கசகசா என்பது பாப்பி எனப்படும் செடியின் விதைகளிலிருந்து இது தயாரிக்கப்படுகிறது. இந்த விதைப்பைகள் நன்றாக காயவைக்கப்பட்டு அதிலிருந்து கசகசா உருவாக்கப்படுகிறது. ஒரு சில நாடுகளில் கசகசா தடை செய்யப்பட்டுள்ளது. இதற்கு காரணம் இதனை ஒரு போதை பொருளாக எண்ணுவதாகும். ஆனால் இவை போதை தருவதில்லை. இதன் விதைப்பையில் இருந்து வடியக்கூடிய பால் போன்ற திரவம் ஓபியம் என்றழைக்கப்படுகிறது. இதுவே போதைப் பொருளாகும்.
பல நாடுகளில் கசகசாவுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தாலும் இந்தியாவில் இதை அசைவ உணவுகளில் சுவையூட்டியாகவும், ஆண்மை குறைவிற்கு மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது. இதை அளவாக பயன்படுத்தி வரும்போது நமக்கு பல மருத்துவ பலன்களை தருவதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இவற்றின் நன்மைகளில் ஒரு சிலவற்றை பற்றி காண்போம்.
கசகசாவில் இருக்கக்கூடிய கால்சியம் மற்றும் தாமிரம் போன்ற சத்துக்கள் எலும்புகளின் அடர்த்தியை அதிகரித்து எலும்புகளை வலுப்படுத்துகிறது. இதில் இருக்கும் பாஸ்பரஸ் மற்றும் மாங்கனீசு போன்ற சத்துகள் எலும்புகளில் சேதம் உண்டாகாமல் பாதுகாக்கிறது. மேலும் உடைந்த எலும்புகள் விரைவில் குணமடைய வழி செய்கிறது.
ஒரு குறிப்பிட்ட வயதிற்கு பின் நம் உடலில் இருக்கக்கூடிய எலும்புகள் மெல்ல மெல்ல தேய துவங்குகின்றது. கசகசாவை கொண்டு இதனை தடுக்கலாம். குழந்தைகள் வளரும் பருவத்திலேயே கசகசாவை அவ்வப்போது உணவில் சேர்த்துவருவதன் மூலம் எதிர்காலத்தில் ஏற்படும் எலும்பு மற்றும் மூட்டு தேய்மானத்தை தடுக்க முடியும்.
கசகசாவை அவ்வப்போது உணவில் சேர்த்து வருவதன் மூலம் பெண்களின் கருப்பையில் இருக்கக்கூடிய பெலோப்பியன் குழாய்களை சுத்தம் செய்யலாம். இக்குழாய்களில் இருக்கும் சளி போன்று அடர்த்தியாக இருக்கும் ஒரு வகை திரவத்தை கரைத்து கருவுறுதலை ஊக்குவிக்கிறது. பெலோப்பியன் குழாய்களில் உள்ள குறைபாட்டால் குழந்தை பெறுவதில் சிக்கல் ஏற்படுகிறது. இந்த குறைபாட்டை போக்குவதற்கு கசகசா தீர்வாக உள்ளதாக ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது.
தூக்கமின்மை பிரச்சனையால் அனைத்து வயதினரும் இன்று அவதிபடுகிறார்கள். ஆய்வுகளின் படி கசகசா கலந்த பாலை குடிப்பதன் மூலம் தூக்கமின்மை பிரச்சனை சரிசெய்யப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது. உடலில் உள்ள கார்டிசோல் அளவை குறைத்து உறக்கமின்மை பிரச்சனையையும் இவை சரிசெய்கிறது.
தூக்கமின்மை காரணமாக அவதிப்படுவோர் தூங்க செல்வதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பு ஊற வைத்த கசகசாவை அரைத்து அதனை ஒரு டம்ளர் அளவு பனங்கற்கண்டு சேர்க்கப்பட்ட சூடான பாலுடன் சேர்த்து தொடர்ந்து குடித்து வந்தால் தூக்கமின்மை பிரச்சனை போக்கப்படுகிறது.
கசகசாவில் இருக்கக்கூடிய இரும்பு, தாமிரம், கால்சியம் போன்ற சத்துகள் மூளையின் வளர்ச்சிக்கும் சுறுசுறுப்பிற்கும் பெருமளவு உதவுகிறது. இந்த ஊட்டச்சத்துகள் மூளையில் உள்ள நரம்புகளின் செயல்பாட்டை அதிகரிக்கிறது. மூளைக்கு சீரான முறையில் இரத்த ஓட்டம் செல்ல ஊக்கப்படுத்துகிறது.
மேலும் இரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்துகிறது.
கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.