ஆரோக்கியம்

உங்க வீட்டு கிட்சன்ல அசால்ட்டா தூங்கிகிட்டு இருக்க இந்த பொருள் BPக்கு மருந்தா இருக்கும்னு நினைச்சு கூட பார்த்து இருக்க மாட்டீங்க!!!

தனித்துவமான சுவை மற்றும் வாசனை மூலமாக உணவுக்கு நல்ல ஒரு ஃபிளேவரை கொடுக்கக் கூடியது தான் ஏலக்காய். இது பல்வேறு விதமான உணவுகளில் பயன்படுத்தப்படுகிறது. ஏலக்காய் பொதுவாக உணவின் சுவை மற்றும் வாசனையை அதிகரிப்பதற்கு பயன்படுத்தப்படுகிறது. ஆனால் அது மட்டுமல்லாமல் ஏலக்காயில் பொட்டாசியம், கால்சியம் மற்றும் மெக்னீசியம் போன்ற தாதுக்களும் காணப்படுகின்றன. சமையலில் மட்டும் அல்லாமல் ஏலக்காய் இன்னும் பல பயன்பாடுகளை கொண்டுள்ளது. அவற்றை ஒவ்வொன்றாக இந்த பதிவில் பார்க்கலாம். 

இரவு தூங்குவதற்கு முன்பு வாயில் ஏலக்காயை போட்டுக் கொள்வது வயிற்று உப்புசம், வாயு தொல்லை மற்றும் வயிறு அசௌகரியங்கள் போன்ற பிரச்சினைகளில் இருந்து விடுபட உதவும். ஏலக்காயை வாயில் வைத்தபடி நீங்கள் தூங்கும் பொழுது அதில் உள்ள சாறு மெதுமெதுவாக உங்கள் வயிற்றுக்குள் நுழைய ஆரம்பிக்கும். இது வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை போக்குகிறது. 

ஒருவேளை உங்கள் வாயிலிருந்து கெட்ட சுவாசம் வருகிறது என்றால் இரவில் உங்கள் வாயில் ஏலக்காயை போட்டுக் கொள்வது இந்த பிரச்சனையில் இருந்து தப்பிக்க உதவும். ஏலக்காயில் உள்ள இயற்கை எண்ணெய்கள் உங்களுக்கு புத்துணர்ச்சியான உணர்வை தருகிறது. இது வாய் துர்நாற்றத்தை போக்கி உங்களுடைய சுவாசத்தை புத்துணர்ச்சியாக மாற்றுகிறது. 

ஏலக்காயில் வீக்க எதிர்ப்பு பண்புகள் உள்ளன. எனவே நமது உடலில் உள்ள வீக்கத்தை குறைத்து ஆரோக்கியமான செல்களை ஊக்குவிக்கிறது. 

ஏலக்காய் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவதற்கு உதவுகிறது. இதில் உள்ள பண்புகள் நம்முடைய ரத்த அழுத்தத்தை குறைக்கும். நமது உடலில் ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. வாயில் ஏலக்கையை போட்டுக் கொண்டு தூங்குவதால் உங்களுடைய மனநிலை  மேம்படும். இது மன அழுத்தத்தை குறைத்து, மனதிற்கு அமைதி தருகிறது. 

இதையும் படிக்கலாமே: தலைமுடிக்கு மீன் எண்ணெயா… இத்தனை நாள் இது தெரியாம போச்சே!!!

ஏலக்காயில் உள்ள இயற்கை காம்பவுண்டுகள் நமது உடலில் இருந்து நச்சு கழிவுகளை வெளியேற்றுகிறது. நச்சுகள் நமது உடலில் சேமிக்கப்படுவதால் பல்வேறு விதமான பிரச்சனைகள் ஏற்படலாம். எனவே ஏலக்காய் ஒரு இயற்கை டீடாக்சிஃபையராக செயல்படுகிறது. 

ஏலக்காயில் ஆன்டி-ஆக்சிடன்ட்கள் அதிகம் உள்ளது. அவை ஃப்ரீ ரேடிக்கல்களுக்கு எதிராக போராடி வயதான அறிகுறிகளை தடுக்கிறது. மேலும் ஏலக்காய் பல்வேறு விதமான சரும பிரச்சனைகளில் இருந்து பாதுகாக்கிறது. சரும செல்களுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆக்சிஜனை வழங்கி அவை சமூகமாக செயல்படுவதற்கு ஏலக்காய் உதவுகிறது. 

ஏலக்காய் சருமத்தில் உள்ள இறந்த செல்களை அகற்றி அதற்கு தேவையான ஈரப்பதத்தை வழங்குகிறது. ஒரு ஸ்பூன் ஏலக்காய் பொடியை ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் மற்றும் ஒரு சில துளிகள் எலுமிச்சை சாற்றோடு கலந்து முகத்தில் தடவினால் நல்ல முடிவுகளை பெறலாம். ஆனால் இதனை பயன்படுத்துவதற்கு முன்பு நீங்கள் பேட்ச் சோதனை செய்து பார்ப்பது அவசியம். முகத்தில் ஏதேனும் சிவத்தல், தடிப்பு அல்லது தொற்று ஏற்பட்டால் இதனை பயன்படுத்துவதை தவிர்க்கவும்.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

Hema

Hi, I am hema, I am working as a Sub Editor at Updatenews360.

Recent Posts

இலங்கை தமிழர்களை கொச்சைப்படுத்தும் சூர்யா? திடீரென சர்ச்சையை கிளப்பிய பிரபலம்!

சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…

8 hours ago

7 மணி நேர வேலை… 2 நாள் விடுமுறை : சாம்சங் ஊழியர்கள் மீண்டும் போராட்டம்!

சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…

8 hours ago

ஆளுநருக்கு திடீர் மாரடைப்பு… மருத்துவமனைக்கு நேரில் சென்ற முதலமைச்சர்..!!

ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…

8 hours ago

ஆ ஊனா அமெரிக்கா கிளம்பிடுறாரே இந்த மனுஷன்? கமல்ஹாசன் திடீர் பயணத்துக்கு இதுதான் காரணமா?

எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…

8 hours ago

அரசு நிகழ்ச்சிக்கு ஹெலிகாப்டரில் வந்த அமைச்சர்கள்.. அடுத்த நிமிடமே விபத்து : அதிர்ச்சி வீடியோ!

தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…

9 hours ago

பொன்முடி பேசுனது தப்புதான்.. ஆனா . பெரியாரை விட மோசம் இல்ல.. காங்., மூத்த தலைவர் வக்காளத்து!

பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…

9 hours ago

This website uses cookies.