இயற்கையாகவே சுருள் முடி கொண்ட பெண்கள் தங்கள் முடி பராமரிப்பு பற்றிய சில விஷயங்களை தெரிந்து கொள்வது அவசியம். சுருள் முடி அடிக்கடி சிக்காக்கூடும். இது எரிச்சலூட்டுவதாக அமையலாம். ஆனால் சுருட்டை முடி பார்ப்பதற்கு மிகவும் அழகான ஒன்று. அவை பெரும்பாலும் உடைந்து போகக்கூடும். எனவே சுருள் முடியை எவ்வாறு நிர்வகிப்பது என்பது பெரிய சவாலாக உள்ளது. உங்கள் சுருட்டை முடியை கவனித்துக் கொள்ள உதவும் சில குறிப்புகள் பற்றி பார்ப்போம்…
ஷாம்பு:
சுருள் முடி அடிக்கடி வறண்டு போகும். ஏனெனில் உங்கள் உச்சந்தலையில் உற்பத்தி செய்யப்படும் எண்ணெய்கள் உங்கள் இழைகளின் முனைகளை அடைவதற்குப் போராடுகிறது. ஆகவே, சுருள் முடிக்கு ஊட்டமளிக்கும் ஷாம்பூவைப் பயன்படுத்தவும்.
தலைமுடியை கழுவும் முன் சிகிச்சை:
அதேபோல், நீங்கள் ஃப்ரிஸ்ஸுக்கு ஆளாகிறீர்கள் என்றால், ஊட்டமளிக்கும் எண்ணெய் உங்களுக்கானது. கழுவும் முன் உங்கள் தலைமுடியை வேரில் இருந்து நுனி வரை ஊட்டச்சத்து நிறைந்த ஹேர் ஆயில் கொண்டு மசாஜ் செய்யவும்.
உலர்த்தும் போது கவனமாக இருங்கள்:
உங்கள் தலைமுடியைக் கழுவிய பிறகு, அதை துடைத்து உலர்த்தாதீர்கள். அது உங்கள் தலைமுடியை சேதமாக்கும். அதற்கு பதிலாக உங்கள் தலையை முன்னோக்கி சாய்த்து, அதிகப்படியான தண்ணீரை அகற்ற மெதுவாக மேல்நோக்கி அழுத்தவும்.
முடியை அடிக்கடி சீவ வேண்டாம்:
சுருள் முடியை அடிக்கடி சீவுதல் முடிக்கு சேதத்தை உண்டாக்கும். இது தலைமுடியை சிக்காக்கும். உங்கள் தலைமுடி ஈரமாக இருக்கும் போது தலைமுடியை சீவலாம்.
ஈரமான முடியில் எண்ணெய்களைப் பயன்படுத்துங்கள்:
உங்கள் தலைமுடி ஈரமாக இருக்கும்போதே சுருள் முடிக்கான தயாரிப்புகளைப் பயன்படுத்துங்கள். இது ஈரப்பதத்தை தக்க வைக்கவும், உங்கள் சுருட்டையை தடிமனாகவும் பளபளப்பாகவும் வைத்திருக்க உதவும்.
திருச்சி மாவட்டம், முசிறி தாலுகா, தா.பேட்டை அடுத்த வாளசிராமணி கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல் (43) டிப்ளமோ டெக்ஸ்டைல் இன்ஜினியரிங் படித்துவிட்டு…
ரவீனா தாஹா 2009 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மிகவும் பிரபலமான சீரீயலான “தங்கம்” தொடரில் குழந்தை நட்சத்திரமாக…
ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் இறந்த நெல்லூர் மாவட்டம் காவலியை சேர்ந்த மதுசூதன் ராவ் சோமிசெட்டியின் உடலுக்கு துணை…
புதுமைனா கமல்ஹாசன்தான்! சினிமாத்துறையை பொறுத்தவரை கமல்ஹாசன் பல நவீன தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்துள்ளார். இது பலருக்கும் தெரிந்த செய்திதான். ஆனால்…
தெலங்கானா மாநிலம் குமுரம்பீம் ஆசிபாபாத் மாவட்டம் ஜெய்னூர் மண்டலம், அடேசரா பழங்குடியினர் கிராமத்தைச் சேர்ந்த ரம்பாபாய் - பத்ருஷாவ் தம்பதியினரின்…
அடுத்த படத்துக்கு யார் இயக்குனர்? அஜித்குமார் நடிப்பில் வெளியான “குட் பேட் அக்லி” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை…
This website uses cookies.