பாஜக வேட்பாளர் வீட்டில் கட்டு கட்டாக பணம்.. ₹4.8 கோடி பறிமுதல் ; மறுபடியும் முதல்ல இருந்தா?
கர்நாடகா மாநிலம் சிக்கபள்ளாபுரா தொகுதி பா.ஜ.க வேட்பாளரும் எம்.பி.,யுமான கே.சுதாகருக்கு சொந்தமான இடத்தில் இருந்து ரூ.4.8 கோடி பறிமுதல் செய்யப்பட்டது.
அவர் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
கர்நாடகாவில் 14 தொகுதிகளில் இன்று (ஏப்.,26) லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது.
இதற்கான ஓட்டுப்பதிவு காலை 7 மணிக்கு துவங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. வாக்காளர்களும் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.
வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். பல இடங்களில் பணம் பதுக்கி வைத்திருக்கும் தகவல் தெரிந்தால், அங்கு அதிரடி சோதனையும் செய்து வருகின்றனர்.
மேலும் படிக்க: பெண் விஏஓவை தாக்கிய திமுக கவுன்சிலர்.. நள்ளிரவில் நடந்த ஷாக் : போலீசார் அதிரடி ACTION!
அந்த வகையில், அங்குள்ள சிக்கபள்ளாபுரா தொகுதியில் தேர்தல் பறக்கும் படையினருக்கு கிடைத்த தகவலின்படி, நேற்று (ஏப்.,25) அத்தொகுதி பா.ஜ.க வேட்பாளரான கே.சுதாகருக்கு சொந்தமான இடத்தில் சோதனை நடத்தினர்.
அதில், பதுக்கி வைத்திருந்த ரூ.4.8 கோடி பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக மதநாயக்கனஹள்ளி போலீஸ் ஸ்டேஷனில் கே.சுதாகருக்கு எதிராக 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
கனிமா… கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…
கார் ரேஸில் ஈடுபாடு நடிகர் அஜித்குமார் தற்போது பல்வேறு நாடுகளில் கார் பந்தயங்களில் ஈடுபட்டு வருகிறார். இரண்டு மாதங்களுக்கு முன்பு…
கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் புதியதாக கட்டப்பட்ட காத்திருப்போர் அறையினை கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி…
நடிகை திரிஷா தென்னிந்திய சினிமாவை ஆட்டிப்படைத்து வருகிறார். 20 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். பொன்னியின் செல்வன்…
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த பொங்கலூர் பகுதியில் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன…
ஹோட்டலில் இருந்து தப்பியோட்டம் மலையாளத்தில் மிக முக்கியமான நடிகராக வலம் வருபவர் ஷைன் டாம் சாக்கோ. இவர் சமீபத்தில் அஜித்குமாரின்…
This website uses cookies.