திருப்பதியில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மூன்று மாணவிகள் மற்றும் இரண்டு மாணவர்கள் என 5 பேர் மாயமாகியுள்ள நிலையில் போலீஸ் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பதியில் உள்ள அன்னமய்யா தனியார் கான்வென்ட் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வரும் குணஸ்ரீ, மெகதாஜ், மௌன ஸ்ரீ ஆகிய மாணவிகளும், அதே வகுப்பில் படிக்கும் அப்துல் ரகுமான் மற்றும் அதே பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் உசேன் ஆகிய மாணவர்களை இன்று காலை முதல் காணவில்லை.
பள்ளியில் தற்போது மாதாந்திர பரீட்சைகள் நடைபெற்று வருகின்றன. இன்று காலை 6 மணிக்கு துவங்கி பள்ளியில் பரீட்சை நடைபெற்றது.
எட்டு மணி அளவில் பரீட்சையை எழுதி முடித்து விட்டோம். சென்று சாப்பிட்டு வருகிறோம் என்று கூறி ஐந்து பேரும் புறப்பட்டு சென்றனர்.
ஆனால் அதன் பின்னர் அவர்கள் பள்ளிக்கு திரும்பவில்லை. இது பற்றி பள்ளி நிர்வாகம் மாணவ, மாணவிகளின் பெற்றோர்களுக்கு போன் செய்து கேட்டபோது அவர்கள் வீட்டுக்கு வரவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது.
இந்த சம்பவம் பற்றி பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வழக்கப்பதிவு செய்துள்ள திருப்பதி போலீசார் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகி இருக்கும் காட்சிகளை கைப்பற்றி மாயமான மாணவ, மாணவிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.
படத்தை கைவிட லைக்கா நிறுவனம் முடிவு நடிகர் விஜய் தற்போது சினிமாவில் இருந்து விலகி தன்னுடைய முழு கவனத்தையும் அரசியல்…
'திருப்பாச்சி' பட டைட்டிலின் சுவாரசியம் தமிழ் சினிமாவில் தற்போது படங்கள் கூட எடுத்திருலாம் போல,ஆனால் பட டைட்டில் வைப்பதில் மிகவும்…
ரஜினி பட டைட்டிலை யோசித்த படக்குழு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக தற்போது ஜொலித்து கொண்டிருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன்,சமீபத்தில் இவருடைய…
மும்மொழிக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு முழுவதும் அரசியல் கட்சிகள் கடும் விமர்சனத்தை முன் வைத்து வருகின்றனர். உதயநிதி மற்றும்…
இயக்குநர் அட்லீ தமிழில் இயக்கிய படங்கள் அத்தனையும் ஹிட் அடித்தது. இதையடுத்து இடையில் எந்த படங்கைளையும் இயக்காத அவர் பாலிவுட்…
சினிமாவுக்காக உயிரை கொடுப்பவர் மிஸ்கின் தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனர்களில் ஒருவரான மிஷ்கின்,படம் இயக்குவதை தாண்டி தற்போது பல படங்களில்…
This website uses cookies.