ஆரோக்கியம்

உணவில் பிளாஸ்டிக்கா… அதை கண்டுபிடிப்பது எப்படி???

இன்று எல்லா வகையான பொருட்களிலுமே கலப்படம் உள்ளது. உணவுகள் மட்டும் இதற்கு விதிவிலக்கா என்ன? நாம் சாப்பிடக்கூடிய அரிசி, முட்டை, பழங்கள் என்று கிட்டத்தட்ட அனைத்து உணவுகளிலும் கலப்படம் காணப்படுகிறது. நாம் சற்று அசால்டாக இருந்து விட்டால் இந்த கலப்படங்களை சாப்பிட வேண்டிய சூழ்நிலை ஏற்படும். எனவே வெளியிலிருந்து வாங்கும் உணவுகளின் தரத்தை எப்பொழுதும் சோதித்துப் பார்ப்பது அவசியம். மனிதனால் செய்யப்பட்ட கலப்படங்கள் மட்டுமல்லாமல் எதிர்பாராத விதமாகவும் உணவுகளில் தேவையற்ற பொருட்கள் சேரலாம்.

அந்த வகையில் உணவில் மைக்ரோ பிளாஸ்டிக் கலந்திருப்பது தற்போது மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. இந்த மைக்ரோ பிளாஸ்டிக் பல்வேறு நாள்பட்ட நோய்களுக்கு வழிவகுக்கும் மோசமான ஒன்று. எனவே மைக்ரோ பிளாஸ்டிக் உணவில் கலந்து இருக்கிறதா என்பதை தெரிந்து வைத்துக் கொள்வது மிகவும் அவசியம். மைக்ரோ பிளாஸ்டிக் என்பது உணவில் பல்வேறு வழிகளில் கலக்கலாம்.

மைக்ரோ பிளாஸ்டிக் பொதுவாக நன்னீர் மற்றும் கடல் சூழலில் இருக்கும். இது கடல்வாழ் உயிரினங்கள் மூலமாக நுழைக்கப்படுகிறது. இந்த உயிரினங்களை பெரிய மீன்கள் சாப்பிட்டு அந்த மீன்களை மனிதர்கள் சாப்பிடும் பொழுது அது மனிதர்களுக்கு மோசமான விளைவுகளை உண்டாக்கும். மேலும் அடுத்த படியாக உணவை பதப்படுத்துதல், பேக்கேஜிங் அல்லது சேமிப்பு செயல்முறையின் பொழுது மைக்ரோ பிளாஸ்டிக் கலக்க வாய்ப்பு உள்ளது. அடுத்தபடியாக காற்று மூலமாகவும் மைக்ரோ பிளாஸ்டிக் உணவில் கலக்கலாம். குறிப்பாக பழங்கள், காய்கறிகள் மற்றும் கடல் சார்ந்த உணவுகள் சுற்றுச்சூழலுக்கு வெளிப்படும் பொழுது இந்த பிரச்சனை உருவாகிறது.

உணவில் மைக்ரோ பிளாஸ்டிக் கலந்திருக்கிறதா என்பதை அடையாளம் காண்பது எப்படி?
மைக்ரோ பிளாஸ்டிக் சிறிய அளவில் இருப்பதால் அதனை வெறும் கண்ணால் பார்த்து கண்டெடுப்பது சவாலான ஒன்றுதான். ஒருவேளை நீங்கள் உங்களுடைய உணவில் சிறிய நிறம் உள்ள துகள்கள் அல்லது ஃபைபர்கள் போல் ஏதேனும் கண்டால் அவை மைக்ரோ பிளாஸ்டிக் ஆக இருக்கக்கூடும்.

மைக்ரோ பிளாஸ்டிக் உணவின் அமைப்பை மாற்றிவிடும். உதாரணமாக கடல் சார்ந்த உணவுகள் கரகரப்பாகவும் அல்லது காய்கறிகள் சற்று நார் நாராகவும் இருப்பதைக் கண்டால் அதில் மைக்ரோ பிளாஸ்டிக் இருக்க வாய்ப்புள்ளது. கடல் உணவுகள் அதிலும் குறிப்பாக ஷெல்ஃபிஷ் போன்றவற்றில் அதிக அளவில் மைக்ரோ பிளாஸ்டிக் இருப்பதாக ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே கடல் உணவுகளை சாப்பிடும் பொழுது மிகவும் எச்சரிக்கையாக இருக்கவும்.

மைக்ரோ பிளாஸ்டிக் காரணமாக ஏற்படும் அபாயங்கள்
மைக்ரோ பிளாஸ்டிக் சாப்பிடுவதால் வீக்கம், மலச்சிக்கல் அல்லது வயிற்றுப்போக்கு போன்ற செரிமான பிரச்சனைகள் ஏற்படலாம். ஒரு சில பிளாஸ்டிக் வகைகளில் உள்ள கெமிக்கல்கள் உணவில் நுழைய வாய்ப்புள்ளது. இந்த கெமிக்கல்கள் இனப்பெருக்க ஆரோக்கியத்தில் சிக்கல்களை ஏற்படுத்த கூடும். மைக்ரோ பிளாஸ்டிக் கடல்வாழ் உயிரினங்களின் திசுக்களில் சேர்ந்து ஒட்டுமொத்த உணவு சங்கிலியையே பாதிப்படைய செய்கிறது.

மைக்ரோ பிளாஸ்டிக்களை குறைப்பது எப்படி?

எப்பொழுதும் பதப்படுத்தப்பட்ட உணவுகளுக்கு பதிலாக எப்பொழுதும் ஃபிரஷான பழங்கள் மற்றும் காய்கறிகளை தேர்ந்தெடுத்து சாப்பிடுங்கள். வெளியில் வாங்கும் பழங்கள், காய்கறிகள் மற்றும் கடல்சார் உணவுகளை ஓடும் தண்ணீரில் நன்றாக கழுவி சுத்தம் செய்து அதன் பிறகு சாப்பிடுங்கள். ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியும் பை, பாட்டில், ஸ்ட்ரா போன்றவற்றை முடிந்த அளவு குறைத்துக் கொள்ளுங்கள். இது பிளாஸ்டிக் மாசுபாட்டை குறைக்க உதவும். நம்பகமான மூலங்களில் இருந்து மட்டுமே கடல் உணவுகளை வாங்கி சாப்பிடவும்.

Hema

Hi, I am hema, I am working as a Sub Editor at Updatenews360.

Recent Posts

இலங்கை தமிழர்களை கொச்சைப்படுத்தும் சூர்யா? திடீரென சர்ச்சையை கிளப்பிய பிரபலம்!

சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…

13 hours ago

7 மணி நேர வேலை… 2 நாள் விடுமுறை : சாம்சங் ஊழியர்கள் மீண்டும் போராட்டம்!

சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…

14 hours ago

ஆளுநருக்கு திடீர் மாரடைப்பு… மருத்துவமனைக்கு நேரில் சென்ற முதலமைச்சர்..!!

ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…

14 hours ago

ஆ ஊனா அமெரிக்கா கிளம்பிடுறாரே இந்த மனுஷன்? கமல்ஹாசன் திடீர் பயணத்துக்கு இதுதான் காரணமா?

எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…

14 hours ago

அரசு நிகழ்ச்சிக்கு ஹெலிகாப்டரில் வந்த அமைச்சர்கள்.. அடுத்த நிமிடமே விபத்து : அதிர்ச்சி வீடியோ!

தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…

14 hours ago

பொன்முடி பேசுனது தப்புதான்.. ஆனா . பெரியாரை விட மோசம் இல்ல.. காங்., மூத்த தலைவர் வக்காளத்து!

பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…

14 hours ago

This website uses cookies.