தெலுங்கானா : பிரபல e-commerce நிறுவனத்தில் ரூ 6000 மதிப்புள்ள செல்போன் ஆர்டர் செய்தவருக்கு ரூ 5 மதிப்புள்ள ரின் சோப் கிடைத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம் அடிலாபாத் மாவட்டம் வுட்நூர் பகுதியை சேர்ந்த தீமண்ணா என்பவர் பிரபல இ-காமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட்டில் செல்போன் வாங்க முடிவு செய்து ரூ 6100 பணம் செலுத்தி அந்த நிறுவனத்தின் வெப்சைட் மூலம் செல்போன் ஆர்டர் செய்தார்.
நேற்று அவருக்கு பிளிப்கார்ட் நிறுவனத்திலிருந்து செல்போன் வந்திருப்பதாக கூறி ஒரு பார்சல் டெலிவரி செய்யப்பட்டது. அதனை திறந்து பார்த்தபோது அதற்குள் செல்போனுக்கு பதிலாக
ரூ.5 மதிப்புள்ள ரின் சோப் இருப்பதை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார்.
இந்த நிலையில் பிளிப்கார்ட் நிறுவனம் மீது சட்டப்படியான நடவடிக்கைகளை எடுக்க தான் முடிவு செய்திருப்பதாக அவர் தெரிவித்தார். சமீப காலங்களில் இதுபோன்ற குளறுபடிகள் இ-காமர்ஸ் நிறுவனங்கள் மூலம் ஏராளமான அளவில் நடத்தப்பட்டுள்ளன.
எனவே அவற்றை கருத்தில் கொண்டு தனக்கு வந்த பார்சலை பிரிக்கும் போது அதனை வீடியோ எடுத்தவாறு தீமன்னா பிரித்தார். எனவே அதன் மூலம் அவருக்கு செல்போனுக்கு பதிலாக சோப் வந்திருப்பதை நிறுவனத்திடம் உறுதிப்படுத்த அவர் முடிவு செய்துள்ளார்.
அரையிறுதியில் வருண் ஆடுவாரா சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தற்போது இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில் நாளை துபாயில் ஆஸ்திரேலியாவை…
சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் புகார் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கேரளா சினிமா உலகில் ஹேமா கமிட்டி கொடுத்த அறிக்கை…
தன்னைப் போன்று வெளியாகியுள்ள டீப்ஃபேக் வீடியோவை ரசிகர்கள் யாரும் பகிர வேண்டாம் என பாலிவுட் நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார்.…
AI மூலம் ஏமாந்த மாதவன் எச்சரித்த அனுஷ்கா சர்மா சமூக வலைதளங்களில் தற்போது AI உருவாக்கிய வீடியோக்கள் பெருகி வரும்…
மத்திய, மாநில அரசுகளின் கடன் விவரங்களைக் குறிப்பிட்டு, நிதியமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் அண்ணாமலை கருத்து மோதலில் ஈடுபட்டுள்ளனர். சென்னை:…
கோவையில் மனைவியை சுட்டுக் கொன்றுவிட்டு, கேரளாவுக்குச் சென்று கணவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர்: கோவை…
This website uses cookies.