ஆரோக்கியம்

நீங்க மன அழுத்தத்துல இருக்கும் போது உங்க முகத்துல இந்த அறிகுறிகள் கட்டாயம் வரும்!!!

வேலையில் ஏற்படும் அழுத்தங்கள், உறவுகள் மற்றும் பொருளாதாரம் போன்ற பல்வேறு வாழ்க்கை முறை நிலைகளினால் தூண்டப்படும் மன அழுத்தம் நம்முடைய உடல் மற்றும் மனநலனில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அதிலும் குறிப்பாக நாள்பட்ட மன அழுத்தம் என்பது பதட்டம், மனச்சோர்வு மற்றும் மனநிலை சம்பந்தப்பட்ட கோளாறுகளை ஏற்படுத்தி அதனால் உயர் ரத்த அழுத்தம், டயாபடீஸ் மற்றும் இதய நோய் போன்ற நாள்பட்ட நோய்கள் ஏற்படுவதற்கு வழிவகுக்கிறது. மேலும் மன அழுத்தமானது நம்முடைய தூக்கத்தை பாதித்து நோய் எதிர்ப்பு அமைப்பை வலுவிழக்க செய்து, செரிமானத்தை மெதுவாக்குகிறது.

மன அழுத்தத்தால் ஏற்படும் விளைவு என்பது நம்முடைய ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மட்டுமல்லாமல் நமது தோற்றத்தையும் பாதிக்கிறது. அதிலும் குறிப்பாக நம்முடைய முகத்தில் மன அழுத்தத்திற்கான அறிகுறிகளை வெளிப்படையாக காணலாம். அந்த வகையில் மன அழுத்தம் இருக்கும் பொழுது நம்முடைய முகத்தில் அது எப்படி வெளிப்படுத்தப்படும் என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

முகம் குண்டாக தெரிவது

நாள்பட்ட மன அழுத்தத்தால் தண்ணீர் தக்கவைக்கப்பட்டு வீக்கம் ஏற்பட்டு, முகம் வீங்கி காணப்படும். முகம் வட்ட வடிவில் காட்சியளித்து எடை அதிகரித்தது போன்ற ஒரு பிம்பத்தை ஏற்படுத்தும். கூடுதலாக மன அழுத்தம் காரணமாக விளையும் மோசமான உணவு சாப்பிடும் பழக்க வழக்கங்கள் காரணமாகவும் முகம் குண்டாக காட்சியளிக்கலாம்.

முகப்பரு 

மன அழுத்தம் காரணமாக நம்முடைய உடலில் கார்டிசால் என்ற ஹார்மோன் வெளியிடப்படுகிறது. இதனால் எண்ணெய் உற்பத்தி அதிகமாகி சரும துளைகளில் அடைப்புகள் ஏற்படுகிறது. இதன் விளைவாக முகப்பருக்கள் மற்றும் சரும வீக்கம் உண்டாகிறது. மேலும் மன அழுத்தம் என்பது சருமத்தின் இயற்கையான பாதுகாப்பு தடையை வலுவிழக்க செய்து, எளிதில் சுற்றுச்சூழல் மாசுபடுத்திகளால் ஏற்படும் பாதிப்புகளுக்கு ஆளாக்குகிறது.

கண்களுக்கு கீழ் வீக்கம்

கருவளையம் மற்றும் கண்களுக்கு கீழ் வீக்கம் ஏற்படுவது மன அழுத்தத்திற்கான முக்கியமான அறிகுறி. போதுமான தூக்கம் இல்லாதது, மோசமான ரத்த ஓட்டம் மற்றும் அதிக கார்டிசால் அளவுகள் திரவத்தை தக்க வைக்க செய்து வீக்கத்தையும், தோலில் நிற மாற்றத்தையும் ஏற்படுத்துகிறது. இது உங்களுக்கு சோர்வு மற்றும் முன்கூட்டிய வயதான அறிகுறியை ஏற்படுத்தி, முகத்தை வயதானது போல காண்பிக்கும்.

இதையும் படிக்கலாமே : டெய்லி ஒரு பல் பூண்டு உங்க லைஃபையே மாற்றிவிடும்!!!

வறண்ட தோல் 

மன அழுத்தம் என்பது நம்முடைய தோலை மிக மோசமாக பாதிக்கிறது. இதன் விளைவாக தோலில் வறட்சி, பொலிவில்லாமல் இருப்பது ஆகியவை ஏற்படுகிறது. கார்ட்டிசால் என்ற மன அழுத்த ஹார்மோன் அதிகரிப்பு காரணமாக சருமத்தில் உள்ள இயற்கை ஈரப்பத பாதுகாப்பு தடை அகற்றப்பட்டு, அதனால் தோலில் வறட்சி மற்றும் எரிச்சல் உண்டாகிறது.

மெல்லிய கோடுகள் மற்றும் சுருக்கங்கள் 

மன அழுத்தம் காரணமாக முகத்தில் மெல்லிய கோடுகள் மற்றும் சுருக்கங்கள் வரலாம். டென்ஷன் மற்றும் பதட்டமாகியவை ஏற்படும் பொழுது தொடர்ச்சியாக நீங்கள் செய்யும் முக பாவனைகள் ஆழமான கோடுகள் மற்றும் சுருக்கங்களை உண்டாக்குகிறது.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

Hema

Hi, I am hema, I am working as a Sub Editor at Updatenews360.

Recent Posts

இலங்கை தமிழர்களை கொச்சைப்படுத்தும் சூர்யா? திடீரென சர்ச்சையை கிளப்பிய பிரபலம்!

சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…

9 hours ago

7 மணி நேர வேலை… 2 நாள் விடுமுறை : சாம்சங் ஊழியர்கள் மீண்டும் போராட்டம்!

சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…

10 hours ago

ஆளுநருக்கு திடீர் மாரடைப்பு… மருத்துவமனைக்கு நேரில் சென்ற முதலமைச்சர்..!!

ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…

10 hours ago

ஆ ஊனா அமெரிக்கா கிளம்பிடுறாரே இந்த மனுஷன்? கமல்ஹாசன் திடீர் பயணத்துக்கு இதுதான் காரணமா?

எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…

10 hours ago

அரசு நிகழ்ச்சிக்கு ஹெலிகாப்டரில் வந்த அமைச்சர்கள்.. அடுத்த நிமிடமே விபத்து : அதிர்ச்சி வீடியோ!

தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…

10 hours ago

பொன்முடி பேசுனது தப்புதான்.. ஆனா . பெரியாரை விட மோசம் இல்ல.. காங்., மூத்த தலைவர் வக்காளத்து!

பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…

10 hours ago

This website uses cookies.