ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளான நிலையில் சேதம் குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை.
ஜம்மு காஷ்மீரின் வடக்கு காஷ்மீரில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் பாதுகாப்பு படை வீரர்கள் பணியில் உள்ளனர்.
பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் எல்லை பாதுகாப்பு படை வீரர்களை அழைத்து வர ராணுவத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று சென்றது. இந்த ஹெலிகாப்டர் குரேஸ் செக்டார் பகுதியில் தரையிறங்கும் போது விலகிச்சென்று விபத்துக்குள்ளானது.
சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்தின் குரேஸ் செக்டரில் உள்ள பாரௌம் பகுதியில் இந்திய ராணுவத்தின் சீட்டா ஹெலிகாப்டர் தொழில்நுட்பக் கோளாறால் விழுந்து நொறுங்கியது. விபத்து நடந்த இடம் ஆசாத் ஜம்மு மற்றும் காஷ்மீரில் 5 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.
மோசமான வானிலை காரணமாக இந்த விபத்து நிகழந்ததாக முதல் கட்ட தகவல்கள் கூறுகின்றன. இந்த விபத்தால் உயிர் சேதம் எதுவும் ஏற்பட்டதா?என்பது குறித்து இதுவரை தகவல் எதுவும் வெளியாகவில்லை.
பனி சூழ்ந்த பகுதியில் ஏற்பட்ட விபத்தில் விமானத்தில் பயணித்த 2 விமானிகளில் ஒருவர் உயிரிழந்ததாகவும், மற்றொரு விமானியின் நிலைமை கவலைக் கிடமாக உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…
பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…
STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…
நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…
தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…
This website uses cookies.