சரக்கு வாகனம் மீது லாரி மோதி கோர விபத்து : துக்க நிகழ்ச்சிக்கு சென்று திரும்பிய 9 பேர் உயிரிழந்த சோகம்.. பிரதமர் மோடி இரங்கல்!!

தெலங்கானா : இறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்க சென்று திரும்பிய டாடா ஏஸ் வாகனம் மீது நேருக்கு நேர் லாரி மோதியதில் 9 பேர் உயிரிழந்தனர்.

தெலுங்கானா மாநிலம் காமா ரெட்டி மாவட்டம் பிட்லம் மண்டலம் சில்லர்க்கி கிராமத்தைச் சேர்ந்த 22 பேர் டாடா ஏஸ் வாகனத்தில் காமரெட்டி பகுதியில் நடைபெற்ற இறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்று ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர்.

இவர்களுடைய வாகனம் எல்லாரெட்டி மண்டலம் ஹஸன்பள்ளி கேட் வளைவு அருகே வந்து கொண்டிருந்தபோது எல்லாரெட்டி பகுதியிலிருந்து நெல் மூட்டைகளுடன் வந்த லாரி நேருக்கு நேர் மோதியது.

இதில் டாடா ஏஸ் வாகனத்தில் பயணம் செய்த ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 7 பேர் தீவிர காயமடைந்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக பன்சுவாடா மருத்துவமனை மற்றும் காமாரெட்டி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

காயம் அடைந்தவர்களில் 7 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஒரே கிராமத்தைச் சேர்ந்த ஐந்து பேர் விபத்தில் பலியான சம்பவம் கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தெலுங்கானா விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் மற்றும் காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

மக்களவைத் தொகுதி குறைப்பா? ஸ்டாலின் அழைப்பு.. அதிமுக, பாஜகவின் நிலைப்பாடு என்ன?

தொகுதி மறுசீரமைப்பு நடந்தால், தமிழகத்தில் 31 தொகுதிகள்தான் இருக்கும். 8 தொகுதிகளை இழக்க வேண்டியச் சூழல் ஏற்படும் என முதலமைச்சர்…

1 hour ago

கணவரை இழந்த நடிகைகளுடன் டேட்டிங் : பிரபலத்தின் அந்தரங்க லீலைகள் அம்பலம்!

கணவரை இழந்த நடிகைகளை குறி வைத்து அவர்களுடன் சில பல நாட்கள் பழகி கழட்டி விடுவதே இந்த பிரபல நடிகரின்…

2 hours ago

இந்தி வாலாக்களாக மாற்ற முயற்சி.. திருமாவளவன் கடும் விமர்சனம்!

இந்தியாவை ஒரே நாடு ஒரே மொழி என்ற அடிப்படையில் மாற்ற வேண்டும் எனும் முயற்சி நீண்ட காலமாக நடந்து வருகிறது…

2 hours ago

திமுக ‘இந்த’ தோற்றத்தை உருவாக்குகிறது.. தமிழிசை கடும் சாடல்!

பாஜக, தமிழுக்கு எதிராக செயல்படுவது போல் தோற்றம் உருவாக்கப்படுகிறது என பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார். கோயம்புத்தூர்:…

3 hours ago

ஆசையை காட்டி மோசம் செய்த லைகா நிறுவனம்.. விஜய் மகனுக்கு கல்தா!

லைகா நிறுவனம் தமிழ் சினிமாவை கத்தி படம் மூலம் தயாரிக்க ஆரம்பித்தது. அந்த படம் லைகா நிறுவனத்திற்கு நல்ல லாபத்தை…

3 hours ago

’தமிழக மக்களை முட்டாளாக வளர்க்க வேண்டும் என..’ பாஜக ராம சீனிவாசன் பரபரப்பு பேச்சு!

பள்ளிகளில் ஆங்கிலமும் குறைவாக கற்றுக் கொடுக்க வேண்டும் என திமுக கொள்கை வைத்துள்ளதாக பாஜகவின் ராம சீனிவாசன் கூறியுள்ளார். திருச்சி:…

3 hours ago

This website uses cookies.