8 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு 2 வாரம் சிறை தண்டனை விதித்து ஆந்திர உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவினை பிறப்பித்துள்ளது.
ஆந்திராவில் அனைத்து கிராமங்களிலும் கிராம செயலகம் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு பொதுசேவைகள் நடைபெற்று வருகிறது. இந்த செயலகங்கள் அந்தந்த கிராமங்களில் செயல்பட்டு வரும் அரசு பள்ளி வளாகங்களிலேயே செயல்பட்டு வருகின்றன. இதனை எதிர்த்து சிலர் அம்மாநில உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இதனை விசாரித்த நீதிபதிகள், அரசு பள்ளி வளாகங்களில் கிராம செயலகங்கள் செயல்படக் கூடாது என்றும், மாவட்ட உயர் அதிகாரிகள் தலையிட்டு உடனடியாக நிறுத்தவேண்டும் என்று உத்தரவிட்டது. இந்த உத்தரவை மதிக்காமல் செயல்பட்டதாக 8 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு 2 வாரம் சிறை தண்டனை விதித்து உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்தது.
இதையடுத்து அதிகாரிகள் தவறுக்காக மன்னிப்பு கேட்டனர். அதிகாரிகளின் மன்னிப்பு கேட்டதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், சிறை தண்டனையில் இருந்து விலக்கு அளித்தது ஒரு வருடத்திற்கு பிற்படுத்தப்பட்டோர் நல விடுதியில் மாதம் ஒருமுறை பணியாற்றி சொந்த செலவில் உணவளிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
புதுச்சேரி கருவடிக்குப்பம் கிராமத்தை சேர்ந்த 40 வயதான உமாசங்கர் புதுச்சேரி மாலிந இளைஞரணித் துணைத் தலைவராக உள்ளார். கடநத் ஒரு…
மூக்குத்தி அம்மன் 2 “கேங்கர்ஸ்” திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது சுந்தர் சி “மூக்குத்தி அம்மன் 2” திரைப்படத்தை இயக்கி…
பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர் பஃவ்சியா பானு, (39). இவர், உறவினரான புதுச்சேரி, லாஸ்பேட்டையை சேர்ந்த ஹனிப்கான் (43) என்பவரை, கடந்த…
கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் வேலூர் தொகுதியில் வருமான வரித்துறை நடத்திய சோதனையில் திமுக வேட்பாளர் கதிர்ஆனந்த் சார்பாக…
நடிகர் ஆர்யா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் ஒரு நாயகன். கதைக்காக உடல்களை வருத்தி நடித்து பெயர்…
இழப்பீடு கேட்டு நோட்டீஸ் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படத்தில் பல காட்சிகளில் தமிழ்…
This website uses cookies.