அமெரிக்காவில் ஒரே வருடத்தில் 381 துப்பாக்கி சூடு சம்பவங்கள்…. வாஷிங்டனில் நடந்த சம்பவத்தில் பலர் உயிரிழந்துள்ளதாக தகவல்!!

அமெரிக்காவில் வடகிழக்கு வாஷிங்டனில் கேபிட்டல் ஹில் பகுதியில் இருந்து சற்று தொலைவில் நேற்றிரவு 8.30 மணியளவில் திடீரென துப்பாக்கி சூடு நடந்துள்ளது. இதனை, தீயணைப்பு துறையின் செய்தி தொடர்பாளர் விட்டோ மேகியோலோ தெரிவித்து உள்ளார்.

இதுபற்றி தி வாஷிங்டன் போஸ்ட் வெளியிட்டுள்ள செய்தியில், மெட்ரோபொலிடன் நகர காவல் துறை வெளியிட்டுள்ள செய்தியில், துப்பாக்கி சூட்டில் பலர் பலியாகி இருக்க கூடும் என தெரிவித்து உள்ளது. எனினும், சரியான எண்ணிக்கை அடங்கிய விவரங்களை வெளியிடவில்லை.

பாதிக்கப்பட்டவர்கள் யாரும் அடையாளம் காணப்படவில்லை. சந்தேகத்திற்குரிய தகவல் எதுவும் வரவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அமெரிக்கா அறிவிப்பு நடப்பு ஆண்டில், அமெரிக்காவில் பெரிய அளவில் 381 துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடந்துள்ளன.

இது நாளொன்றுக்கு சராசரியாக 1.7க்கும் கூடுதலான பெரிய அளவிலான துப்பாக்கி சூடு எண்ணிக்கையாகும். அந்நாட்டில் அதிகரித்து வரும் துப்பாக்கி வன்முறைக்கு வேதனை தெரிவித்த அதிபர் பைடன், குழந்தைகள், குடும்பத்தினரை பாதுகாக்க தாக்குதல் நடத்த கூடிய ஆயுதங்களை தடை செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டு உள்ளது என கூறினார்.

இதனை தொடர்ந்து கடந்த ஜூன் 22ந்தேதி துப்பாக்கி பாதுகாப்பு மசோதா கொண்டு வருவதற்கான முடிவை அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தது. அமெரிக்காவில் நேற்றும் இதுபோன்றதொரு வன்முறை சம்பவம் நடந்தது. அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் ஆர்லேண்டோ நகரில் மக்கள் கூட்டத்தில் திடீரென ஒருவருக்கொருவர் மோதல் ஏற்பட்டு வன்முறை பரவியது.

இதில், அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் மறைத்து வைத்திருந்த கைத்துப்பாக்கி ஒன்றை எடுத்து கூட்டத்தினரை நோக்கி சுட்டார். இந்த துப்பாக்கி சூட்டில் 7 பேர் காயமடைந்தனர். சமீபத்தில் டெக்சாஸில் ஹால்தம் நகரில் நடந்த துப்பாக்கி சூட்டில் 2 பேர் கொல்லப்பட்டனர். 3 அதிகாரிகள் உள்பட 4 பேர் காயமடைந்தனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

இரண்டரை வயது குழந்தைனு கூட பார்ககல… அங்கன்வாடி ஊழியர் மீது பரபரப்பு புகார்!

திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் கன்னிவாடி அருகே உள்ள சுரைக்காய்பட்ட கிழக்கு தெருவை சேர்ந்தவர் ராஜபாண்டி கூலித்தொழிலாளி. இவரது மனைவி…

42 minutes ago

சிறுமிகளிடம் சீண்டலில் ஈடுபட்ட மதபோதகரின் உறவினரும் கைது.. அடுத்தடுத்து சிக்கும் தடயம்!

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கிறிஸ்தவ மத போதகர் ஜான் ஜெபராஜ் உறவினரும் போக்சோ வில் கைது செய்யப்பட்டு…

50 minutes ago

இவ்வளவு வயசு வித்தியாசமா? விஜய் டிவி பிரியங்காவின் இரண்டாவது கணவர் இப்படிபட்டவரா?

டாப் தொகுப்பாளினி விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர், ஸ்டார்ட் மியூசிக் போன்ற பல ரியாலிட்டி ஷோக்களில் தொகுப்பாளினியாக வலம் வருபவர்…

51 minutes ago

விளக்கு பிடிச்சாங்களா? விஜய்யை விமர்சித்த சத்யராஜ் மகளுக்கு பிரபலம் பதிலடி!

சமீபத்தில் திமுகவில் சேர்ந்து புதிய பதவிக்கு தேர்வான சத்யராஜ் மகள் திவ்யா சத்யராஜ், ஒரு நிகழ்ச்சியில் தவெக தலைவர் விஜய்யை…

2 hours ago

பெண்களை நிர்வாணப்படுத்தி ஆபாச வீடியோ எடுத்து விற்பனை.. கொட்டிய பணம் : சிக்கிய கும்பல்!

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் பழைய நகரத்தை சேர்ந்த கணேஷ், ஜோஸ்னாவும் வேலைக்காக பெங்களூரு சென்றனர். இவர்களுக்கு அனந்தபூர் மாவட்டம் குந்தகல்லை…

3 hours ago

வயசு மட்டும் இடிக்குது… விக்ரமின் மருமகளாகிறார் அந்த நடிகை.?!!

நடிகர் விக்ரம் கடின உழைப்புக்கு பெயர் போனவர். பல ஆண்டுகளாக சினிமாவில் நடித்து வந்த விக்ரம், தனக்கான வாய்ப்பை தேடி…

3 hours ago

This website uses cookies.