ஆரோக்கியம்

உங்க கண்களுக்கு வயசாகாமல் இருக்க நீங்க செய்ய வேண்டியது!!!

நமக்கு வயதாக வயதாக நம்முடைய கண்கள் உட்பட உடல் முழுவதும் பல்வேறு மாற்றங்களுக்கு உட்படுத்தப்படுகிறது. பல இயற்கை மாற்றங்கள் காரணமாக நம்முடைய பார்வை திறன் மற்றும் ஒட்டுமொத்த கண்களின் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். முதுமையில் இருந்து நம்முடைய கண்களை பாதுகாப்பது என்பது வெறும் பார்வை திறனை மட்டுமல்லாமல் நம்முடைய வாழ்க்கை தரம் மற்றும் வயதான காலத்தில் நமது சுதந்திரத்தையும் குறிக்கிறது. உங்கள் கண்கள் முதுமையாகும் செயல்முறையை குறைப்பதற்கும், ஆரோக்கியமான பார்வை திறனை பெறுவதற்கும் உதவும் ஒரு சில முக்கியமான குறிப்புகளை இந்த பதிவில் பார்க்கலாம். 

அருகில் இருக்கும் பொருட்களை பார்ப்பதில் சிக்கல்கள், மங்கலான பார்வை அல்லது எதையாவது படிக்கும் பொழுது கட்டாயமாக கண்ணாடிகள் தேவைப்படுவது போன்ற பல்வேறு விஷயங்கள் முதுமைக்கான ஆரம்பகால அறிகுறிகள் ஆகும். மற்றொரு விஷயம் கண்கள் வறண்டு போவது. குறைவான கண்ணீர் உற்பத்தியின் காரணமாக கண்களில் வறட்சி, எரிச்சல் அல்லது உறுத்தல் போன்றவை ஏற்படும். 

நம்முடைய சருமம் அதன் நெகிழ்வுத் தன்மையை இழக்கும் பொழுது கண்களைச் சுற்றி கருவளையம் அல்லது வீக்கம் ஏற்படுவது வழக்கம். கண்களைச் சுற்றியுள்ள சருமம் மிகவும் மென்மையானவை என்பதால் அந்த இடங்களில் மிக எளிதாக சுருக்கங்கள் மற்றும் மெல்லிய கோடுகள் தெரிய ஆரம்பிக்கும். குறைவான வெளிச்சத்தில் பார்ப்பதில் சிக்கல் அல்லது இரவு நேரங்களில் பார்வை திறன் மோசமாக இருப்பது ஆகியவையும் முதுமை சம்பந்தமாக கண்களில் ஏற்படும் சில மாற்றங்கள். 

இதையும் படிக்கலாமே: 

சாமந்திப்பூ ஒன்னு இருந்தாலே உங்க சரும பிரச்சினை எல்லாத்துக்கும் முடிவு கட்டிடலாம்!!!

அதிக வெளிச்சத்தை பார்க்கும் போது கண்கள் கூசுவது, கண்களில் உள்ள வெள்ளை பகுதி மஞ்சள் நிறமாக மாறுதல், கண்களின் லென்ஸில் மேகம் போன்ற தோற்றம் உருவாகுதல் போன்றவை கேட்டராக்ட் இருப்பதற்கான சில அறிகுறிகள். இப்போது தங்களின் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளவும், முதுமை தாக்கத்தை குறைக்கவும் உதவும் சில குறிப்புகளை பார்க்கலாம். 

சன் கிளாஸ் அணிவது

தீங்கு விளைவிக்கும் UV கதிர்களிடமிருந்து உங்கள் கண்களை பாதுகாக்க 100% UV பாதுகாத்துக் கொண்ட சன் கிளாஸ் அணியவும். இது கேட்டராக்ட் ஏற்படுவதை தவிர்க்க உதவும். 

செயற்கை கண்ணீர்

கண்களில் உள்ள வறட்சியை தடுப்பதற்கு வழக்கமான முறையில் ஐ ட்ராப்ஸ் பயன்படுத்தலாம். அதிலும் குறிப்பாக நீங்கள் அதிக நேரம் மொபைல் அல்லது கம்ப்யூட்டர் போன்றவற்றை பயன்படுத்தினாலோ அல்லது வறண்ட சுற்றுச்சூழலில் இருந்தாலும் இதனை நீங்கள் பயன்படுத்தலாம். 

ஆரோக்கியமான உணவு வைட்டமின்கள் மற்றும் ஆன்டி-ஆக்சிடன்ட்கள் நிறைந்த ஆரோக்கியமான உணவை சாப்பிடுவது அவசியம். வைட்டமின்கள் A, C மற்றும் E, அதுமட்டுமல்லாமல் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ள உணவுகள் கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். கீரை, கேரட், நப்ஸ் வகைகள் மற்றும் மீன் போன்றவற்றை சாப்பிடுங்கள். 

நீர்ச்சத்து 

போதுமான அளவு தண்ணீர் குடிப்பது உங்கள் உடல் மற்றும் கண்களுக்கு தேவையான நீர்ச்சத்தை வழங்கும். ஏனெனில் நீர்ச்சத்து இழப்பு வறண்ட கண்கள் மற்றும் அசௌகரியத்தை ஏற்படுத்தலாம். 

20-20-20 விதி 

ஸ்க்ரீன்களை அதிகமாக பார்ப்பதால் கண்களில் ஏற்படும் அழுத்தத்தை குறைப்பதற்கு 20-20-20 விதியை பின்பற்றுங்கள். ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கு ஒரு முறை 20 அடி தூரத்தில் உள்ள ஒரு பொருளை 20 வினாடிகளுக்கு பார்க்கவும். 

வழக்கமான கண் பரிசோதனை 

அடிக்கடி கண் பரிசோதனைகளை செய்து கொள்வது கண் தொடர்பான பிரச்சனைகளை ஆரம்பத்தில் கண்டுபிடிப்பதற்கு உதவும். அதன் மூலமாக உங்கள் கண்களின் ஆரோக்கியத்தை நீங்கள் பார்த்துக் கொள்ளலாம். மேலும் உங்கள் கண்களின் ஆரோக்கியம் மற்றும் தேவைகள் அடிப்படையில் தனிப்பட்ட ஆலோசனைகளை பெறலாம்.

Hema

Hi, I am hema, I am working as a Sub Editor at Updatenews360.

Recent Posts

இலங்கை தமிழர்களை கொச்சைப்படுத்தும் சூர்யா? திடீரென சர்ச்சையை கிளப்பிய பிரபலம்!

சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…

14 hours ago

7 மணி நேர வேலை… 2 நாள் விடுமுறை : சாம்சங் ஊழியர்கள் மீண்டும் போராட்டம்!

சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…

14 hours ago

ஆளுநருக்கு திடீர் மாரடைப்பு… மருத்துவமனைக்கு நேரில் சென்ற முதலமைச்சர்..!!

ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…

14 hours ago

ஆ ஊனா அமெரிக்கா கிளம்பிடுறாரே இந்த மனுஷன்? கமல்ஹாசன் திடீர் பயணத்துக்கு இதுதான் காரணமா?

எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…

14 hours ago

அரசு நிகழ்ச்சிக்கு ஹெலிகாப்டரில் வந்த அமைச்சர்கள்.. அடுத்த நிமிடமே விபத்து : அதிர்ச்சி வீடியோ!

தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…

15 hours ago

பொன்முடி பேசுனது தப்புதான்.. ஆனா . பெரியாரை விட மோசம் இல்ல.. காங்., மூத்த தலைவர் வக்காளத்து!

பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…

15 hours ago

This website uses cookies.