பெங்களூரு: கர்நாடகாவில் கல்குவாரியில் பாறைகளை வெடிவைத்து தகர்த்த போது, பாறைகள் உருண்டு 6 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவிலுள்ள சாம்ராஜ் மாவட்டத்தில் கல்குவாரி பணிகள் நடைபெற்று வருகிறது. கேரளாவை சேர்ந்த ஹகீம் என்பவர் அரசின் அனுமதி பெற்று குத்தகையின் அடிப்படையில் கல்குவாரி நடத்தி வருகிறார். இந்த கல்குவாரியில் தமிழ்நாடு, கேரளா மற்றும் கேரளாவை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட தொழிலார்கள் வேலை செய்து வருகின்றனர்.
கல்குவாரியில் பாறைகள் வெடி வைத்து கற்களாக மாற்றி பொக்லைன் எந்திரங்களின் மூலம் லாரிகளில் ஏற்றி பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
இந்நிலையில் நேற்று கல்குவாரியில் வெடி வைத்து பாறைகள் தகர்க்கும் பணி நடைபெற்றது. அப்போது, ஏற்பட்ட திடீர் அதிர்வால், யாரும் எதிர்பாராத விதமாக குன்றின் மேலிருந்த பெரிய பாறை உருண்டு கீழே சரிந்தது. இதனால் கற்களை உடைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் 10 பேர் பாறையின் அடியில் சிக்கி உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இது குறித்து தகவலறிந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் ஈடுபட்டு மேலும் பாறை அடியில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதில் 6 பேர் பாறையின் அடியில் சிக்கி உயிரிழந்த நிலையில் 5 பேர் பலத்த காயங்களுடன் அரசு மருத்துவமனையில் சிகிக்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்திருக்கும் நிலையில் மேலும் பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் ஆகியோர் இரண்டாவது நாளாக இன்றும் மீட்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளியானது திரைப்படம் டிராகன். பிரதீப் ரங்கநாதன், காயடு லோகர், அனுபமா உட்பட பலர்…
தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என கூட்டணியில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…
2026ல் ஆட்சியைப் பிடிப்பது என்ற நடிகர் விஜயின் பேச்சு போல பாஜகவும் பகல் கனவு காண்கிறது என அதிமுக முன்னாள்…
சினிமாவில் திருமணமான நடிகருடன் நெருக்கமாக இருப்பது, பின்னர் காதலிப்பது கல்யாணம் வரை சென்று பிரிவது என ஏராளமான விஷயங்கள் நடப்பது…
சீமான் மீது அளித்த புகாரின் மீது இனி எந்தப் போராட்டம் நடத்தப்போவதில்லை என நடிகை விஜயலட்சுமி தான் வெளியிட்ட வீடியோ…
நடிகை மீனாட்சி செளத்ரியை மாநில பெண்கள் அதிகாரமளித்தல் பிராண்ட் அம்பாசிடராக ஆந்திர அரசு நியமித்ததாக வரும் தகவலில் உண்மையில்லை என…
This website uses cookies.