இரண்டு டன் கஞ்சாவுடன் இரண்டு வாகனங்களில் வந்த 7 பேர் போலீசாரை கண்டதும் தப்பியோடினர்.
ஆந்திராவின் விசாகப்பட்டினம், விஜயநகரம் ஆகிய பகுதிகளில் உள்ள வனப்பகுதிகளில் பெருமளவில் கஞ்சா சாகுபடி நடைபெறுகிறது.
சட்டவிரோதமாக நடத்தப்படும் கஞ்சா சாகுபடியை அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் நீண்ட நெடுங்காலமாக செய்து வருகின்றனர்.
அங்கிருந்து இந்தியாவின் பல்வேறு பாகங்களுக்கும் கஞ்சா கடத்தல் தொடர்ந்து நடைபெறுகிறது. இதனை ஒழித்து கட்டுவதற்கு ஆந்திர மாநில அரசு எடுத்த தீவிர முயற்சிகளுக்கு உரிய பலன் இதுவரை கிடைக்கவில்லை.
கஞ்சா பயிர் செய்வது, கடத்துவது ஆகியவற்றை ஒழித்து கட்ட போலீசார் எடுக்கும் முயற்சிகள் தோல்வி அடைவதற்கு ஊழல், லஞ்சம், அரசியல் அழுத்தம் ஆகியவை உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் விசாகப்பட்டணம், விஜயநகரம் ஆகிய பகுதியில் இருந்து நடைபெறும் கஞ்சா கடத்தலை தடுப்பதற்காக அந்த பகுதியில் உள்ள சாலைகளில் சோதனை சாவடிகளை அமைத்து போலீசார் தீவிரமாக வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.
இன்று காலை அல்லூரி சீதாராம ராஜூ மாவட்டம் சிந்தனப்பள்ளி அருகே வாகன சோதனை நடத்திய போலீசார் கஞ்சா கடத்தி வந்த இரண்டு வாகனங்களை தடுத்து சோதனை செய்தனர். அப்போது அவற்றில் சுமார் இரண்டு டன் எடையுள்ள கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
போலீசாரை பார்த்ததும் அந்த வாகனங்களில் இருந்த ஏழு பேரும் தப்பி ஓடினர். அவர்களில் ஒருவரை மட்டும் கைது செய்த போலீசார் இரண்டு வாகனங்களுடன் சுமார் 2 டன் எடையுள்ள கஞ்சாவை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு சுமார் ஒரு கோடி ரூபாய் வரைய இருக்கும் என்று கூறப்படுகிறது.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.