மூன்றே நாட்களில் கொலஸ்ட்ரால் மற்றும் BP-யைக் குறைக்கும் அற்புதமான ஜூஸ்!!!

Author: Hemalatha Ramkumar
10 June 2022, 11:09 am

உயர் இரத்த அழுத்தம் மற்றும் உயர் கொலஸ்ட்ரால் ஆகியவை பெரும்பாலும் அமைதியான கொலையாளிகள் என்று குறிப்பிடப்படுகின்றன. ஏனெனில் அவை ஆரம்ப எச்சரிக்கை அறிகுறிகளைக் கொண்டிருக்காது. இந்தியாவில் சுமார் 10 மில்லியன் மக்கள் இந்த நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். பெரும்பாலான மக்கள் உயர் இரத்த அழுத்தத்தை மிகவும் இலகுவாக எடுத்துக்கொள்கிறார்கள். ஆனால் சிகிச்சையளிக்கப்படாவிட்டால், அது இருதய பிரச்சனைக்கு வழிவகுக்கும். சமீபத்திய ஆய்வின்படி, ஒரு குறிப்பிட்ட வகையான உப்பு சேர்க்காத சாறு குடிப்பது இரத்த அழுத்தம் மற்றும் அதிக கொழுப்பைக் குறைக்க உதவும்.

இரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ரால் அளவு பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்கு தினமும் ஒரு டம்ளர் உப்பு சேர்க்காத தக்காளி சாறு குடிப்பது நன்மை பயக்கும் என்று சமீபத்தில் தெரியவந்துள்ளது. இது இருதய நோய் அபாயத்தைக் குறைக்கவும் உதவுகிறது.

ஒரு ஆய்வின்படி, ஆராய்ச்சியாளர்கள் ஆண் மற்றும் பெண் உட்பட கிட்டத்தட்ட 500 பேரை ஆய்வு செய்தனர். இந்த ஆய்வானது தக்காளி சாறு சில அற்புதமான ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது என்று வெளியிடப்பட்டது.
ஆய்வுக்குப் பிறகு, சிகிச்சை அளிக்கப்படாத உயர் இரத்த அழுத்தம் கொண்ட 94 பங்கேற்பாளர்கள் இந்த சாற்றை தொடர்ந்து குடித்த பிறகு அவர்களின் இரத்த அழுத்தம் கணிசமாகக் குறைந்துள்ளது என்று முடிவு செய்யப்பட்டது.

சிஸ்டாலிக் இரத்த அழுத்தம் 141.2 இலிருந்து 137 மிமீஹெச்ஜிக்கு குறைந்தது. மேலும் டயஸ்டாலிக் இரத்த அழுத்தம் 83.3 இலிருந்து 80.9 மிமீஹெச்ஜிக்கு குறைந்தது.

உப்பு சேர்க்காத தக்காளி ஜூஸ் குடிப்பதால் ஏற்படும் பாதிப்புகள்:
இதன் விளைவு ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒரே மாதிரியாக இருக்கும் என்று ஆராய்ச்சியாளர் கூறினார்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ