உத்தரபிரதேச மாநிலத்தில் 3 ஆம் கட்டமாக 59 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது.
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் 7 கட்டமாக நடைபெறும் நிலையில் முதற்கட்டமாக 58 தொகுதிகளுக்கும் 2 வது கட்டமாக 55 தொகுதிகளுக்கும் ஏற்கனவே வாக்குப்பதிவு நடைபெற்றது.
இந்நிலையில், உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் 3 ஆம் கட்டமாக 16 மாவட்டங்களில் உள்ள 59 தொகுதிகளில் வாக்குப்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.இதற்காக,25,741 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அதன்படி,3 ஆம் கட்ட தேர்தலில் 627 வேட்பாளர்கள் போட்டியிடும் நிலையில்,2.15 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.
இதற்கிடையில்,3 ஆம் கட்ட தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் 245 வேட்பாளர்களுக்கு ரூ.1 கோடிக்கு மேல் சொத்துக்கள் உள்ளதாக கூறப்படுகிறது. கோடீஸ்வரர்கள் பட்டியலில் அதிடபட்சமாக சமாஜ்வாதி சார்பில் 52,பாஜக சார்பில் 48 பெரும் இடம் பெற்றுள்ளனர்.மேலும்,பகுஜன் சமாஜ் சார்பில் 46 பேரும்,காங்கிரஸ் சார்பில் 29 பேரும்,ஆம் ஆத்மி சார்பில் 18 பேரும் இடம் பெற்றுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து,பஞ்சாப் சட்டசபை தேர்தலுக்கான ஒரே கட்ட வாக்குப்பதிவு இன்ற காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
நடிகை மீனாட்சி செளத்ரியை மாநில பெண்கள் அதிகாரமளித்தல் பிராண்ட் அம்பாசிடராக ஆந்திர அரசு நியமித்ததாக வரும் தகவலில் உண்மையில்லை என…
கொரோனா பேரிடரின்போது உயிரிழந்த மருத்துவரின் மனைவிக்கு வேலை மற்றும் நிவாரணம் வழங்க வேண்டும் என அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக்…
விஜய் அரசியல் கட்சி துவங்கியதும் பலரும் பலவிதமாக விமர்சித்து வரும் நிலையில், இயக்குநர் பேரரசு கூறியுள்ளது யோசிக்க வைத்ததுள்ளது. இயக்குநர்…
விடாமுயற்சி தோல்விக்க பிறகு அஜித் நடித்துள்ள குட் பேட் அக்லி. திரிஷா, அர்ஜூன் தாஸ் பிரசன்னா உட்பட பலர் நடிக்கும்…
திமுகவுக்கு குழந்தைகளின் நலனை விட அரசியலே முக்கியமானது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். சென்னை: இது தொடர்பாக…
This website uses cookies.