சிறுதானிய வகைகளில் ஒன்றான ராகி ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது. தூங்குவதில் சிக்கல், பதற்றம், உடல் பருமன் மற்றும் இரத்த சோகை போன்ற பிரச்சினைகளுக்கு ராகி போன்ற உணவு மருந்தாக செயல்படுகிறது.
கேழ்வரகு இரும்புச்சத்தின் ஆதாரமாக இருப்பதால், இது உடல் வலிமையை அதிகரிக்க பெரிதும் உதவுகிறது. அரிசியைக் காட்டிலும் கேழ்வரகில் குறைந்த அளவு நார்ச்சத்து மற்றும் கார்போஹைட்ரேட் காணப்படுகிறது. இதன் காரணமாக இது குறைந்த கிளைசீமிக் குறியீடு கொண்ட உணவாக திகழ்கிறது. ஆகவே நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்றதாக கேழ்வரகு அமைகிறது.
சிறுகுடல் பிரச்சினைகள் உள்ளவர்கள் கேழ்வரகை அதிகமாக சாப்பிடக்கூடாது. ஏனெனில், அது வாயு, வீக்கம், மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு பிரச்சினைக்கு வழிவகுக்கும்.
சிறுநீரகத்தில் பிரச்சினை இருப்பவர்களுக்கும் கேழ்வரகு தீங்கு விளைவிக்கும். கேழ்வரகை அதிக அளவில் சாப்பிடுவது ஆக்சாலிக் அமிலத்தை உருவாக்கும். ஆகவே சிறுநீரக கற்கள் மற்றும் சிறுநீரக தொற்று போன்ற பிரச்சனைகள் உள்ளவர்கள் கேழ்வரகை அதிகம் சாப்பிடக்கூடாது.
ஹைப்பர் தைராய்டிசம் மற்றும் ஹைப்போ தைராய்டிசம் ஆகிய இரண்டு வகையான தைராய்டு பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு கேழ்வரகு ஆகாது. கேழ்வரகு உடலில் குளிர்ச்சியை ஏற்படுத்தும் என்பதால், இதனை குளிர் காலத்தில் சாப்பிடுவது நல்லதல்ல.
கேழ்வரகு எளிதில் ஜீரணமாகாது என்பதால் இதனை அதிக அளவில் சாப்பிடுவது மலச்சிக்கல், வாயு, வயிற்றுப்போக்கு, வீக்கம் போன்ற செரிமான சிக்கல்களை ஏற்படுத்தும். எனவே, நீங்கள் அடுத்த முறை கேழ்வரகு சாப்பிடும் போது கவனமாக இருக்கவும்.
கலவையான விமர்சனம் எஸ்.யு.அருண் குமார் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் கடந்த மாதம் இறுதியில் வெளியான “வீர தீர சூரன் பார்ட்…
தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கிய நடிகர் விஜய், தனது கடைசி படம் ஜனநாயகன்தான் என அறிவித்திருந்தார். கடைசி…
நீலகிரி மாவட்டம் உதகையில் திமுக கழக மாணவர் அணி செயலாளர்கள் மற்றும் துணைச் செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதையும்…
சர்ச்சைக்குள் சிக்கிய எம்புரான் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்துள்ள “எம்புரான்” திரைப்படம் கடந்த மாத இறுதியில் வெளியான நிலையில் ரசிகர்களின்…
தமிழக பாஜக தலைவராக உள்ள அண்ணாமலை மாற்றப்பட உள்ளார் என்ற செய்தி பாஜகவினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் மேலிடம் எடுக்கும்…
கணவனுக்கு நடந்த விசித்திரமான, அதிர்ச்சியான சம்பவம் உத்தரபிரதேசத்தில் நடந்துள்ளது. சந்தீப் என்பவர் ரஞ்சனா என்பவரை திருமணம் செய்துள்ளார். திருமணத்திற்கு பிறகு…
This website uses cookies.