Categories: இந்தியா

செம்மர கடத்தலின் போது போலீசார் மீது கோடாரிகளை வீசி தாக்கிய கும்பல் : தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 58 பேர் கைது!!

திருப்பதி : நெல்லூர் அருகே செம்மரம் வெட்டி கடத்த முயன்ற தமிழகத்தைச் சேர்ந்த 55 பேர் உட்பட 58 பேரை போலீசார் கைது செய்தனர். நாற்பத்தி ஐந்து செம்மரக்கட்டைகள், இருபத்தி நான்கு கோடாரிகள், 31 செல்போன்கள் 75 ஆயிரத்து 230 ரூபாய் பணம், கடத்தலுக்கு பயன்படுத்திய லாரி,கார் பறிமுதல்.

ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள ராப்பூர் வனப்பகுதியில் செம்மரம் வெட்டி கடத்துவது பற்றி கிடைத்த தகவலை அடுத்து ராப்பூர் போலீசார் அந்த பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது செம்மரங்களை வெட்டி லாரி ஒன்றில் ஏற்றிக்கொண்டு கும்பல் ஒன்று சென்று கொண்டிருப்பது பார்த்த போலீசார் அவர்களை சுற்றி வளைத்து பிடிக்க முயன்றனர்.

அப்போது லாரியில் இருந்த செம்மரம் வெட்டும் கூலி தொழிலாளர்கள் போலீசார் மீது தாக்குதல் நடத்தி தப்ப முயன்றனர். இதனால் காவலர் ஒருவருக்கு காயம் ஏற்பட்ட நிலையில் சாதுரியமாக அனைவரையும் சுற்றி வளைத்த போலீசார் பிடித்தனர்.

லாரியில் 45 செம்மரக்கட்டைகளும் 50க்கும் மேற்பட்டோரும் இருப்பது தெரியவந்தது.
மேலும் அவர்களுக்கு பாதுகாப்பாக கார் ஒன்றில் வந்த நபர்களையும் போலீசார் மடக்கி மொத்தம் தமிழகத்தை சேர்ந்த 55 பேர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடமிருந்து ரூ.30 லட்சம் மதிப்பிலான 45 செம்மரக்கட்டைகள், மரம் வெட்ட பயன்படுத்தும் 24 கோடாரிகள், 31 செல்போன்கள், கடத்தலுக்கு பயன்படுத்திய லாரி, சொகுசு கார் மற்றும் 75,230 ரூபாய் பணம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த தொழிலாளர்கள் உட்பட 58 பேரிடம் செம்மர கடத்தலில் தொடர்புடைய நபர்கள் பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

வக்பு மசோதாவுக்கு கனிமொழி, திருச்சி சிவா மறைமுக ஆதரவு? தம்பிதுரை எம்பி பரபரப்பு குற்றச்சாட்டு!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிமுக மாநிலங்களவை எம்பி மு.தம்பிதுரை அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து…

48 minutes ago

பழைய மதுரையை உண்மையில் உருவாக்கி வரும் சிவகார்த்திகேயன் படக்குழு? அடேங்கப்பா!

பராசக்தி ஹீரோ சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் “பராசக்தி” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின்…

1 hour ago

குட் பேட் அக்லி திரைப்படம் இப்படிப்பட்ட கதையம்சம் கொண்டதா? சந்தேகத்தை கிளப்பிய பிரபலம்..

வெறித்தனமான டிரைலர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம் தேதி…

2 hours ago

2ஆம் வகுப்பு மாணவியின் பெற்றோருக்கு தனியார் பள்ளி மிரட்டல்.. TC வாங்க மிரட்டி ஒப்பந்தம்!

கோவை தடாகம் சாலையில் உள்ள அவிலா கான்வெண்ட் என்ற தனியார் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரை சரி…

2 hours ago

தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கு… குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு!

தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக இன்று வரை பல்வேறு தரப்பிலும் அதிர்வலைகள் நீடித்து வருகின்றன. 2019ஆம்…

3 hours ago

நான் நடிக்கவே மாட்டேன்னு சொன்னேன், ஆனா அவர்தான் என்னைய?- ஓபனாக போட்டுடைத்த சிங்கம்புலி…

இயக்குனர் டூ காமெடி நடிகர் அஜித்தின் “ரெட்”, சூர்யாவின் “மாயாவி” ஆகிய திரைப்படங்களை இயக்கியவர் சிங்கம்புலி. எனினும் இத்திரைப்படங்களை தொடர்ந்து…

3 hours ago

This website uses cookies.