விசாகப்பட்டினம் அருகே ஒரே இடத்தில் 200 டன் கஞ்சா தீ வைத்து எரித்து போலீஸ் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
விசாகப்பட்டினம் பகுதியில் உள்ள வனப்பகுதியில் ஏராளமான அளவில் கஞ்சா தோட்டங்கள் உள்ளன. அங்கிருந்து நாடு முழுவதும் கஞ்சா கடத்தல் தொடர்ந்து நடைபெறுகிறது.
எனவே கஞ்சா பயிர் செய்வது, கடத்துவது ஆகியவற்றை தடுத்து நிறுத்த கோரி பல்வேறு மாநிலங்களும் ஆந்திர அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகின்றன.
இதனால் ஆந்திர மாநில அரசு விசாகப்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் சாலைகளில் சோதனை சாவடிகளை ஏற்படுத்தி வாகன தணிக்கை மேற்கொண்டு கஞ்சா கடத்தலை தடுத்து நிறுத்தி வருகிறது.
இந்த நிலையில் விசாகப்பட்டினம் பகுதியில் இருந்து கடத்தப்பட்டு பறிமுதல் செய்யப்பட்ட ஒரு லட்சத்து 93 ஆயிரத்து 385 கிலோ கஞ்சா மற்றும் 133 கிலோ ஹாசிஸ் ஆயில் ஆகியவற்றை போலீசார் இன்று உயர் அதிகாரிகள் முன்னிலையில் தீ வைத்து அளித்தனர்.
தீ வைத்து எரிக்கப்பட்ட கஞ்சாவின் மதிப்பு சுமார் 250 கோடி ரூபாயாகும். விசாகப்பட்டினம் பகுதியில் சுமார் 7500 ஏக்கர் பரப்பளவில் பயிர் செய்யப்பட்டிருந்த கஞ்சா தோட்டங்களை போலீசார் இதுவரை அளித்துள்ளனர்.
இன்னும் சுமார் 650 ஏக்கர் பரப்பளவில் கஞ்சா தோட்டங்கள் இருப்பதாக போலீசார் கூறுகின்றனர்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.