ஆரோக்கியம்

டெங்கு காய்ச்சலுக்கு இயற்கை மருந்து!!!

இந்தியாவில் டெங்கு காய்ச்சல் காரணமாக இறந்து போகும் நபர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக சுகாதாரத்துறை இது சம்பந்தமான தடுப்பு நடவடிக்கைகளை அமல்படுத்தி வருகிறது. டெங்கு காய்ச்சல் மட்டுமல்லாமல் சிக்கன் குனியா மற்றும் மலேரியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து காணப்படுகிறது. சமீபத்தில் புதுச்சேரியில் மட்டுமே 1294 நபர்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 22 நாட்களில் மட்டும் 200 நபர்கள் டெங்கு காய்ச்சல் ஏற்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. 

பொதுவாக டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறி தொற்று ஏற்பட்ட 4 முதல் 10 நாட்களுக்கு பிறகு தான் ஆரம்பிக்கும். இந்த வைரஸ் தொற்றானது ஏஜிஸ் ஏஜெப்டி என்ற கொசு காரணமாக ஏற்படுகிறது. இது லேசான மற்றும் தீவிரமான தாக்கத்தை ஏற்படுத்தலாம். காய்ச்சல், தலைவலி, மூட்டு வலி, தசை வலி போன்றவை 3 முதல் 7 நாட்களுக்கு மேல் நீடித்தால் நீங்கள் நிச்சயமாக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏனெனில் இவை டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறிகள். 

திரவங்களை எடுத்துக் கொள்வது மற்றும் வலி நிவாரணிகள் போன்றவை டெங்கு காய்ச்சலுக்கான சிகிச்சைகள். மோசமான சூழ்நிலையில் ஒரு சில நோயாளிகளுக்கு மருத்துவமனையில் பராமரிப்பு தேவைப்படுகிறது. டெங்கு காய்ச்சலில் இருந்து ஒருவர் தம்மை பாதுகாத்துக் கொள்வதற்கு கொசுக்கடியில் இருந்து தப்பிக்க வேண்டும். மழைக்காலம் வந்து விட்டதால் கொசுக்களின் நடமாட்டம் அதிகமாக இருக்கும். ஆகையால் இந்த நோயிலிருந்து தப்பிப்பதற்கு நாம் போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நிச்சயமாக எடுக்க வேண்டும். 

இந்த சூழ்நிலையில் வேப்பிலை தண்ணீர் நமக்கு மிகப்பெரிய மருந்தாக அமைகிறது. முழுக்க முழுக்க பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் கொண்ட வேப்பிலை டெங்கு காய்ச்சல் பரவுவதை தவிர்க்க உதவுகிறது. டெங்கு காய்ச்சலினால் அவதிப்பட்டு வருபவர்கள் ஒரு நாளைக்கு 2 முறை வேப்பிலை தண்ணீர் குடிக்க பரிந்துரை செய்யப்படுகிறது. 

மேலும் படிக்க: தீராத இருமலுக்கு நொடியில் தீர்வு தரும் மாதுளம் பழம் தோல் டீ!!!

இதற்கு 200ml தண்ணீரில் வேப்பிலை, வெட்டிவேர், சுக்கு, சோம்பு, மிளகு ஆகியவற்றை பொடி செய்து கொதிக்க வைத்து தண்ணீர் 50 ml ஆக மாறும் வரை காய்ச்சி பருக வேண்டும். ஒரு வேலை உங்களுக்கு காய்ச்சல் இருந்தால் 5 நாட்களுக்கு இதனை தினமும் ஒரு முறை எடுத்து வரலாம். குழந்தைகளுக்கு இதில் பாதி அளவு கொடுத்தால் போதுமானது. 

இந்த வேப்பிலை தண்ணீரை தயாரித்த உடனேயே பருகிவிட வேண்டும். மீண்டும் சூடுப்படுத்தி பருக கூடாது. கடந்த இரண்டு மாதங்களாக டெங்கு காய்ச்சல் அதிக அளவில் பரவி வருவதால் அதனை சமாளிப்பதற்கு இந்த இயற்கை வைத்தியம் நிச்சயமாக நமக்கு உதவும். இந்தியாவில் மட்டுமல்லாமல் உலக அளவிலும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் எண்ணிக்கை ஒவ்வொரு வருடமும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக பிரேசில் மற்றும் பிற தென் அமெரிக்கா நாடுகள் இதனால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட தகவலில் தெரியவந்துள்ளது.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

Hema

Hi, I am hema, I am working as a Sub Editor at Updatenews360.

Share
Published by
Hema

Recent Posts

கணவனுக்கு தூக்க மாத்திரை கொடுத்து ஆணுறுப்பை… மனைவியின் கொடூரம் : ஷாக் வீடியோ!

கணவனுக்கு நடந்த விசித்திரமான, அதிர்ச்சியான சம்பவம் உத்தரபிரதேசத்தில் நடந்துள்ளது. சந்தீப் என்பவர் ரஞ்சனா என்பவரை திருமணம் செய்துள்ளார். திருமணத்திற்கு பிறகு…

44 minutes ago

உடை மாற்றும் அறையில் திடீரென நுழைந்த இயக்குனர்! அதிர்ந்துப்போன ஷாலினி பாண்டே…

அர்ஜுன் ரெட்டி நடிகை “அர்ஜுன் ரெட்டி” திரைப்படத்தின் மூலம் சினிமா உலகில் அறிமுகமானவர் ஷாலினி பாண்டே. “அர்ஜுன் ரெட்டி” திரைப்படம்…

1 hour ago

அரசு தீட்டிய திட்டம்.. கைமாறும் 400 ஏக்கர் நிலம் : போராட்டத்தில் குதித்த மாணவர்கள் கைது!

ஹைதராபாத் கச்பவுலி பகுதியில் ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள 400 ஏக்கர் நிலத்தை ஐடி பார்க்…

1 hour ago

அண்ணாமலை இருக்கும் வரைக்கும் பாஜகவுக்கு ரிசல்ட் பூஜ்ஜியம்தான்… பிரபலம் போட்ட பதிவால் பரபரப்பு!

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்க…

16 hours ago

என் அடுத்த படத்தை நீங்களே டைரக்ட் பண்ணுங்க- பிரபல இயக்குனரிடம் தானே முன் வந்து கேட்ட அஜித்!

குட் பேட் அக்லி வருகிற 10 ஆம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி”…

17 hours ago

உயிரை காவு வாங்கிய பங்குச்சந்தை…பல லட்சம் இழப்பு : வாலிபர் விபரீத முடிவு..!!

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பகுதியைச் சேர்ந்த கார்த்தி (வயது 38) அவருடைய மனைவி வனிதா. இவர் தனியார்…

17 hours ago

This website uses cookies.