ஆந்திரா : கடலில் குளிக்க சென்ற பொறியல் கல்லூரி மாணவர்கள் 15 பேரில் ஏழு பேர் மாயம். ஒருவர் உயிருடனும் மற்றொருவர் பிணமாகவும் கடலோ காவல்படையினர் மீட்டனர்.
ஆந்திர மாநிலம் அனக்கா பள்ளி மாவட்டம் புடிமடக்க கடற்கரைக்கு நேற்று அனக்கா பள்ளி பகுதியைச் சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவர்கள் 15 பேர் குளிக்க சென்றனர். அப்போது அலையின் வேகம் அதிகமாக இருந்ததால் அவர்களில் ஏழு பேரை அலை இழுத்து சென்றது.
உடனடியாக மற்ற 8 மாணவர்கள் அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் தேஜா என்ற மாணவர் உயிருடன் மீட்ட நிலையில் அவரை உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் ஆறு பேர் காணாத நிலையில் அவர்களை தேடும் பணி மும்பரமாக நடைபெற்றது. தொடர்ந்து காவல்துறையினர் மற்றும் கடலோர காவல் படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கடலோர காவல் படையினர் தேடுதல் வேட்டை நடத்தி வந்த வேலையில் பவன் என்ற மாணவரின் உடல் கரை ஒதுங்கியது.
மேலும் ஐந்து பேரைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஹெலிகாப்டர் மூலம் தேடும் பணியை கடலோர காவல்படை தீவிரப்படுத்தியுள்ளது.
பள்ளிகளில் ஆங்கிலமும் குறைவாக கற்றுக் கொடுக்க வேண்டும் என திமுக கொள்கை வைத்துள்ளதாக பாஜகவின் ராம சீனிவாசன் கூறியுள்ளார். திருச்சி:…
பாஜகவின் கலை, கலாசார பிரிவின் மாநிலச் செயலாளராக இருந்த ரஞ்சனா நாச்சியார், கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பதவிகளில் இருந்து…
சென்னையில், சீமானின் வீடு மீது பெட்ரோல் குண்டு வீசத் திட்டமிட்டதாக தபெதிகவினர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை: கடந்த…
2 வருடமாக நடிகை ராஷி கண்ணாவுடன் பழகி வருவதாகவும், அவர் சத்தியம் செய்து கொடுத்ததை பிரபல நடிகராக ஓபன் கூறியுள்ளார்.…
சென்னையில், இன்று (பிப்.25) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 20 ரூபாய் உயர்ந்து 8 ஆயிரத்து 75 ரூபாய்க்கு…
This website uses cookies.