வேகமான நகர்ப்புற வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருக்கும்போது, உடற்பயிற்சிக்காக நேரத்தை ஒதுக்குவது பொதுவாக இயலாது. இருப்பினும் ஒருவர் தங்கள் வேலை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையை நிர்வகிக்க கற்றுக்கொள்ள வேண்டும். அலுவலகத்திலிருந்து திரும்பி வந்த பிறகு, ஒரு சில வீட்டு வேலைகளைச்
செய்வது கூடுதல் உடல் எடையை குறைக்க உதவும். இதனால் எடையைக் குறைப்பதற்கென தனியாக உடற்பயிற்சி செய்ய வேண்டி இருக்காது. இது சம்மந்தமான சில குறிப்புகளை இந்த பதிவில் பார்ப்போம்.
●லிஃப்ட் மற்றும் எஸ்கலேட்டர்களுக்கு பதிலாக படிக்கட்டுகளைத் தேர்வு செய்யுங்கள்:
நீங்கள் படிக்கட்டுகள் மற்றும் எஸ்கலேட்டர்களுக்கு இடையே தேர்வு செய்ய வேண்டியிருக்கும் போது, இனி படிக்கட்டுகளைத் தேர்ந்தெடுபங்கள். உங்கள் தளம் நடந்து செல்ல முடியாத அளவுக்கு உயரமாக இருந்தால், நீங்கள் லிஃப்டில் செல்லலாம். உங்கள் வழக்கத்தில் படிக்கட்டுகளை சிறிது ஈடுபடுத்துங்கள். மேலும் ஒவ்வொரு வாரமும் ஒரு புதிய இலக்கை அமைக்க மறந்துவிடாதீர்கள்.
●நடந்து கொண்டே பேசவும்:
குடும்பம், நண்பர்கள் அல்லது சக ஊழியர்களாக இருந்தாலும், நாம் அனைவரும் ஒரு நாளில் பெரும்பாலான நேரத்தை தொலைபேசியில் பேசுகிறோம். எனவே, இதை ஏன் நமக்கு சாதகமாக மாற்றக்கூடாது? உங்களுக்கு அழைப்பு வரும்போதெல்லாம், அது ஐந்து நிமிடங்களானாலும் அல்லது 30 நிமிடங்களாயினும் எப்போதும் நடந்து பேசிக்கொண்டே இருங்கள். இந்த வழியில் நீங்கள் உங்கள் உடலுக்கு வேலை தருகிறீர்கள். இதன் போது நீங்கள் கூடுதல் கலோரிகளை எரிக்கலாம்.
●உங்கள் வீட்டை சுத்தம் செய்யுங்கள்:
சுத்தம் செய்வது ஒரு அன்றாட நடைமுறையாகும். இதற்கு பலரது வீட்டில் உதவி ஆட்களை நியமித்துள்ளோம். ஏன் அதை நாமே செய்யக்கூடாது? பாத்திரங்களைக் கழுவுவது நமது கைகளுக்கு ஒரு சிறந்த பயிற்சியாக இருக்கும் அதே வேளையில், துடைப்பம் பயன்படுத்தி கூட்டுவது மற்றும் துடைப்பது உங்கள் மையத்தை இறுக்கமாக்கும் மற்றும் ஸ்குவாட் செய்வதன் நன்மைகளைப் பெற உதவும்.
கடந்த 21ஆம் தேதி பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான டிராகன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.…
கோவை மாவட்டம் சூலூர் அடுத்த நீலாம்பூர் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தமிழ் மாநில முஸ்லிம் லீக் அமைப்பின்…
ஈஷாவில் நடைபெறும் மஹாசிவராத்திரியை முன்னிட்டு தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து ஆதியோகி மற்றும் அறுபத்து மூவர் தேர்களுடன்…
திண்டுக்கல், செம்பட்டி சேடப்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி சக்திவேல் இவரது மனைவி கவுசல்யா, 2001ல் இவர்களது பக்கத்து விட்டில் நகை திருடுபோனது,…
இயக்குநர் வினாயக் சந்திரசேகரன் 'குட் நைட்' படத்தின் மூலம் தனது சினிமா பயணத்தை வலுவாகத் தொடங்கினார். குட் நைட் திரைப்படம்…
கடலூரில் மாயமான இரண்டு இளைஞர்களை சக நண்பர்களே அடித்துக் கொன்று புதைத்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. கடலூர்: கடலூர் மாவட்டம்,…
This website uses cookies.