பாஜக எம்பிக்கள் 10 பேர் ஒட்டுமொத்தமாக ராஜினாமா.. லோக்சபாவில் குறைந்தது பாஜகவின் பலம்!!!

பாஜக எம்பிக்கள் 10 பேர் ஒட்டுமொத்தமாக ராஜினாமா.. லோக்சபாவில் குறைந்தது பாஜகவின் பலம்!!!

கடந்த நவம்பரம் மாதம் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், தெலுங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், தெலுங்கானா ஆகிய மாநிலங்களுக்கு டிசம்பர் 3 ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகின. மிசோரம் மாநிலத்துளுக்கு டிசம்பர் 4 ஆம் தேதி தேர்தல் முடிவு வெளியானது. இதில் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களில் பாஜகவும் தெலுங்கானாவில் காங்கிரஸும், மிசோரத்தில் ZPM கட்சியும் வெற்றிபெற்றன.

இந்த தேர்தலில் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் பாஜக எம்பிக்களை வைத்து பிரச்சாரம் மட்டுமெ செய்யாமல், அவர்களையே தேர்தலில் போட்டியிட வைத்தது. மக்கள் மத்தியில் அதிக செல்வாக்கு கொண்ட எம்பிக்களை போட்டியிட வைத்து வெற்றிபெறலாம் என்பது அக்கட்சியின் வியூகம். அது ஓரளவு வெற்றியும் பெற்றது.

தேர்தலில் போட்டியிட்ட பாஜக எம்பிக்கள் 12 பேரில் 10 பேர் வெற்றிபெற்று சட்டமன்ற உறுப்பினர்களாகினர். இந்த நிலையில் அவர்கள் இன்று தங்கள் மக்களவை உறுப்பினர் பதவிகளை ராஜினாமா செய்தனர். எம்.பிக்கள் தங்கள் ராஜினாமாவை சமர்ப்பிக்க சபாநாயகரை சந்திப்பதற்காக பாஜக தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் ஒரு குழுவினரை அழைத்துச் சென்றார்.

மத்தியப் பிரதேச மாநிலத்தில் இருந்து நரேந்திரா தொமர், பிரகலாத் படேல், ரித்தி பதக், ராக்கேஷ் சிங், உதய் பிரதாப் சிங் ஆகியோர் சபாநாயகரை சந்தித்தனர். அதேபோன்று ராஜஸ்தானில் இருந்து ராஜ்யவர்தன் ரத்தோர், கிரோடி லால் மீனா மற்றும் தியா குமாரி ஆகியோரும், சத்தீஸ்கரில் இருந்து அருண் சாவ் மற்றும் கோமதி சாய் ஆகியோரும் ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்தனர்.

மத்தியப் பிரதேச மாநிலம் நர்சிங்பூர் தொகுதியில் இருந்து சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக தலைவர் பிரகலத் படேல் தனது எம்.பி பதவியை ராஜினாமா செய்த பிறகு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “பாஜக தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்த பிறகு, நான் லோக்சபா எம்.பி பதவியில் இருந்து ராஜினாமா செய்து உள்ளேன். விரைவில், அமைச்சரவையில் இருந்தும் ராஜினாமா செய்வேன்,” என்று தெரிவித்தார்.

ராஜஸ்தானை சேர்ந்த பாபா பாலக்நாத் மற்றும் ரேணுகா சிங் ஆகியோர் இன்னும் தங்களுடன் ராஜினாமாவை சமர்ப்பிக்கவில்லை. மக்களவையில் மொத்தம் 301 பாஜக எம்பிக்கள் இருந்த நிலையில் இவர்களின் ராஜினாமாவால் எண்ணிக்கை 291 ஆக குறைந்து இருக்கிறது.

பாஜக சத்தீஸ்கர், ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மூன்று மாநிலங்களிலும் பெரும்பான்மை பெற்றதை அடுத்து ஆட்சி அமைக்க தயாராக உள்ளது. ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் தெலங்கானா மாநில முதலமைச்சர்கள் ராஜினாமா கடிதங்களை தங்கள் மாநில ஆளுநர்களிடம் வழங்கி உள்ளனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

உச்சக்கட்ட சந்தோஷத்தில் அஜித்… திக்குமுக்காடிய ஆதிக் : GBU கொடுத்த சர்ப்ரைஸ்!

அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் இன்று வெளியானது. ரசிகர்களுக்கு பிடித்த மாதிரி அத்தனை அம்சங்களும் படத்தில் உள்ளதால் ரசிகர்கள்…

6 minutes ago

என்னைய தவிர எல்லாத்துக்கும் நேஷனல் அவார்டு- வெற்றிமாறனுக்கு சங்கடத்தை ஏற்படுத்திய நடிகை…

தேசிய விருதுகளை குவித்த திரைப்படம்… வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் 2011 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் “ஆடுகளம்”. மிகவும்…

1 hour ago

என் மேல நம்பிக்கை வச்சதுக்கு மிக்க நன்றி அஜித் சார்- அர்ஜுன் தாஸ் உருக்கம்

வெளியானது குட் பேட் அக்லி… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று உலகம்…

2 hours ago

‘இனி நம்மல யாருமே பிரிக்க முடியாது’.. தண்டவாளத்தில் கட்டி அணைத்தவாறு தற்கொலை செய்த காதல் தம்பதி!

வேலூர் மாவட்டம் லத்தேரி அருகே உள்ள பட்டியூர் பகுதியில் இருக்கும் சென்னை டு பெங்களூர் ரயில்வே தண்டவாளத்தின் அருகே உள்ள…

2 hours ago

ராமதாஸ் முடிவுக்கு எதிராக போர்க்கொடி.. அன்புமணிக்கு ஆதரவாக எழுந்த முதல் குரல்!

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் இன்று காலை 11 மணியளவில் பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்கள் செய்தியாளர்கள்…

2 hours ago

பூப்படைந்த பட்டியலின மாணவிக்கு தனியார் பள்ளியில் அரங்கேறிய அவலம்.. அதிர்ச்சி வீடியோ!

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தாலுகா வரதனூர் பஞ்சாயத்து செங்கோட்டை பாளையம் கிராமத்தில் இயங்கி வரும் சுவாமி சிப்பவாணந்த மெட்ரிகுலேஷன் பள்ளி…

3 hours ago

This website uses cookies.