பனங்கற்கண்டு பயன்படுத்தி இவ்வளோ கை வைத்தியம் இருக்கா???

பனை மரத்தில் இருந்து நமக்கு பனங்கிழங்கு, நுங்கு, பதநீர், பனை வெல்லம், பனங்கற்கண்டு போன்ற ஏராளமான நன்மை தரும் பொருட்கள் கிடைக்கிறது. “பனங்கற்கண்டு” என்பது பனைவெல்லத்திலிருந்து செய்யப்படும் இனிப்பு சுவையுடைய உணவு பொருளாகும். உணவில் பனங்கற்கண்டு சேர்த்துக் கொள்வதால் நமக்கு கிடைக்கும் ஏராளமான நன்மைகளில் ஒரு சிலவற்றை பார்ப்போம்.

நமது உடலில் நோய்கள் எதுவும் வராமல் தடுக்க நமக்கு நோய் எதிர்ப்பு சக்தி அவசியமாகும். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் பனங்கற்கண்டு, முந்திரி பருப்பு, மிளகு தூள் மற்றும் சிறிது கடுக்காய் பொடி சேர்த்து வாரத்திற்கு இரண்டு முறை சாப்பிட்டு வருவதால் இரத்தத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம்.

பனங்கற்கண்டை வெறும் வாயில் போட்டு அந்த உமிழ் நீரை விழுங்குவதன் மூலம் குளிர்காலத்தில் ஏற்படும் ஜலதோஷம், நெஞ்சுசளி, வறட்டு இருமல், தொண்டை கரகரப்பு, போன்றவற்றை குணப்படுத்த உதவுகிறது.

ஞாபக மறதி உள்ளவர்கள் பனங்கற்கண்டு, சீரகம் மற்றும் சிறிதளவு அகத்திக்கீரை சாறு ஆகியவற்றை சேர்த்து இரவில் உறங்குவதற்கு முன் சாப்பிட்டு வந்தால் நினைவாற்றல் அதிகரிக்கும். குழந்தைகள் இதை சாப்பிடுவதால் அவர்களுக்கு மூளை வளர்ச்சி அதிகரித்து நினைவுத்திறன் அதிகரிக்கவும் உதவுகிறது.

உடல் சூட்டை தணிப்பதற்கு பனங்கற்கண்டு பெரிதும் உதவுகிறது. உடல் சூட்டால் ஏற்படும் நீர் சுருக்கு, வயிற்றுப்போக்கு, உஷ்ணம், கட்டிகள் போன்றவற்றை குணப்படுத்தவும் உதவுகிறது.

ஒரு ஸ்பூன் பனங்கற்கண்டுடன், அரை ஸ்பூன் மிளகுத்தூள், சிறிதளவு சுக்கு ஆகியவற்றை அரைத்து சாப்பிட்டு வந்தால் மழைக்காலங்களில் ஏற்படும் தொண்டை கட்டு மற்றும் தொண்டை வலி ஆகியவை குணமாகிறது.

வாய் துர்நாற்றம் உள்ளவர்கள் சிறிதளவு சீரகம், சோம்பு மற்றும் பனங்கற்கண்டு ஆகியவற்றை மென்று சாப்பிடுவதன் மூலம் வாய் துர்நாற்றத்தை போக்கலாம்.

ஆக்சாலிக் அமிலம் மற்றும் கால்சியம் அதிகம் உள்ள உணவுகளை சாப்பிடுவதால் சிறுநீரகத்தில் கல் உருவாகிறது. 10 மில்லி அளவிற்கு முள்ளங்கி சாறு மற்றும் இரண்டு ஸ்பூன் பனங்கற்கண்டு சேர்த்து வாரத்திற்கு இருமுறை சாப்பிடுவதன் மூலம் சிறுநீரகக் கல் கரைக்கப்பட்டு சிறுநீர் வழியாக வெளியேற்றப்படுகிறது.

பனங்கற்கண்டு சாப்பிடுவதால் கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்படும் மலச்சிக்கல், வயிற்று புண் ஆகியவை குணப்படுத்தப்படுகிறது. மேலும் ரத்த அழுத்தத்தை சீராக வைக்கிறது. வைட்டமின் சி குறைவால் பல் ஈறுகளில் ஏற்படும் ரத்த கசிவை குணப்படுத்துகிறது.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

Hema

Hi, I am hema, I am working as a Sub Editor at Updatenews360.

Share
Published by
Hema

Recent Posts

இந்த படத்தை தடை செய்ய வேண்டும்! சட்டசபையில் எழுந்த விவாதம்- இப்படி எல்லாம் நடந்திருக்கா?

தடை செய் தடை செய்… தமிழ் சினிமா உலகில் பல திரைப்படங்களுக்கு பல காரணங்களுக்காக தடை விதிக்க வேண்டும் என…

1 hour ago

சுயமரியாதை இருந்தால் ஆளுநர் மாளிகையைவிட்டு வெளியே போங்க : ஆர்எஸ் பாரதி காட்டம்!

தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போட்டு வந்தார். இதனால் தமிழக அரசு - ஆளுநருக்கும் மோதல்…

2 hours ago

அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் முதல் காட்சி வெளிவராது- விநியோகஸ்தர்கள் திட்டவட்டம்

தயாராகி வரும் கொண்டாட்டங்கள் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…

3 hours ago

அமைச்சரின் சகோதரர் கொலை வழக்கில் போலி என்கவுண்டர் நடத்த பிளான் : சீமான் பகீர் குற்றச்சாட்டு!

திருச்சி நீதிமன்றத்தில் வருண் குமார் தொடுத்த வழக்கில் இன்று ஆஜராக வந்த நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.…

4 hours ago

மகன் தீ விபத்தில் சிக்கியதை அறிந்தும் மக்களை சந்தித்த துணை முதல்வர்.. நெகிழ வைத்த பவன் கல்யாண்!

ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் இரண்டாவது மகன் மார்க் ஷங்கர் (வயது 8) சிங்கப்பூரில் உள்ள பள்ளி ஒன்றில்…

5 hours ago

This website uses cookies.