ஆரோக்கியம்

நிம்மதியான இரவு தூக்கத்தை தூண்டும் இரகசியங்கள்!!!

தரமான இரவு தூக்கம் என்பது நமது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் அத்தியாவசியமானது. இது நம்முடைய உடல் மற்றும் மனதிற்கு ஓய்வையளித்து, மீண்டும் புத்துணர்ச்சியோடு அடுத்து செயல்படுவதற்கு உதவுகிறது. ஆனால் உலகம் முழுவதும் பலர் தூக்கமின்மை பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளனர். தோராயமாக 30 சதவீத மக்கள் தூக்கம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளால் அவதிப்பட்டு வருகின்றனர். அதிலும் குறிப்பாக 10 முதல் 15% பெரியவர்கள் நாள்பட்ட தூக்கமின்மை பிரச்சனையை எதிர்கொள்கின்றனர். ஆனால் ஆழமான தூக்கத்தை பெறுவதற்கு ஒரு சில யுக்திகள் உள்ளன. அவற்றை பின்பற்றினால் படுத்த உடனேயே உறங்கி நல்ல தரமான தூக்கத்தை பெறலாம். 

*உங்களுடைய மனம் ரிலாக்ஸாக இருந்தால் உங்களுக்கு நல்ல தூக்கம் கிடைக்கும். எனவே உங்கள் உடல் மற்றும் மனதில் இருக்கும் மன அழுத்தத்தை அவிழ்த்து விடுங்கள். உங்களுக்கு தூக்கம் இயற்கையாகவே வந்துவிடும். ஆனால் இந்த மன அழுத்தத்தை கட்டுப்படுத்துவதற்கு நீங்கள் ஒரு சில விஷயங்களை செய்ய வேண்டும். அவற்றில் ஒன்று தியானம். இது உங்களை ஆழ்ந்த ஓய்வுக்கு எடுத்துச் சென்று மன அழுத்தத்தில் இருந்து விடுபட உதவுகிறது. தியானம் உங்களுடைய நரம்பு மண்டலத்தை அமைதிபடுத்தி, மனதை ஆற்றுகிறது. உங்கள் மனதுக்கு ஆற்றலை அளிக்கும் ஒரு வலிமையான கருவியாக தியானம் பார்க்கப்படுகிறது. 

*அடுத்ததாக படுக்கைக்கு செல்வதற்கு முன்பு உங்களுடைய தோல்விகள் மற்றும் கவலைகளை பற்றி நினைப்பதை தவிர்த்து விடுங்கள். இதனால் நீங்கள் சோர்வாகவும், எரிச்சலாகவும் உணர்வீர்கள். மாறாக உங்களுடைய சாதனைகள் மற்றும் பாசிட்டிவான தருணங்களில் கவனம் செலுத்துங்கள். உங்களுக்கு கிடைத்த நல்லவற்றிற்கு நன்றி கூறலாம். எனவே தூங்குவதற்கு முன்பு எப்பொழுதும் பாசிட்டிவான எண்ணங்களை வளர்த்துக் கொள்வது நல்ல தூக்கத்தை வரவழைப்பதற்கு உதவும். 

*”நான் விரைவாக தூங்கி விட வேண்டும்” என்று நினைத்துக் கொண்டே இருந்தால் கட்டாயமாக உங்களுக்கு தூக்கம் வராது. அதற்கு பதிலாக உங்களை நீங்களே அமைதிப்படுத்திக் கொள்ளுங்கள். அமைதியான எண்ணங்கள் அல்லது ஆழ்ந்த மூச்சு பயிற்சிகளை எடுப்பது உங்களுக்கு ஓய்வு நிலைக்கு அழைத்துச் செல்லும். இந்த நேரத்தில் யோக நித்ரா பயிற்சி செய்வது பயனுள்ளதாக அமையும். 

*இரவு உணவை விரைவாக சாப்பிடுங்கள். தாமதமாக சாப்பிட்டால் உங்களுடைய மெட்டபாலிக் விகிதம் அதிகமாக இருக்கும். இதனால் உங்களுடைய தூக்கம் கெடலாம். 

இதையும் வாசிக்கலாமே: ஹை BPய இவ்வளோ ஈசியா கண்ட்ரோல் பண்ண முடியுமா…?? 

*நாளை பற்றிய பதட்டம் அல்லது கவலை எதுவும் வைத்திருக்க வேண்டாம். அதுமட்டுமல்லாமல் கடந்து வந்த விஷயங்களை பற்றியும் நினைத்துக் கொண்டு இருக்காதீர்கள்.  இது போன்ற எண்ணங்கள் உங்களை தூங்க விடாது. உங்களை தூங்கவிடாமல் செய்யும் விஷயம் என்ன என்பதை கண்டுபிடியுங்கள். அதற்கான தீர்வை பெற்றால் நிச்சயமாக உங்களுக்கு நல்ல தூக்கம் கிடைக்கும்.

தினமும் பிராணயாமம் மற்றும் தியானம் போன்றவற்றை உங்களுக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் அடிக்கடி செய்யுங்கள். நிச்சயமாக உங்களுக்கு நல்ல முடிவுகள் கிடைக்கும். 

*தூங்கும் பொழுது இடதுபுறமாக படுத்து உறங்கு உறங்குவது நல்ல தூக்கத்தை வரவழைக்கும் என்று சொல்லப்படுகிறது. இரவு நேரத்தில் அளவுக்கு அதிகமாக சாப்பிடுவது அல்லது தாமதமாக உணவு சாப்பிடுவது போன்றவற்றை தவிர்த்து விடுங்கள். மேலும் வலதுபுறமாக படுத்து உறங்குவதும் மோசமான  தூக்கத்தை கொடுக்கலாம். 

உங்களுடைய ஆரோக்கியத்தை பராமரிப்பதற்கு தரமான தூக்கம் மிகவும் முக்கியம். தொடர்ச்சியாக உங்களுக்கு தூங்குவதில் சிக்கல் இருந்தால் மருத்துவரை அணுகி அதற்கான தீர்வை நாடுங்கள்.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

Hema

Hi, I am hema, I am working as a Sub Editor at Updatenews360.

Recent Posts

60 வயது நடிகருடன் நடித்தேன்..சினிமா வாழ்க்கையை போச்சு..புலம்பும் சர்ச்சை நடிகை.!

60 வயது நடிகருடன் நான் இருந்தனா-கஸ்தூரி அதிர்ச்சி தகவல் தமிழ்,தெலுங்கு,மலையாள என பல திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம்…

9 hours ago

கேமியோ ரோலில் பிரபல தெலுங்கு நடிகர்..”ஜெயிலர் 2″ சம்பவம் லோடிங்.!

நந்தமூரி பாலகிருஷ்ணாவின் அதிரடி என்ட்ரி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாக உள்ள ஜெயிலர் 2 திரைப்படத்தில் பிரபல தெலுங்கு…

10 hours ago

“WHAT BRO”நான் குல்லா போடுற ஆள் இல்லை..மேடையில் விஜயை தாக்கிய பிரபலம்.!

வாட் ப்ரோ..? கூல் சுரேஷின் சர்ச்சைக்குரிய உரை தமிழில் சில படங்களில் நடித்திருப்பவர் கூல் சுரேஷ்,இவர் நடித்து ஃபேமஸ் ஆனதைவிட…

10 hours ago

மருமகள், பேத்தியையும் விட்டுவைக்கவில்லை.. மாமியாருடன் சேர்ந்து செய்த பகீர் காரியம்!

கடலூரில், மருமகள் மற்றும் பேத்திகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக மாமனாரை மாமியாருடன் சேர்ந்து தீயிட்டது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு…

11 hours ago

சர்ப்ரைஸ்.! ‘குட் பேட் அக்லி’ பட ரிலீஸில் ட்விஸ்ட்…தமிழில் இதுவே முதல்முறை.!

தமிழ் சினிமாவில் புதிய முயற்சி அஜித் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய "குட் பேட் அக்லி" படம் வருகிற ஏப்ரல்…

12 hours ago

எங்களுக்கு எந்த நிலத்தகராறும் இல்லை.. பரபரப்புக்கு முற்றுப்புள்ளி வைத்த செளந்தர்யா கணவர்!

சொத்து குறித்து மோகன் பாபு மற்றும் சௌந்தர்யா தொடர்பாக ஒரு தவறான செய்தி பரவி வருகிறது என நடிகையின் கணவர்…

12 hours ago

This website uses cookies.