Categories: இந்தியா

செம்மர கடத்தலின் போது போலீசார் மீது கோடாரிகளை வீசி தாக்கிய கும்பல் : தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 58 பேர் கைது!!

திருப்பதி : நெல்லூர் அருகே செம்மரம் வெட்டி கடத்த முயன்ற தமிழகத்தைச் சேர்ந்த 55 பேர் உட்பட 58 பேரை போலீசார் கைது செய்தனர். நாற்பத்தி ஐந்து செம்மரக்கட்டைகள், இருபத்தி நான்கு கோடாரிகள், 31 செல்போன்கள் 75 ஆயிரத்து 230 ரூபாய் பணம், கடத்தலுக்கு பயன்படுத்திய லாரி,கார் பறிமுதல்.

ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள ராப்பூர் வனப்பகுதியில் செம்மரம் வெட்டி கடத்துவது பற்றி கிடைத்த தகவலை அடுத்து ராப்பூர் போலீசார் அந்த பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது செம்மரங்களை வெட்டி லாரி ஒன்றில் ஏற்றிக்கொண்டு கும்பல் ஒன்று சென்று கொண்டிருப்பது பார்த்த போலீசார் அவர்களை சுற்றி வளைத்து பிடிக்க முயன்றனர்.

அப்போது லாரியில் இருந்த செம்மரம் வெட்டும் கூலி தொழிலாளர்கள் போலீசார் மீது தாக்குதல் நடத்தி தப்ப முயன்றனர். இதனால் காவலர் ஒருவருக்கு காயம் ஏற்பட்ட நிலையில் சாதுரியமாக அனைவரையும் சுற்றி வளைத்த போலீசார் பிடித்தனர்.

லாரியில் 45 செம்மரக்கட்டைகளும் 50க்கும் மேற்பட்டோரும் இருப்பது தெரியவந்தது.
மேலும் அவர்களுக்கு பாதுகாப்பாக கார் ஒன்றில் வந்த நபர்களையும் போலீசார் மடக்கி மொத்தம் தமிழகத்தை சேர்ந்த 55 பேர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடமிருந்து ரூ.30 லட்சம் மதிப்பிலான 45 செம்மரக்கட்டைகள், மரம் வெட்ட பயன்படுத்தும் 24 கோடாரிகள், 31 செல்போன்கள், கடத்தலுக்கு பயன்படுத்திய லாரி, சொகுசு கார் மற்றும் 75,230 ரூபாய் பணம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த தொழிலாளர்கள் உட்பட 58 பேரிடம் செம்மர கடத்தலில் தொடர்புடைய நபர்கள் பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

அடுத்தவ புருஷனை பங்கு போட்டது தப்புதான்.. ஆனா பாலு மகேந்திரா எனக்கு எல்லாமே கொடுத்தாரு ; நடிகை ஓபன்!

நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…

42 minutes ago

ஜெயிலரை ஓவர் டேக் செய்யப்போகும் குட்  பேட் அக்லி! விரைவில் ஒரு தரமான சம்பவம்?

தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…

1 hour ago

செந்தில் பாலாஜி SAFE… அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததால் உச்சநீதிமன்றம் உத்தரவு!

செந்தில் பாலாஜியின் ஜாமீனை ரத்து செய்ய கோரிய வழக்கை முடித்து வைத்தது உச்சநீதிமன்றம். செந்தில் பாலாஜி ஜாமீனில் வெளி வந்ததும்…

1 hour ago

ஒரே ஒரு கேள்வி இப்படி பேச வைச்சிடுச்சே! ஸ்ருதிஹாசனுக்கு இப்படி ஒரு நிலைமையா வரணும்?

ஸ்ருதிஹாசனின் பிரேக்கப்  கமல்ஹாசனின் மகளான ஸ்ருதிஹாசன் சில ஆண்டுகளாகவே மைக்கேல் கோர்சேல் என்ற இத்தாலியரை காதலித்து வந்தார்.  இருவரும் லிவ்…

2 hours ago

பாஜக முக்கியப் புள்ளி படுகொலை… நள்ளிரவில் பின்தொடர்ந்த கும்பல் வெறிச்செயல்!

புதுச்சேரி கருவடிக்குப்பம் கிராமத்தை சேர்ந்த 40 வயதான உமாசங்கர் புதுச்சேரி மாலிந இளைஞரணித் துணைத் தலைவராக உள்ளார். கடநத் ஒரு…

3 hours ago

நயன்தாரா இப்படிலாம் செய்வாங்கனு எதிர்பார்க்கல- உண்மையை போட்டுடைத்த சுந்தர் சி!

மூக்குத்தி அம்மன் 2 “கேங்கர்ஸ்” திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது சுந்தர் சி “மூக்குத்தி அம்மன் 2” திரைப்படத்தை இயக்கி…

3 hours ago

This website uses cookies.