திருமண விழா ஒன்றின் போது, கிணற்றின் மேல்தளம் உடைந்து விழுந்த விபத்தில் 13 பெண்கள் உள்ளே விழுந்து பலியான சம்பவம் உத்தரபிரதேசத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குஷிநகர் மாவட்டம் நிபுவா நவ்ரங்யா கிராமத்தை நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றிற்கு பிறகு, வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டிருந்தனர். விருந்தினர்களில் பெண்கள் சிலர், வீட்டிற்கு பின்னால் இருந்த கிணற்றின் மேல் ஏறி நின்று பேசிக்கொண்டிருந்தனர். மேல்பகுதி இரும்பால் அமைக்கப்பட்டிருந்ததால், அது வலிமையாக இருப்பதாக நினைத்து 20க்கும் மேற்பட்டோர் நின்று பேசிக்கொண்டிருந்தனர்.
அப்போது, யாரும் எதிர்பார்க்காத நிலையில், பாரம் தாங்காமல் கிணற்றின் மேல்தளம் திடீரென இடிந்து விழுந்தது. இதில், மேல் தளத்தில் நின்றுகொண்டிருந்த பெண்கள் அனைவரும் ஆழமான கிணற்றுக்குள் விழுந்தனர். இந்த விபத்து குறித்து தகவலறிந்து தீயணைப்புத்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர், உடனடியாக கிணற்றுக்குள் விழுந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, பெண்கள், சிறுமிகள் என 15க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். ஆனால், கிணற்றுக்குள் விழுந்ததில் படுகாயமடைந்து 13 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதையடுத்து, அவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற இடத்தில் 13 பெண்கள் கிணற்றுக்குள் விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே, கிணற்றில் விழுந்து 13 பெண்கள் உயிரிழந்த சம்பவத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
ரவீனா தாஹா 2009 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மிகவும் பிரபலமான சீரீயலான “தங்கம்” தொடரில் குழந்தை நட்சத்திரமாக…
ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் இறந்த நெல்லூர் மாவட்டம் காவலியை சேர்ந்த மதுசூதன் ராவ் சோமிசெட்டியின் உடலுக்கு துணை…
புதுமைனா கமல்ஹாசன்தான்! சினிமாத்துறையை பொறுத்தவரை கமல்ஹாசன் பல நவீன தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்துள்ளார். இது பலருக்கும் தெரிந்த செய்திதான். ஆனால்…
தெலங்கானா மாநிலம் குமுரம்பீம் ஆசிபாபாத் மாவட்டம் ஜெய்னூர் மண்டலம், அடேசரா பழங்குடியினர் கிராமத்தைச் சேர்ந்த ரம்பாபாய் - பத்ருஷாவ் தம்பதியினரின்…
அடுத்த படத்துக்கு யார் இயக்குனர்? அஜித்குமார் நடிப்பில் வெளியான “குட் பேட் அக்லி” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை…
தமிழகத்துக்கு அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சிகளிடையே கூட்டணி, தேர்தல் வியூகம் என அடுத்தடுத்து…
This website uses cookies.