சத்தீஸ்கரில் நாளை 2ஆம் கட்ட தேர்தல்.. ஆட்சியை பிடிக்கப் போவது யார்? வெளியானது புதிய சர்வே முடிவுகள்!!

சத்தீஸ்கரில் நாளை 2ஆம் கட்ட தேர்தல்.. ஆட்சியை பிடிக்கப் போவது யார்? வெளியானது புதிய சர்வே முடிவுகள்!!

சத்தீஸ்கர் மாநிலத்தை பொறுத்தமட்டில் மொத்தம் 90 தொகுதிகள் உள்ளன. தற்போது இங்கு காங்கிரஸ் ஆட்சி நடக்கும் நிலையில் முதல்வராக பூபேஷ் பாகேல் உள்ளார்.

இங்கு நக்சலைட்டுகளின் அச்சுறுத்தல் இருப்பதால் 2 கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டது. முதற்கட்டமாக கடந்த 7 ம் தேதி 20 சட்டசபை தொகுதிகளுக்கு தேர்தல் நடந்து முடிந்தது. இதையடுத்து மீதமுள்ள 70 தொகுதிகளுக்கு 2வது கட்டமாக நாளை சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.

சத்தீஸ்கர் மாநிலத்தை பொறுத்தமட்டில் காங்கிரஸ்-பாஜக இடையே தான் கடும் போட்டி நிலவுகிறது. வரும் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை தக்கவைக்க காங்கிரஸ் முயற்சித்து வருகிறது. அதேநேரத்தில் மறுபுறம் மாநிலத்தில் இழந்த செல்வாக்கை மீட்டு மீண்டும் அரியணை ஏறும் வகையில் வியூகம் வகுத்து பாஜக தேர்தலை எதிர்கொண்டு வருகிறது.

இந்நிலையில் தான் சத்தீஸ்கர் மாநில சட்டசபை தேர்தல் தொடர்பாக பல்வேறு கருத்து கணிப்புகள் மேற்கொள்ளப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

லோக்போல் (LokPoll)எனும் அமைப்பு சார்பில் சத்தீஸ்கர் சட்டசபை தேர்தல் தொடர்பாக தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. 9,000 பேரிடம் இந்த கருத்து கணிப்பு நடத்தப்பட்ட நிலையில் தற்போது அதன் முடிவுகள் வெளியாகி உள்ளது.

இந்த கருத்து கணிப்பின் முடிவு என்பது காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக உள்ளது. அதாவது காங்கிரஸ் கட்சி சத்தீஸ்கரில் மீண்டும் ஆட்சியை தனி மெஜாரிட்டியுடன் தக்கவைக்கும் என தெரிவித்துள்ளது. மாறாக இந்த முறை நடக்கும் சட்டசபை தேர்தலிலும் பாஜக பின்னடைவை சந்திக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கருத்து கணிப்பின்படி சத்தீஸ்கர் மாநிலத்தில் மொத்தம் உள்ள 90 சட்டசபை தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 59 முதல் 61 தொகுதிகளில் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாறாக பாஜக 28 முதல் 30 தொகுதிகளிலம், மற்றவர்கள் பூஜ்ஜியம் முதல் ஒரு தொகுதி வரையும் பெலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கருத்து கணிப்பின் முடிவால் காங்கிரஸ் கட்சியினர் உற்சாகமடைந்துள்ள நிலையில் பாஜகவினர் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

ஊரு விட்டு ஊரு வந்து பெண்ணை தீக்கிரையாக்கிய கொடூரம்.. தூத்துக்குடியில் பரபரப்பு!

தூத்துக்குடி அருகே காதலை கைவிட்டுச் சென்ற இளம்பெண்ணை தீக்கிரையாக்கி கொன்ற இளைஞர் உள்பட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி:…

17 minutes ago

தோனியை நீக்குங்க..படு மோசம் CSK ரசிகர்கள்..இப்படியெல்லாமா பண்ணுவாங்க.!

தோனி களமிறங்குவாரா? ரசிகர்கள் எதிர்பார்ப்பு.! ஐபிஎல் 2025 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள்…

28 minutes ago

இதெல்லாம் அரசியல்ல சாதாரணமப்பா.. விஜய்க்கு இபிஎஸ் அதிரடி பதில்!

தங்கள் கட்சியை வளர்ப்பதற்காகவும், தொண்டர்களை உற்சாகப்படுத்துவதற்காகவும் விஜய் அவ்வாறு கூறியுள்ளதாக இபிஎஸ் தெரிவித்துள்ளார். சேலம்: சேலத்தில் இன்று அதிமுக சார்பாக…

1 hour ago

அய்யோ நான் ஸ்ருதி இல்லை..ஆபாச வீடியோவால் பாலிவுட் நடிகைக்கு சிக்கல்.!

பாலிவுட் நடிகை ஷாக் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் "சிறகடிக்க ஆசை" தொடரில் வித்யா எனும் கதாபாத்திரத்தின் தோழியாக நடித்து…

1 hour ago

ஹெட்போன் போட்டு இயற்கை உபாதை கழிக்கச் சென்ற இளைஞர்.. ரயில் மோதி பரிதாப மரணம்!

விழுப்புரம் அருகே, ஹெட்போன் போட்டுக் கொண்டு தண்டவாளம் அருகே அமர்ந்திருந்த இளைஞர் ரயில் மோதி உயிரிழந்துள்ளார். விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம்,…

2 hours ago

19 மாணவர்களின் உயிருக்கு பதில் என்ன? படியும் ரத்தக்கறை.. ஸ்டாலினுக்கு இபிஎஸ் சரமாரி கேள்வி!

நீட் தேர்வு அச்சத்தால் மாணவி தர்ஷினியின் மரணத்திற்கு ஸ்டாலின் மாடல் திமுக அரசே முழு பொறுப்பு என எடப்பாடி பழனிசாமி…

3 hours ago

This website uses cookies.