தெலுங்கானா : பிரபல e-commerce நிறுவனத்தில் ரூ 6000 மதிப்புள்ள செல்போன் ஆர்டர் செய்தவருக்கு ரூ 5 மதிப்புள்ள ரின் சோப் கிடைத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம் அடிலாபாத் மாவட்டம் வுட்நூர் பகுதியை சேர்ந்த தீமண்ணா என்பவர் பிரபல இ-காமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட்டில் செல்போன் வாங்க முடிவு செய்து ரூ 6100 பணம் செலுத்தி அந்த நிறுவனத்தின் வெப்சைட் மூலம் செல்போன் ஆர்டர் செய்தார்.
நேற்று அவருக்கு பிளிப்கார்ட் நிறுவனத்திலிருந்து செல்போன் வந்திருப்பதாக கூறி ஒரு பார்சல் டெலிவரி செய்யப்பட்டது. அதனை திறந்து பார்த்தபோது அதற்குள் செல்போனுக்கு பதிலாக
ரூ.5 மதிப்புள்ள ரின் சோப் இருப்பதை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார்.
இந்த நிலையில் பிளிப்கார்ட் நிறுவனம் மீது சட்டப்படியான நடவடிக்கைகளை எடுக்க தான் முடிவு செய்திருப்பதாக அவர் தெரிவித்தார். சமீப காலங்களில் இதுபோன்ற குளறுபடிகள் இ-காமர்ஸ் நிறுவனங்கள் மூலம் ஏராளமான அளவில் நடத்தப்பட்டுள்ளன.
எனவே அவற்றை கருத்தில் கொண்டு தனக்கு வந்த பார்சலை பிரிக்கும் போது அதனை வீடியோ எடுத்தவாறு தீமன்னா பிரித்தார். எனவே அதன் மூலம் அவருக்கு செல்போனுக்கு பதிலாக சோப் வந்திருப்பதை நிறுவனத்திடம் உறுதிப்படுத்த அவர் முடிவு செய்துள்ளார்.
மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…
மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…
அவ்வப்போது பிரபலங்கள் ஏதாவது ஒரு கருத்தை செல்லி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். அந்த வரிசையில் தற்போது சின்னத்திரை நடிகை சிக்கியுள்ளார்.…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிமுக மாநிலங்களவை எம்பி மு.தம்பிதுரை அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து…
பராசக்தி ஹீரோ சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் “பராசக்தி” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின்…
This website uses cookies.