வாழைத்தண்டின் பெருமையைக் கூற வார்த்தையே இல்லை… நீங்களே படிச்சு தெரிஞ்சுக்கோங்களேன்!!!

வாழையின் அனைத்து பாகங்களும் நமக்கு பயனுள்ளதாக அமைகிறது. அந்த வகையில் வாழைத்தண்டு நமக்கு பல வகையான மருத்துவ நன்மைகளை தருகிறது.
வாழைத்தண்டை பொரியலாகவோ அல்லது சாறாகவோ உண்டு வந்தால் உடலின் பல்வேறு நோய்ப் பிரச்சனைகளை சரிசெய்கிறது.

வாழைத் தண்டுடன், தேவையான அளவு உப்பு, மிளகு மற்றும் வறுத்த சீரகம் சேர்த்து நன்கு அரைத்து, பின் அதில் தேவையான அளவு நீர் சேர்த்து வடிகட்டும்போது நமக்கு வாழைத்தண்டு சாறு கிடைக்கிறது. இந்த வாழைத்தண்டு சாறு குடிப்பதனால் கிடைக்கும் பலன்களில் ஒரு சிலவற்றை காண்போம்.

சர்க்கரை நோய் உள்ளவர்கள் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை வாழைத்தண்டு ஜூஸ் குடிப்பது மிகவும் நல்லது. நெஞ்செரிச்சல் அதிகமாய் இருந்தால் உடனடி தீர்வு காண, காலையில் வெறும் வயிற்றில் வாழைத்தண்டி ஜூஸ் குடிப்பது நல்லது.

வாழைத்தண்டு சாற்றுடன் சிறிதளவு இஞ்சி சேர்த்து குடித்து வந்தால், இதில் இருக்கக்கூடிய அதிகப்படியான நார் சத்துக்கள் நமது வயிற்றுப் பகுதியில் இருக்கக்கூடிய தேவையற்ற கெட்ட கொழுப்புகளை குறைக்கிறது. இது செரிமானத்தை எளிதாக்கி பசியின்மையை போக்கி பசியை தூண்டுகிறது.

வாழைத்தண்டில் இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் பி6 சத்துக்கள் அதிகம் காணப்படுகிறது. இந்த சத்துக்கள், நம் ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க செய்கிறது.

இரத்தத்தில் இருக்கக்கூடிய பொட்டாசியம் சத்து தான் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது. அந்த வகையில், வாழைத்தண்டில் உள்ள பொட்டாசியம் சத்தானது, நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து எந்த நோயும் நம்மை நெருங்காமல் பாதுகாத்து உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

சிறுநீரக கற்கள் உடையவர்களுக்கு வாழைத்தண்டு சாறு மிகச் சிறந்த மருந்தாகும். வாழைத்தண்டு சாறு சிறுநீரகப் பாதையில் உள்ள நோய் தொற்றுகளை நீக்கி, சிறுநீரகப் பாதையை சுத்தம் செய்கிறது. மேலும் சிறுநீரை பெருக்குகிறது. சிறுநீரகத்தில் உள்ள கற்களை மெல்ல மெல்ல கரைத்து சிறுநீர் வழியாக வெளியேற்றுகிறது.

வாழைத்தண்டு சாறு துவர்ப்பு சுவை உடையது. எனவே அதை அப்படியே குடிக்க கஷ்டப்படுபவர்கள் அதனுடன் ஆப்பிள், ஆரஞ்சு, மாதுளை போன்ற வேறு ஏதேனும் பழச்சாற்றை சிறிதளவு கலந்து குடிக்கலாம்.

வாழைத்தண்டை உலர்த்தி பொடியாக்கி சிறிதளவு தேன் கலந்து தொடர்ந்து சாப்பிட்டு வரும்போது மஞ்சள் காமாலை நோய் முற்றிலும் குணமடைகிறது. மேலும், கல்லீரலில் தேங்கியுள்ள நச்சு கழிவுகளை அகற்றி கல்லீரலை வலுவடையச் செய்கிறது.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

Hema

Hi, I am hema, I am working as a Sub Editor at Updatenews360.

Share
Published by
Hema

Recent Posts

பொது வெளியில் அசிங்கப்படுத்திய கமல்ஹாசன்; ஒருத்தரை இப்படியா அவமானப்படுத்தனும்? அடப்பாவமே

விண்வெளி நாயகன் கமல்ஹாசன் சமீபத்தில் தனது உலக நாயகன் என்ற பட்டத்தை துறந்தாலும் விண்வெளி நாயகன் என்று அவரை இப்போது…

26 minutes ago

75 வயது நடிகருக்கு மனைவியாக நடித்த 30 வயது நடிகை.. ஒப்புக்கொண்டது ஏன்? கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!

விசித்திரமான வித்தியாசமான கதைகள் பெரிய திரையில் நடப்பதுண்டு. ஆனால் அரைச்ச மாவையே அரைக்கும் சின்னத்திரையில் வித்தியாசமான கதைக்களத்துடன் சீரியல் உருவாகி…

1 hour ago

சூர்யாவுக்கு முன்னாடி SIX PACKS வெச்சவன் எவன் இருக்கான்? அனல் பறந்த நடிகரின் பேச்சு!

நடிகர் சூர்யா தற்போது ரெட்ரோ படத்தில் நடித்து முடித்துள்ளார். தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் ஒரு படம், கங்குவா 2…

2 hours ago

சிறுவன் அன்புக்கரசின் அன்புக்கு கட்டுப்பட்ட தமிழக அரசு.. இன்ப அதிர்ச்சி கொடுத்த அமைச்சர்!

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே P.புதுப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கடந்த ஜனவரி மாதம் 35 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக…

2 hours ago

குடிக்க தண்ணீர் கேட்டு தம்பதியை தாக்கி நகை பறிப்பு : மர்மநபர்களை தேடும் போலீஸ்..!!

சேலம், நாராயண நகர் முதல் குறுக்கு தெருவை சேர்ந்தவர் மாதவராஜ்(75). இவரது மனைவி பிரேமா(67). கணவன் மனைவி மட்டும் வீட்டில்…

18 hours ago

பவ்யமாக பழத்தை எடுத்து கொடுத்த கயாடு லோஹர்… மொத்தக் கூட்டமும் சுத்தி வந்திருச்சே!

டிராகன் திரைப்பட கதாநாயகி கயாது லோஹர் ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் புகழ்பெற்ற வாயுலிங்கமான ஸ்ரீகாளஹஸ்திஸ்வரர், ஞானபிரசுன்னாம்பிகை தாயாரை தரிசனம்…

18 hours ago

This website uses cookies.