ஆந்திரா : திருப்பதி மலையில் திருநாமம் போட்டு பிழைத்து வரும் தம்பதியினரிடம் 5 வயது மகனை பெண் ஒருவர் கடத்தி சென்ற காட்சிகள் பதிவாகியுள்ளது.
ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே உள்ள தாமிநேடு பகுதியை சேர்ந்த வெங்கடரமணா மற்றும் அவருடைய மனைவி ஆகியோர் திருமலையில் பக்தர்களுக்கு திருநாமம் போட்டு பிழைப்பு நடத்தி வருகின்றனர்.
நேற்று மாலை 6 மணி அளவில் வெங்கட்ரமணா அவருடைய மனைவி மற்றும் அவகளுடைய ஐந்து வயது மகன் கோவர்தன் ஆகியோர் இருந்த இடத்திற்கு வந்த பெண் ஒருவர் அவர்களுடைய மகனை அங்கிருந்து கடத்தி சென்றுவிட்டார்.
நீண்ட நேரம் தேடியும் மகன் கிடைக்காத நிலையில் இது பற்றி வெங்கட்ரமணா திருமலை போலீசில் புகார் அளித்தார். திருப்பதி மலையில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி கேமராக்களில் பதிவாகி இருக்கும் காட்சிகளை ஆய்வு செய்தபோது பெண் ஒருவர் சிறுவன் கோவர்த்தனை கடத்தி பேருந்து மூலம் திருப்பதிக்கு அழைத்து சென்றது உறுதி செய்யப்பட்டது.
இந்த கடத்தல் சம்பவம் பற்றி வழக்குப்பதிவு செய்த திருமலை போலீசார் சிறுவனை கடத்திய பெண் மற்றும் சிறுவன் கோவர்தன் ஆகிய 2 பேரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.
சிறுவனை கடத்திய பெண் பற்றிய தகவல் கிடைத்தால் திருமலை காவல் நிலைய ஆய்வாளர்களுக்கு, 9440796769 9440796772 ஆகிய எண்களில் தகவல் அளிக்க பொதுமக்களை போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.
நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…
போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…
இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…
நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…
தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
This website uses cookies.