தூங்குவதாக நினைத்து இறந்த தாயின் சடலத்துடன் 4 நாட்கள் இருந்த 10 வயது மகன் : திரைப்படத்தை மிஞ்சிய உருக்கமான சம்பவம்!!

திருப்பதி : தாயின் மரணத்தைத் அறியாமல் நான்கு நாட்கள் அவருடைய உடலுடன் வீட்டிலேயே தங்கி இருந்த 10 வயது மகனின் செயல் கண்ணீரை வரவழைத்துள்ளது.

ஆந்திர மாநிலம் திருப்பதியில் தனியார் கல்லூரி ஒன்றில் விரிவுரையாளராக பணியாற்றி வரும் ராஜலட்சுமி கணவரை பிரிந்து தன்னுடைய பத்து வயது மகன் சியாம் கிஷோருடன் திருப்பதியில் உள்ள வித்யா நகர் காலனியில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த எட்டாம் தேதி கீழே விழுந்த ராஜலட்சுமி தலையில் அடிபட்டு அவர் அங்கேயே மரணமடைந்துவிட்டார் என்று கூறப்படுகிறது. ஆனால் அவருடைய 10 வயது மகன் ஷியாம் கிஷோர் தன்னுடைய தாய் தூங்குவதாக நினைத்து அவருடைய உடலுக்கு அருகிலேயே படுத்து வழக்கம்போல் தூங்கினார்.

மேலும் கடந்த 4 நாட்களாக தன்னுடைய தாய் தூங்குவதாக நினைத்து வீட்டிலிருந்த பொருட்களை மட்டுமே சாப்பிட்டு வந்தார்.

மேலும் வழக்கம்போல் பள்ளிக்கும் சென்று வந்தான். இந்நிலையில் இன்று காலை வீட்டில் இருந்து நாற்றம் அடித்த காரணத்தால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்து வீட்டார் இதுபற்றி ராஜலட்சுமியின் உறவினர்களுக்கு தகவல் அளித்தனர்.

அவர்கள் வந்து பார்த்த போது ராஜலட்சுமி இறந்து போனது தெரியவந்தது. இதுபற்றிய தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று ராஜலட்சுமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பதியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.

இந்நிலையில் பத்து வயது கிஷோர் சற்று மனநிலை பாதிக்கப்பட்ட மாணவன் என்பது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் காரணமாக திருப்பதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

உடை மாற்றும் அறையில் திடீரென நுழைந்த இயக்குனர்! அதிர்ந்துப்போன ஷாலினி பாண்டே… ஒரு அதிர்ச்சி சம்பவம்!

அர்ஜுன் ரெட்டி நடிகை “அர்ஜுன் ரெட்டி” திரைப்படத்தின் மூலம் சினிமா உலகில் அறிமுகமானவர் ஷாலினி பாண்டே. “அர்ஜுன் ரெட்டி” திரைப்படம்…

16 minutes ago

அரசு தீட்டிய திட்டம்.. கைமாறும் 400 ஏக்கர் நிலம் : போராட்டத்தில் குதித்த மாணவர்கள் கைது!

ஹைதராபாத் கச்பவுலி பகுதியில் ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள 400 ஏக்கர் நிலத்தை ஐடி பார்க்…

33 minutes ago

அண்ணாமலை இருக்கும் வரைக்கும் பாஜகவுக்கு ரிசல்ட் பூஜ்ஜியம்தான்… பிரபலம் போட்ட பதிவால் பரபரப்பு!

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்க…

16 hours ago

என் அடுத்த படத்தை நீங்களே டைரக்ட் பண்ணுங்க- பிரபல இயக்குனரிடம் தானே முன் வந்து கேட்ட அஜித்!

குட் பேட் அக்லி வருகிற 10 ஆம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி”…

16 hours ago

உயிரை காவு வாங்கிய பங்குச்சந்தை…பல லட்சம் இழப்பு : வாலிபர் விபரீத முடிவு..!!

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பகுதியைச் சேர்ந்த கார்த்தி (வயது 38) அவருடைய மனைவி வனிதா. இவர் தனியார்…

17 hours ago

கிராமத்து படத்துக்கு இசையமைக்கப்போகும் அனிருத்? ஆஹா இது ரொம்ப புதுசா இருக்கே!

ராக்ஸ்டார் அனிருத் கோலிவுட்டின் ராக்ஸ்டாராக வலம் வரும் அனிருத் Gen Z மற்றும் 2K கிட்ஸின் மனம் கவர்ந்த இசையமைப்பாளராவார்.…

17 hours ago

This website uses cookies.