திருப்பதியில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மூன்று மாணவிகள் மற்றும் இரண்டு மாணவர்கள் என 5 பேர் மாயமாகியுள்ள நிலையில் போலீஸ் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பதியில் உள்ள அன்னமய்யா தனியார் கான்வென்ட் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வரும் குணஸ்ரீ, மெகதாஜ், மௌன ஸ்ரீ ஆகிய மாணவிகளும், அதே வகுப்பில் படிக்கும் அப்துல் ரகுமான் மற்றும் அதே பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் உசேன் ஆகிய மாணவர்களை இன்று காலை முதல் காணவில்லை.
பள்ளியில் தற்போது மாதாந்திர பரீட்சைகள் நடைபெற்று வருகின்றன. இன்று காலை 6 மணிக்கு துவங்கி பள்ளியில் பரீட்சை நடைபெற்றது.
எட்டு மணி அளவில் பரீட்சையை எழுதி முடித்து விட்டோம். சென்று சாப்பிட்டு வருகிறோம் என்று கூறி ஐந்து பேரும் புறப்பட்டு சென்றனர்.
ஆனால் அதன் பின்னர் அவர்கள் பள்ளிக்கு திரும்பவில்லை. இது பற்றி பள்ளி நிர்வாகம் மாணவ, மாணவிகளின் பெற்றோர்களுக்கு போன் செய்து கேட்டபோது அவர்கள் வீட்டுக்கு வரவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது.
இந்த சம்பவம் பற்றி பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வழக்கப்பதிவு செய்துள்ள திருப்பதி போலீசார் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகி இருக்கும் காட்சிகளை கைப்பற்றி மாயமான மாணவ, மாணவிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.