மத்தியப் பிரதேசத்தில் ட்ராப் செய்வதாக அழைத்துச் சென்ற அண்ணன், தங்கையை பாலியல் வன்கொடுமை செய்தது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மோவ்: மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூர் மாவட்டத்தின், அம்பேத்கர் நகர் என அழைக்கப்படும் மோவ் நகரின் காந்த்வானி பகுதியில், கடந்த இரு நாட்களுக்கு முன்பு 17 வயது சிறுமி ஒருவர், தனது அக்கா வீட்டுக்குச் செல்வதற்காக பஸ் ஸ்டாப்பில் இறங்கி உள்ளார்.
அப்போது, சற்று 300 மீட்டர் தொலைவில், அச்சிறுமியின் அண்ணன் முறையான 25 வயது இளைஞர் ஒருவர் அங்கு நின்று உள்ளார். இந்த நேரத்தில் சிறுமியைப் பார்த்த அந்த இளைஞர், அருகில் வந்து, அங்கு வந்த காரணத்தைக் கேட்டு உள்ளார். பின்னர், அவரது அக்கா வீட்டில் இறக்கிவிடுவதாக அந்த இளைஞர் கூறியுள்ளார்.
இதனையடுத்து, அவரும் அந்த இளைஞர் உடன் பைக்கில் சென்று உள்ளார். ஆனால், அந்த இளைஞர் அங்கு செல்லாமல், எதிர் திசையில் உள்ள ஒரு கிராமத்தில் இருந்த விவசாய நிலத்திற்கு அழைத்துச் சென்று உள்ளார். அப்போது, அச்சிறுமியை இளைஞர் பாலியல் வன்கொடுமை செய்து உள்ளார்.
தொடர்ந்து, இது குறித்து வெளியில் கூறினால் உனது அக்கா மற்றும் மாமாவைக் கொன்று விடுவேன் என மிரட்டிய இளைஞர், சிறுமியை மீண்டும் பஸ் ஸ்டாப்பில் வந்து விட்டுவிட்டுச் சென்று உள்ளார். இதனையடுத்து வீட்டுக்குச் சென்ற சிறுமி, அங்கு தனக்கு நேர்ந்ததைக் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: நடிகை மீனா கைது… போதையில் போலீசிடம் கையும் களவுமாக சிக்கியதால் பரபரப்பு!
பின்னர், சிறுமி மற்றும் சிறுமியின் பெற்றோர் காந்த்வானி காவல் நிலையத்திற்கு வந்து இளைஞர் மீது பாலியல் புகார் அளித்து உள்ளனர். இது தொடர்பாக போக்சோ வழக்காக பதிவு செய்த போலீசார், இளைஞரைத் தீவிரமாக தேடி வருகின்றனர்.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.