3 மாநில தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நடந்து வரும் நிலையில், திரிபுரா, நாகலாந்தில் பாஜக கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் திரிபுராவில் கடந்த பிப்ரவரி 16ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. அதேபோல, பிப்ரவரி 27ம் தேதி மேகாலயா மற்றும் நாகாலாந்தில் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.
3 மாநிலங்களில் நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
திரிபுரா மாநிலத்தில் ஆளும் பாஜக கூட்டணி 30 இடங்களுக்கும் மேல் முன்னிலை பெற்றுள்ளது. பாஜக – திரிபுரா பூர்வகுடி மக்கள் முன்னணி கூட்டணி 39 இடங்களுக்கு மேல் முன்னிலை பெற்றுள்ளது. நாகலாந்து மாநிலத்தில் பாஜக கூட்டணி 49க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. மேகாலயாவில் ஆளும் தேசிய மக்கள் கட்சி 22க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் 9 இடங்களிலும், பாஜக மற்றும் காங்கிரஸ் தலா 7 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது.
மேகாலயாவில் முதலமைச்சர் கான்ராட் சங்மா தலைமையில் என்.பி.பி. என்னும் தேசிய மக்கள் கட்சி ஆட்சி நடக்கிறது. அங்கு எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காமல் தொங்கு சட்டசபை ஏற்படும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
கணவனுக்கு நடந்த விசித்திரமான, அதிர்ச்சியான சம்பவம் உத்தரபிரதேசத்தில் நடந்துள்ளது. சந்தீப் என்பவர் ரஞ்சனா என்பவரை திருமணம் செய்துள்ளார். திருமணத்திற்கு பிறகு…
அர்ஜுன் ரெட்டி நடிகை “அர்ஜுன் ரெட்டி” திரைப்படத்தின் மூலம் சினிமா உலகில் அறிமுகமானவர் ஷாலினி பாண்டே. “அர்ஜுன் ரெட்டி” திரைப்படம்…
ஹைதராபாத் கச்பவுலி பகுதியில் ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள 400 ஏக்கர் நிலத்தை ஐடி பார்க்…
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்க…
குட் பேட் அக்லி வருகிற 10 ஆம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி”…
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பகுதியைச் சேர்ந்த கார்த்தி (வயது 38) அவருடைய மனைவி வனிதா. இவர் தனியார்…
This website uses cookies.