ஆரோக்கியம்

இரவு நேரத்தில் ரத்த சர்க்கரை அளவுகள் குறையாமல் இருக்க இந்த குறிப்புகளை பின்பற்றினாலே போதும்!!!

டயாபடீஸ் பிரச்சனையுடன் வாழ்வது அவ்வளவு எளிதல்ல. இந்தியாவில் தொடர்ந்து டயாபடீஸ் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பெரும்பாலான நபர்கள் ரத்த சர்க்கரை அளவுகள் அதிகரிப்பதை பற்றி பேசும்பொழுது, குளுக்கோஸ் அளவுகள் குறைந்தால் என்ன ஆகும் என்பது பற்றியும் விழிப்புணர்வோடு இருப்பது அவசியம். சர்க்கரை அளவுகளில் கூடுதல் கவனம் செலுத்துவது டயாபடீஸ் பிரச்சனையை பராமரிப்பதில் முக்கிய பங்கு கொண்டுள்ளது. அதிலும் குறிப்பாக காலை நேரத்தில் பலர் குறைவான இரத்த சர்க்கரையை அனுபவிக்கலாம். இது ஹைபோகிளைசிமியா என்று அழைக்கப்படுகிறது. இரவு முழுவதும் பட்டினியாக இருந்ததாலும் இன்சுலின் விளைவாலும் இது ஏற்படுகிறது. எனவே காலை நேரத்தில் குறைந்த இரத்த சர்க்கரையை தவிர்ப்பதற்கு உதவும் சில குறிப்புகளை இப்பொழுது பார்க்கலாம். 

மாலை நேர ஸ்நாக்ஸ் ஆரோக்கியமான அதே நேரத்தில் சரிவிகித  தின்பண்டங்களை சாப்பிடுவது இரவு முழுவதும் உங்களுடைய இரத்த சர்க்கரையை சீராக வைப்பதற்கு உதவும். நீங்கள் சாப்பிடும் தின்பண்டங்களில் கார்போஹைட்ரேட், புரோட்டீன் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் இருக்க வேண்டும். இவை அனைத்துமே உங்களுடைய குளுக்கோஸ் பொறுமையாக உறிஞ்சப்படுவதை உறுதி செய்து இரவு முழுவதும் உங்களுக்கு சீரான ஆற்றல் கிடைப்பதற்கு உதவும். 

நார்ச்சத்து நிறைந்த உணவுகள் 

உங்களுடைய மாலை நேர உணவில் நார்ச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவது இரவு முழுவதும் சீரான ரத்த அளவுகளை பராமரிப்பதற்கு உதவும். முழு தானியங்கள், பீன்ஸ் வகைகள், பழங்கள் மற்றும் காய்கறிகள் போன்ற நார்ச்சத்து நிறைந்த உணவுகள் செரிமானத்தை மெதுவாக்கி, கார்போஹைட்ரேட்டுகள் பொறுமையாக உறிஞ்சப்படுவதை உறுதி செய்யும். இதனால் ரத்த ஓட்டத்தில் குளுக்கோஸ் பொறுமையாக வெளியிடப்படும். இதனால் நீங்கள் தூங்கும் பொழுது உங்களுடைய ரத்த சர்க்கரை அளவு திடீரென்று குறையாது. 

தண்ணீர் 

நீர்ச்சத்து இழப்பு காரணமாகவும் ரத்த சர்க்கரை அளவுகள் பாதிக்கப்படலாம். எனவே நாள் முழுவதும் மற்றும் இரவு தூங்க செல்லும் பொழுது நீங்கள் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது அவசியம். தண்ணீர் பருகுவது நம்முடைய ரத்த சர்க்கரை அளவுகளை சீராக பராமரிக்கும். 

இதையும் படிக்கலாமே: இதயத்தை ஆரோக்கியமாக வைக்க எந்தெந்த சமையல் எண்ணெய்களை பயன்படுத்தலாம்…???

மதுபானம் 

மதுபானங்கள் பருகுவது அதிலும் குறிப்பாக வெறும் வயிற்றில் பருகுவது ரத்த சர்க்கரை அளவுகளில் ஏற்ற இறக்கங்களை ஏற்படுத்தலாம். மதுபானங்கள் குளுக்கோனியோஜெனிசிஸ் செயல்முறையை தடுக்கும் திறன் கொண்டது. அதாவது கல்லீரல் குளுக்கோசை உற்பத்தி செய்யும் செயல்முறை குளுக்கோனியோஜெனிசிஸ் என்று அழைக்கப்படுகிறது. இதனால் இரவு நேரத்தில் ஹைபோகிளைசிமியா ஏற்படலாம். 

ரத்த சர்க்கரையை கண்காணிப்பது 

படுக்கைக்கு செல்வதற்கு முன்பு ரத்த சர்க்கரை அளவை தினமும் கண்காணிப்பது ஹைபோகிளைசிமியா பிரச்சனை ஏற்படுவதை தடுக்க உதவும். ஒரு வேலை உங்களுடைய அளவுகள் குறைவாக இருந்தால் சர்க்கரை அளவை மீண்டும் பாதுகாப்பான அளவுக்கு கொண்டு வருவதற்கு ஒரு சிறிய அளவு தின்பண்டத்தை நீங்கள் சாப்பிடலாம். 

மருந்துகள் 

அடிக்கடி காலை நேரங்களில் உங்களுடைய ரத்த சர்க்கரை அளவு குறைவாக இருப்பதை நீங்கள் கவனித்தால் அதற்கேற்ற மருந்துகளை சாப்பிடுவதற்கு நீங்கள் கட்டாயமாக மருத்துவரை ஆலோசிக்க வேண்டும். உங்களுடைய உணவு சாப்பிடும் பழக்க வழக்கங்கள் மற்றும் உடல் செயல்பாடுகளின் அடிப்படையில் அதற்கு மருந்து சாப்பிடுவதற்கான நேரத்தையும் அளவையும் அவர் உங்களுக்கு பரிந்துரைப்பார்.

Hema

Hi, I am hema, I am working as a Sub Editor at Updatenews360.

Recent Posts

90களின் நயன்தாராவுக்கு ரூட்டு விட்ட முரட்டு நடிகர்… அஜித் மீதுள்ள ஆசையால் சினிமாவை விட்டு விலகல்!

முரட்டு நடிகர் வீசிய காதல் வலையில் சிக்கித் தவித்த பிரபல நடிகை சினிமாவை விட்டே ஒதுங்கிய விஷயம் குறித்து பிரபலம்…

19 minutes ago

மெரினா கடலில் இளம்பெண்கள் செய்த செயலைப் பாருங்க.. ரோந்து போலீசார் பகீர் தகவல்!

சென்னை மெரினா கடலில் பெற்றோரின் திடீர் பிரிவால் மகள்கள் விபரீத முடிவை எடுக்கச் சென்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை…

39 minutes ago

வீர தீர சூரன் நான் இல்லை, நீங்கதான்- திண்டுக்கலில் சீயான் விக்ரம் செய்த சம்பவம்…

கலவையான விமர்சனம்… எஸ்.யு.அருண் குமார் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிப்பில் கடந்த வாரம் வெளியான “வீர தீர சூரன் பார்ட்…

48 minutes ago

காரை துரத்திய பைக்.. கல் வீசி கண்ணாடி உடைப்பு : NH சாலையில் இளைஞர்கள் நடத்திய போதை ஆட்டம்!

காஞ்சிபுரத்தை சேர்ந்த சஞ்சீவி என்பவர் குடும்பத்துடன் காரில் திண்டுக்கல் சென்றுக்கொண்டிருந்த நிலையில் விழுப்புரம் புறவழிச் சாலையில் இருசக்கர வாகனத்தின் மீது…

1 hour ago

துர்நாற்றம் வீசிய வீடு.. கொடூரமாகக் கிடந்த கருணாஸ் கட்சி நிர்வாகி.. சென்னையில் அதிர்ச்சி!

சென்னை, விருகம்பாக்கத்தில் வழக்கறிஞர் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்படுகிறது. சென்னை: சென்னையின் விருகம்பாக்கம்,…

1 hour ago

செங்கோட்டையனும், விஜயும்.. அண்ணாமலை சொன்ன சீக்ரெட்!

மத்திய அரசின் பாதுகாப்பு கொடுப்பதற்காக விஜய்க்கும், பாஜகவுக்கும் எந்த உடன்பாடும் கிடையாது என அண்ணாமலை கூறியுள்ளார். கோயம்புத்தூர்: தமிழக பாஜக…

2 hours ago

This website uses cookies.