ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் ஏராளமான அளவில் வீடு புகுந்து திருடுவது, வழிப்பறி,கொள்ளை ஆகியவை உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்ட ஆறு பேரை அனந்தபுரம் மாவட்டம் மடக்கசீரா போலீசார் கைது செய்தனர்.
அனந்தபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஷேக் எலியா (வயது 37), நாகேந்திரா (வயது 37), ஷேக் நிஜாம்(வயது 27), ஷேக் இம்ரான்(வயது 25), பாலாஜி (வயது 22), ராமஞ்சுநேயலு (43) ஆகிய 6 பேரும் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற வழிப்பறி, வீடு புகுந்து திருடுவது, கொள்ளை ஆகியவை உள்ளிட்ட ஏராளமான வழக்குகளில் தொடர்புடையவர்கள் ஆவார்.
ஆறு பேரையும் இன்று காலை கைது செய்த மடக்கசீரா போலீசார் அவர்களிடம் இருந்து சுமார் ஒரு கிலோ எடையுள்ள தங்க ஆபரணங்கள், 2 கிலோ வெள்ளி பொருட்கள், இரண்டு சக்கர வாகனங்கள் மூன்று ஆகியவை உள்ளிட்ட சுமார் 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை கைப்பற்றி பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களில் ஒவ்வொருவர் மீதும் 10 முதல் 32 வழக்குகள் வரை பல்வேறு காவல் நிலையங்களில் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் குற்றவாளிகள் அனைவரும் ஏற்கனவே சிறை சென்று வீடு திரும்பியவர்கள் என்பது கவனிக்கத்தக்க விஷயம்.
தமிழகத்திற்கு அமித்ஷா வந்துள்ள நிலையில் அதிமுக - பாஜக கூட்டணியை உறுதி செய்துள்ளார். மேலும் தமிழக பாஜக தலைவராக உள்ள…
சூர்யா 45 ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா தற்போது தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் சூர்யாவுக்கு…
பேரழகி திரிஷா… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில்…
தமிழகத்தில் அடுத்த பாஜக தலைவர் யார் என்ற விவகாரம் சூடுபிடித்த நிலையில் இன்றுடன் அதற்கு ஓர் முற்றுப்புள்ளி வைத்தாவிட்டது. நேற்று…
இவ்வளவு இழுபறியா? 2020 ஆம் ஆண்டே வெற்றிமாறன் சூர்யாவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் அத்திரைப்படம் “வாடிவாசல்”…
புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட ஓட்ட குளத்தை சுமார் ஒன்பது புள்ளி அஞ்சு கோடி ரூபாய் மதிப்பில் தூர் வாரும் பணி…
This website uses cookies.