சியா விதைகள் பல நம்பமுடியாத நன்மைகளைக் கொண்டுள்ளன. எடை இழப்புக்கு உதவுவது முதல் மேம்பட்ட எலும்பு மற்றும் இருதய ஆரோக்கியம் வரை சியா விதைகள் பல நன்மைகளை வழங்குகிறது. சியா விதைகளின் நன்மைகள் அனைவரும் அறிந்ததே. எனினும், இந்த விதைகளை அதிகப்படியாக சாப்பிடும் போது ஏற்படும் பக்க விளைவுகள் குறித்து பலருக்கு தெரியவில்லை. ஆகவே இந்த பதிவில் அது பற்றி பார்க்கலாம்.
ஒருவரின் ஆரோக்கியத்திற்கு நார்ச்சத்து முக்கியமானது என்றாலும், அதிகப்படியான உட்கொள்ளல் வயிற்று வலி, மலச்சிக்கல் மற்றும் வீக்கம் ஆகியவற்றை ஏற்படுத்தும். சியா விதைகளை அதிகமாக சாப்பிடுவது, சரியாக உட்கொள்ளாவிட்டால் செரிமான பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். இருப்பினும், இந்த எதிர்மறை அறிகுறிகளை மெதுவாக நார்ச்சத்து உட்கொள்ளலை அதிகரிப்பதன் மூலம் தடுக்கலாம்.
பெரும்பாலான நபர்களுக்கு அவை பாதுகாப்பாக இருந்தாலும், சியா விதைகளை உட்கொள்வதால் ஒரு சிலருக்கு மூச்சுத் திணறல் ஏற்படும் அபாயம் உள்ளது. ஆகவே, இந்த விதைகளை எப்போதும் கவனமாக உட்கொள்ள வேண்டும்.
சியா விதைகளில் நல்ல அளவு ஆல்பா லினோலெனிக் அமிலம் (ALA) இருப்பதாக அறியப்படுகிறது. அதிகப்படியான ALA உட்கொள்ளல் புரோஸ்டேட் புற்றுநோயின் அபாயத்துடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்று சில ஆய்வுகள் கூறுகின்றன.
ஒரு சிலருக்கு சியா விதைகளுக்கு ஒவ்வாமை இருப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக வாந்தி, வயிற்றுப்போக்கு மற்றும் உதடுகள் மற்றும் நாக்கு அரிப்பு போன்ற அறிகுறிகள் ஏற்படலாம்.
ஆகவே, சியா விதைகள் உங்களுக்கு ஏற்றதா என்பதை தெரிந்து கொண்ட பின்னரே அதனை சாப்பிட வேண்டும்.
கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.
பெண் உடையுடன் குடியிருப்பில் பிக்பாஸ் விக்ரமன் ஓடிய வீடியோ வைரலான நிலையில், இதுகுறித்து அவரது மனைவி விளக்கம் அளித்துள்ளார். சென்னை:…
ஏழை எளிய மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்வது யார் என்று தமிழக மக்களுக்கு நன்கு தெரியும் என அண்ணாமலை முதல்வர்…
தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவரை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி:…
சல்மான் கான் - ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் படம் சர்கார் படத்தின் ரீமேக் அல்ல என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்…
ராணிப்பேட்டையில் பாஜக நிர்வாகி, தனது வயல்வெளியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
This website uses cookies.