாக்லேட்…
ஆந்திர மாநிலம், சித்தூர் மசூதி மிட்டாவை சேர்ந்தவர் யாஸ்மின்பானு (23). பூதலப்பட்டு பகுதியை சேர்ந்தவர் சாய்தேஜ் (25). இவர்கள் இருவரும்…
This website uses cookies.