துளசி செடியானது இந்தியாவில் ஆன்மீகம் மற்றும் மருத்துவம் ஆகிய இரண்டு துறைகளிலும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தாவரமாக கருதப்படுகிறது. வீடுகளில் துளசி மாடம் அமைத்து வழிபடுவது பழங்காலத்தில் இருந்தே வழக்கத்தில் இருந்து வரும் ஒன்றாகும். மருத்துவ குணங்கள் நிறைந்த துளசி இலைகளை தினமும் சாப்பிட்டு வர ஏராளமான நோய்கள் குணமாகும். இந்த பதிவில் துளசி இலைகளை சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள் குறித்து பார்க்கலாம்.
துளசி இலைகளில் காணப்படும் ஆன்டி ஆக்சிடன்டுகள் ரத்தத்தில் உள்ள நச்சுக்களை அகற்றி ரத்தத்தை சுத்தப்படுத்த உதவுகிறது. ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்புகளை அகற்றுவதன் மூலமாக இதய நோய் மற்றும் ஹைப்பர் டென்ஷன் போன்ற பிரச்சனைகளில் இருந்து நம்மை காக்கிறது.
துளசியில் ஆன்டி பாக்டீரியல் கலவைகள் அதிக அளவில் காணப்படுகின்றன. இது தொண்டையில் ஏற்படக்கூடிய நோய் தொற்றுகளில் இருந்து நம்மை பாதுகாக்க உதவும். குழந்தைகளுக்கு தினமும் துளசி இலை கொடுத்து வர அவர்களின் ஞாபக சக்தி மேம்படும்.
தினமும் காலை வெறும் வயிற்றில் துளசி இலைகளை சாப்பிட்டு வர நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் இருக்கலாம். நரம்பு கோளாறு பிரச்சனையால் அவதிப்பட்டு வருபவர்கள் தினமும் துளசி இலைகளை சாப்பிட்டு வர நல்ல பலன் கிடைக்கும்.
நம் வீடுகளிலே இருந்தாலும், துளசி இலையை பறித்து சாப்பிடும் பழக்கம் நம்மில் பலருக்கு இருப்பதில்லை. வெறும் இரண்டு நிமிடங்களே தேவைப்படும் இந்த செயலை செய்து வர நல்ல ஆரோக்கியத்துடன் நெடுநாள் வாழலாம்.
கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.
"சென்னை 28" மூன்றாம் பாகம் வருகிறதா? கங்கை அமரனின் மகன் வெங்கட்பிரபு,தன்னுடைய திரைப்பயணத்தை நடிகராக தொடங்கினார்.உன்னை சரணடைந்தேன்,ஏப்ரல் மாதத்தில்,சிவகாசி உள்ளிட்ட…
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் குட் பேட் அக்லி,ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் இத்திரைப்படத்தின் டீசர்…
இந்திய அணியின் மறக்க முடியாத தோல்வி! கடந்த 2000 ஆம் ஆண்டு நடந்த சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்தியா…
பாஜக - அதிமுக கூட்டணி குறித்து 6 மாதத்திற்கு எந்த ஒரு கேள்வியையும் கேட்க வேண்டாம் என தமிழிசை செளந்தரராஜன்…
பட வாய்ப்புக்காக அலையும் காக்கா முட்டை ரமேஷ் தமிழ் சினிமாவில் 2015-ஆம் ஆண்டு இயக்குநர் மணிகண்டன் இயக்கத்தில் வெளியான ‘காக்கா…
திருவாரூர் அருகே காதல் திருமணம் செய்த மனைவியைக் கொலை செய்து விட்ட தப்பி ஓடிய கணவரை போலீசார் தேடி வருகின்றனர்.…
This website uses cookies.