கர்நாடகா : 300 அடி பள்ளத்தில் விழுந்த இளைஞரை இந்திய விமானப்படையின்ர் ஹெலிகாப்டர் உதவியுடன் பத்திரமாக மீட்டனர்.
கர்நாடகாக சிக்கபல்லப்பூர் மாவட்டத்தில் உள்ள நந்தி மலைக்கு வார இறுதி நாட்களை கழிக்க பெங்களூர் பிஎஸ் பல்கலைக்கழகத்தல் முதலாமாண்டு பொறியியல் படிக்கும் நீஷக் ஷர்மா என்ற மாணவர் மலையேற்றதிற்கு சென்றுள்ளார்.
மலையேற்ற பயிற்சியில் ஈடுபட்ட போது 300 அடி பள்ளத்தில் தவறி விழுந்ததாக கூறப்படுகிறது. உடனே அவர் தனது செல்போனில் இருந்து உள்ளூர் போலீசாருக்கும், டெல்லியில் உள்ள தனது பெற்றோர்களுக்கும் தகவல் கொடுத்துள்ளார்.
உள்ளூர் போலீசாரால் 30 அடி பள்ளத்திற்கு கீழ் செல்ல முடியாததால் இந்திய விமானப்படையின் உதவியை நாடியுள்ளனர். இதையடுத்து ஹெலிகாப்டரில் இருந்து கயிறு மூலம் விமானப்படை வீரர் நிஷாக் ஷர்மாவை மீட்டனர்.
5 மணி நேர போராட்டத்திற்கு பிறகு இளைஞர் மீட்கப்பட்டார். முதுகில் பலத்த காயமடைந்த நிலையில் நிஷாக் சர்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த சில நாட்களுக்கு முன் கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள மலையில் ட்ரக்கிங் சென்ற பாபு என்ற இளைஞரை இந்திய ராணுவத்தினர் மீட்டது குறிப்பிடத்தக்கது.
மனநலம் பாதிக்கப்பட்டதா? “ஓநாயும் ஆட்டுக்குட்டியும்”, “மாநகரம்” போன்ற திரைப்படங்களின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமடைந்தவர் நடிகர் ஸ்ரீ. “மாநகரம்” திரைப்படத்திற்குப் பிறகு…
விடாமுயற்சி படுதோல்விக்கு பிறகு அஜித்தின் குட் பேட் அக்லி படம் மீது ரசிகர்களுக்கு பயங்கர எதிர்ப்பார்ப்பு எழுந்தது. அதன்படியே ரசிகர்களுக்கு…
ஆந்திர மாநில துணை முதல்வரும் ஜனசேனா கட்சி தலைவருமான பவன் கல்யாணின் 7 வயது மகன் மார்க் ஷங்கர் சிங்கப்பூரில்…
வரிசையாக களமிறங்கும் சிம்பு “தக் லைஃப்” திரைப்படத்தை தொடர்ந்து சிம்பு தான் தொடர்ந்து நடிக்கவுள்ள மூன்று திரைப்படங்களின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை…
தேர்தலை சந்திக்கப்போகும் விஜய் விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில நாட்களில் முடிவடையவுள்ள நிலையில் ஜூன்…
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு HRWF பவுண்டேஷன் என்ற தனியார் அறக்கட்டளை சார்பாக "மகுடம்" விருதுகள் (2025) வழங்கும் விழா சென்னை…
This website uses cookies.