பொதுவாக கீரைகளில் எப்போதும் நம் உடலுக்கு தேவையான சத்துக்கள் அதிகமாக உள்ளது என கேள்விப்பட்டு இருக்கிறோம். கீரை வகைகளில் அதிக சத்துக்களை கொண்ட கீரை முருங்கைக்கீரை ஆகும். இவற்றில் நம் உடலுக்கு அத்தியாவசியமான சத்துக்கள் அதிகமாக உள்ளன.
முருங்கைக் கீரையில் அதிகமாக இரும்புச்சத்து மற்றும் புரதம் அடங்கியுள்ளது. மேலும் கார்போஹைட்ரேட், கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் பி, வைட்டமின் சி, வைட்டமின் ஈ மற்றும் ஆன்ட்டி ஆக்ஸிடன்ட்கள் ஆகியவையும் அடங்கியுள்ளது. இவ்வளவு சத்துக்கள் அடங்கியுள்ள முருங்கைக் கீரையை உணவில் சேர்த்துக் கொள்வதால் நமக்கு ஏராளமான பயன்கள் கிடைக்கின்றன.
முருங்கைக் கீரையில் அதிக அளவு இரும்பு சத்து இருப்பதால் நமது உடலில் உள்ள தசைகளை வலுப்பெற செய்கிறது. இவற்றில் உள்ள கால்சியம் சத்து எலும்புகள் மற்றும் பற்களின் வளர்ச்சிக்கும் வலிமைக்கும் மிகவும் துணை புரிகிறது.
வாரத்தில் குறைந்தது இருமுறை முருங்கைக்கீரை உண்பதால் நமது உடலில் உள்ள இரத்தம் சுத்தம் செய்யப்படுகிறது. இரத்தத்தில் உள்ள நச்சுக்களை போக்கி கழிவுகளுடன் வெளியேற்றுகிறது. ரத்தத்தில் உள்ள கொழுப்புகளை குறைக்கிறது. இரத்த சோகையை போக்குவதற்கு மிகவும் சிறந்த மருந்து முருங்கைக்கீரை ஆகும்.
முருங்கைக் கீரையில் வைட்டமின் இ மற்றும் விட்டமின் சி ஆகியவை அடங்கியுள்ளன. இவை ஞாபக சக்தியை தூண்டி நினைவாற்றலை அதிகப்படுத்துகிறது. எனவே அல்சைமர் போன்ற ஞாபகம் சம்பந்தப்பட்ட நோய்களை குணப்படுத்துகிறது.
தினமும் ஒரு கிளாஸ் அளவிற்கு முருங்கைக்கீரை சூப் குடித்து வருபவர்களுக்கு ஆஸ்துமா, மார்புச்சளி, சைனஸ் போன்ற நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் மெல்ல மெல்ல குறைந்து வருகிறது என்பது ஒரு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் கை, கால் வசதி மற்றும் மூட்டு வலி போன்றவை குணமாகிறது.
முருங்கைக் கீரையில் அதிக அளவு பொட்டாசியம் மற்றும் இரும்பு சத்து இருப்பதால் முடி உதிர்தலை கட்டுப்படுத்துகிறது மற்றும் இளநரையை போக்குகிறது.
முருங்கைக் கீரையை பொரியல் செய்து அடிக்கடி உணவுடன் சேர்த்து உண்ணும் போது பித்தத்தால் உண்டாகக்கூடிய மயக்கம், மலச்சிக்கல், கண் மங்கல் போன்றவை விரைவில் குணமடைகிறது.
முருங்கைக்கீரை மற்றும் முருங்கைப்பூ போன்றவை நரம்புத்தளர்ச்சியை போக்குவதில் மிகவும் சிறந்தது. நரம்புத் தளர்ச்சியால் ஏற்படும் கை கால் நடுக்கம், உடல் சோர்வு மற்றும் ஆண்மை குறைவு போன்றவற்றை குணப்படுத்துகிறது.
கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.
கடந்த 21ஆம் தேதி பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான டிராகன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.…
கோவை மாவட்டம் சூலூர் அடுத்த நீலாம்பூர் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தமிழ் மாநில முஸ்லிம் லீக் அமைப்பின்…
ஈஷாவில் நடைபெறும் மஹாசிவராத்திரியை முன்னிட்டு தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து ஆதியோகி மற்றும் அறுபத்து மூவர் தேர்களுடன்…
திண்டுக்கல், செம்பட்டி சேடப்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி சக்திவேல் இவரது மனைவி கவுசல்யா, 2001ல் இவர்களது பக்கத்து விட்டில் நகை திருடுபோனது,…
இயக்குநர் வினாயக் சந்திரசேகரன் 'குட் நைட்' படத்தின் மூலம் தனது சினிமா பயணத்தை வலுவாகத் தொடங்கினார். குட் நைட் திரைப்படம்…
கடலூரில் மாயமான இரண்டு இளைஞர்களை சக நண்பர்களே அடித்துக் கொன்று புதைத்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. கடலூர்: கடலூர் மாவட்டம்,…
This website uses cookies.